No video

2021 EASAVI NEW YEAR | ZIKR | SALAWATH MAJLIS

  Рет қаралды 7,351

MUHIEDDEEN TV

MUHIEDDEEN TV

Күн бұрын

💢இஸ்லாமிய பாதை(பார்வை)யில் புது வருடம் 💢
பொதுவாக ஈஸவி நாட்காட்டியைத்தான் நமது அன்றாட நடைமுறைகளில் பின் தொடர்கிறோம். பிறப்பு முதல் இறப்பு வரை, இன்னும் எந்த நிகழ்ச்சியாக வைபவங்களாக இருக்கட்டும் ஏன் வயதையும் கூட இந்த ஈஸவி வருடக்கணக்கில் தான் குறிப்பிடும் வழமை உள்ளது என்பதை மறுக்க முடியாது ஆனால்....
💥புது வருட ஆரம்ப நேரத்தில் வெடி ஆராவாரங்களோடு, தேவனின் குமாரன் என்று நமது ஈஸா நபி அவர்களைப் பற்றி ஏக இறைவனின் பரிசுத்த உள்ளமைக்கு இணை கற்பிக்கும் விதமாகவும், இன்னொரு புறம் ஜியானிஸ கும்பல்கள் அல்லாஹ் தஆலாவின் அற்புத சக்தியின் வாயிலாக மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களில் நின்றும் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் வெளியானதை கொச்சை படுத்தி குதூகலித்தும் கொண்டிருப்பார்கள்💥
⚡இது இறைவனுக்கு கோபமூட்டும் செயலல்லவா? புனிதமானவர் என்று திருமறை புகழும் ஒருவரை இழுக்காறு படுத்துவது நீசத்தனமான விஷயம் இல்லையா? ⚡
நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இறைவனைப் பற்றியும் ஈஸாஅலைஹிஸ்ஸலாம் பற்றியும் மரியம் அலைஹிஸ்ஸலாம் பற்றியும் குர்ஆனில் கூறப்படும் இந்த சொற்களை நினைவில் கொண்டு நமது மற்ற சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துவதாகும்🌹
19:15 وَ سَلٰمٌ عَلَیۡہِ یَوۡمَ وُلِدَ وَ یَوۡمَ یَمُوۡتُ وَ یَوۡمَ یُبۡعَثُ حَیًّا
“ஆகவே, அவர்கள் பிறந்த நாளிலும், அவர்கள் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர்கள் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர்கள் மீது ஸலாம் நிலைத்திருக்கும்” என்று அல்லாஹ் தஆலா ஈஸா நபி அவர்கள் பற்றி கூறுகிறான்.
Peace on him the day he was born, and the day he dieth and the day he shall be raised alive!
19:33 وَ السَّلٰمُ عَلَیَّ یَوۡمَ وُلِدۡتُّ وَ یَوۡمَ اَمُوۡتُ وَ یَوۡمَ اُبۡعَثُ حَیًّا ﴿۳۳﴾
இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும் என்று பிறந்த மழலையாக இருந்த ஈஸா நபி அவர்கள் கூறினார்கள்
Peace on me the day I was born, and the day I die, and the day I shall be raised alive!
ஈஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடய நல்லடியாரென்றும்(19:30),
அவர்கள் அவனுடைய ரஸூலென்றும்(4:171),
மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்பால் போடப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தையென்றும் (3:45 & 4:171),
அவர்கள் அல்லாஹ்வினால் (ஊதப்பெற்ற) ரூஹென்றும் (4:171) ,
மேலும் அல்லாஹ் தஆலா தனக்கு துணையாக ஒருமகவையோ அல்லது எதையும் எடுத்துக்கொள்ளவில்லை, அவன் இனைவைப்பதைவிட்டும், மகா பரிசுத்தமானவன் (19:35) என்றும், ஸித்தி மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்ணித் தாயாகவே ஈஸா அலைஹிஸ்ஸலாம்அவர்களை ஈன்றார்கள் (3:47 & 19:20) என்று அருள்மறையாம் திருக்குர்ஆன் முழங்குகிறது.
لاَ اِله َ اِلَّا الله
عِيْسى ابْنُ مَرْيَمَ عَبْدُالله (19:30)
لاَ اِله َ اِلَّا الله
عِيْسى ابْنُ مَرْيَمَ نَبِيُّ الله
لاَ اِله َ اِلَّا الله
عِيْسى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ الله(4:171),
لاَ اِله َ اِلَّا الله
عِيْسى ابْنُ مَرْيَمَ كَلِمُةُ الله (3:45),
لاَ اِله َ اِلَّا الله
عِيْسى ابْنُ مَرْيَمَ رُوْحُ الله (4:171)
لاَ اِله َ اِلَّا الله مُحَمَّدٌ حَبِيْبُ الله عَلَيْهِمْ صَلاَةُ الله مَعَ سَلاَمِ الله عَدَدَ مَافِي عِلْمِ الله مَادَامَ مُلْكِ الله
🌹ஈஸா அலைஹிஸ்ஸலாம் தொடர்புடைய ஹதீஸ்களில் வரக்கூடிய இன்றியமையாத ஓதல்களை புது வருட பிறப்பு காலங்களில் ஓதி உண்மையை உரைத்தவர்களக ஆகிவிடுவோம்🌹
💢குழந்தைக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டியது.💢
ஒரு குழந்தை பேச ஆரம்பித்தவுடன் முதன் முதலாக அதற்கு லாயிலாஹ இல்லல்லாஹ் கலிமாவை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு பிறகு பின்வரும் திருக்குர்ஆனின் ஆயத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
وَقُلِ الْحَمْدُ لِلّه الَّذِى لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهُ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهُ وَلِىٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيْرًا.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் எத்தகையவன் என்றால்,அவன் எந்தக் குழந்தையையும் (தனக்கு) ஆக்கிக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு எந்தக் கூட்டாளியும் கிடையாது. இயலாமையின் காரணத்தால் அவனுக்கு உதவியாளன் எவரும் கிடையாது. அவனை அதிகமதிகம் பெருமைப்படுத்தி தக்பீர் என்று (நபியே! நீங்கள்) கூறுங்கள்!
அப்துல் முத்தலிபுடைய (அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய) கோத்திரத்தாரிலுள்ள எந்தக் குழந்தையாவது பேச ஆரம்பிக்கும் போது முதன் முதலில் மேற்கூறப்பட்ட இந்த ஆயத்தைக் கற்றுக் கொடுப்பார்கள், என்று ஒரு ஹதீதில் அருளப்பட்டுள்ளது.
💢எவரேனும் ஒருவர் பின்வரும் கலிமாவைக் கூறினால்,அல்லாஹுத்தஆலா அவரை அவருடைய குறைந்த அமலின் மீதும் சொர்க்கத்தில் நுழைய வைத்திடுவான். அல்லது சொர்க்கத்துடைய எட்டு வாசல்களில் அவர் விரும்பிய வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைய வைத்திடுவான் என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது💢
اَشْهَدُ اَنْ لَّآ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ
وَ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ وَ اَنَّ عِيْسٰي عَبْدُ الله وَرَسُوْلُهُ وَابْنُ أَمَتِهِ وَكَلِمَتُهُ اَلْقَا هَا اِلٰي مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ وَالْجَنَّةَ حَقٌّ وَالنَّارَ حَقٌّ ؛
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த நாயனுமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதருமாக இருக்கிறார்கள் என்றும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாராகவும் அவன் தூதராகவும் அவனின் அடியானின் மகனாகவும் மர்யமின்பால் அவன் போட்ட திருவார்த்தையாகவும் அவனுடைய பரிசுத்த ஆவியாகவும் இருக்கிறார்கள் என்றும் சொர்க்கமும் உண்மையானது, நரகமும் உண்மையானது என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.

Пікірлер: 5
@hameedahsan8942
@hameedahsan8942 3 жыл бұрын
Maasha Allah nice to see our sheikh Nayagham
@ekraamahmadh1294
@ekraamahmadh1294 3 жыл бұрын
Maa Shaa Allaah ❤️❤️💐💐💐🌹🌹🤲🤲
@hameedahsan8942
@hameedahsan8942 3 жыл бұрын
Blessed majlis
@niamathabdulcader1686
@niamathabdulcader1686 3 жыл бұрын
Masha Allah 🤩 😍❤️❤️
@fayrojahaja2436
@fayrojahaja2436 3 жыл бұрын
Assalamu alaikum 🥰🤩🤩🤩🥰
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 14 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 18 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 13 МЛН
SELAWAT 1000 KALI  اَللَّهُمَّ صَلِّ َعلى سيدنا مُحَمَّدٍ
1:46:57
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 14 МЛН