கவிதை - மனிதனாக பிறந்த அனைவரும் அள்ளி அள்ளி பருகவெண்டிய அமிர்தமடா.
Пікірлер: 27
@user-bv7ww3vy3x2 ай бұрын
கவிதையை கிரகிக்க முடியாமலும் ரசிக்க முடியாமலும் பின்னனி இசை கெடுக்கிறது..
@jeyakumarj4619 Жыл бұрын
வைரமுத்து இந்த வைரத்தின் பேனா மட்டும் எப்போதும் அழகான வரிகளை பிரசவிக்கும் .
@jeyakala1464 Жыл бұрын
உங்கள் கவிதைகளில் குளிக்கக் கூட முடியுமா? குளித்தேன் குளிக்கும் போது சூட்டில் வெதுவெதுத்தேன் பின்னர் குளிரில் வெடவெடுத்தேன்.வைரக்கவியே!
@suganyaabraham7353Ай бұрын
காதலித்துப் பார் காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்.... உனக்கும் கவிதை வரும்... கையெழுத்து அழகாகும்..... தபால்காரன் தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்... காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்... இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்... காதலித்துப் பார்! சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே... அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே... அதற்காகவேனும்... ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்!
@satamilsongs82219 ай бұрын
இந்த கவிதைகளை கேக்கும் போது மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி
@annaparavai00332 ай бұрын
தேன் கவிதைக்கு சொந்தக்காரன் - எம் தேனிக் காரன் என்பதில் எனக்குத் தனிக் கர்வம் ...... இதுவரை பெற்றக் கவிக் குழந்தைகளில் ... வைரமாய் ஜொலிக்கின்றான் வைர முத்து என்றெண்ணி .... தமிழ் தாய் பூரித்துப் போகின்றாள் ...... தங்கள் தமிழ் கேட்டு ...... இனி வரும் கவி எவனும் தங்கள் கவிதைகளின் நுனி அளவு பாதிப்பு இன்றி .... எழுத முடியாது தமிழோடு இயஙக முடியாது இதுவே தங்கள் வெற்றி ....... - தங்கையா
@dhanraj7216 күн бұрын
உண்மை....!
@user-rj6qb5qm5y2 жыл бұрын
கவியரசு வைரமுத்து அவர்களின் மனதில் கருக்கொண்டு பிரசவிக்கும் எழுத்துக்குழவிக்கு நான் அடிமை
@kavidhai65262 жыл бұрын
நேரமிருந்தால் என் கவிதைக்கு ஆதரவு தாருங்ஙள் தோழர்... kzfaq.info/get/bejne/ea2BpcJnstexp6M.html
@bbkkum48512 жыл бұрын
super
@kavidhai65262 жыл бұрын
அற்புதமான உங்களின் குரல்வளம் கவிதை வரிகளில் சற்று தேன் தெளித்து மேலும் இனிக்கச்செய்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி...
@mathieman1787 Жыл бұрын
அற்புதமான கவிக்கு அழகாய் பின்னூட்டம் 👌
@dhanraj7216 күн бұрын
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! கண்கள் பார்வை அடையும்...! காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....! இதயம் துடிக்க துவங்கும்...! மனித பிணங்கள் எழுந்து நடக்கும்....! சமூக அவலம் நெருப்பில் சாகும்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! பாமரன் கவிஞன் ஆவான்....! எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....! அறியாமை தீ அணைந்து போகும்...! அறிவாளியாகி அனைத்தும் பெறுவான்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! கடலில் எறிந்தால் மீனாக நீந்துவான்...! வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....! மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! புவி ஈர்ப்பு.... சக்தி இழக்கும்...! எழ முடியாதவன் பறந்து போவான்....! நட்சத்திரங்களை தொட்டு வருவான்...! தூரம் - நேரமெல்லாம் காணாமல் போகும்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
@sangeethap9436 Жыл бұрын
கோடி நன்றிகள் உங்களுக்கு... ✨✨✨
@lyricwriterkaviyarasan1568 Жыл бұрын
உங்கள் குரலில் சாதாரண வார்த்தைகளும் சங்கீதம் பாடுகிறது.. வாழ்த்துக்கள் தோழி..
தமிழ் /தென் தமிழ்/தேன் தமிழ்/என்ற ஆக /கவிதை மழையில்!!!
@அஸ்வினிபாண்டி8 күн бұрын
சொன்ன நம்ப மாட்டீங்க இதுல அவர் சொன்ன மாதிரித்த என் வாழ்கையும் இருக்கு
@SaamySST2 ай бұрын
Super🎉
@thenikaran28976 ай бұрын
நன்றி்..
@talk2Gemini4 ай бұрын
yetho anubavichu eluthinathu polaaa,,,,,, unarchiyoda uyirottamanathu ka vithai,...!
@smartsenthil61878 ай бұрын
❤❤
@user-ko5wr8he2e9 ай бұрын
Ur voice n present super mam.
@jjtailor95236 ай бұрын
கவிதையை ரசிக்க முடியாத படி music sound அதிகமாகி எரிச்சல் ஆகுது
@user-hw2pj6dz3t Жыл бұрын
Vaira. Varigal
@panneerselvamramaiyah66958 ай бұрын
அன்புத் தோழியே உங்களின் குரலே ஓர் கவிதைதான். வைரமுத்து அவர்களின் கவிதைத் தொகுப்பு மிகவும் இனிமை. சிறு வேண்டுகோள் Background இசையின் அளவு சற்றே குறைவாக இருந்தால் வைரமுத்து அவர்களின் வரிகளை நன்கு ரசிக்கலாம். நன்றி.