Рет қаралды 191,729
அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்
Arunagirinaadhar (Aruna-giri-naadhar, Tamil: அருணகிரிநாதர், Aruṇakirinātar, Tamil: [aɾuɳaɡɯɾɯn̪aːdar]) was a Tamil Hindu saint-poet who lived during the 15th century in Tamil Nadu, India. In his treatise A History of Indian Literature (1974), Czech Indologist Kamil Zvelebil places Arunagirinathar's period between circa 1370 CE and circa 1450 CE. He was the creator of Thiruppugazh (Tamil: திருப்புகழ், Tiruppukaḻ, [tiɾupːɯɡaɻ], meaning "Holy Praise" or "Divine Glory"), a book of poems in Tamil in praise of lord Murugan.
அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பிரகாரத்தில், அருணகிரிநாதரின் திருமேனி எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது; அதன் முன்பு, சிறு பீடமும், அருகே விநாயகர் சிலை ஒன்றும் உள்ளன)