Рет қаралды 13,518
அருள்மிகு நட்டாற்றீஸ்வரர்
Location:shorturl.at/iDKMV
அருள்மிகு நட்டாற்றீஸ்வரர்
கரைபுரண்டோடும் காவிரி. அதன் நடுவே, பிரணவ உருவாய் திகழும் சிவாலயம். இங்ஙனம் ஆற்றின் நடுவில் கோயில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்றும் திருப் பெயர்களை ஏற்றுத் திகழ்கிறார் சிவபிரான்!
இங்கு வந்து இவரை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி கல்யாணம் நடந்தேறும், தம்பதிகளுக்கு இடை யேயான பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்று பக்தர்களின் மனதில் அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்திருக்கும் சிவக்ஷேத்திரம்!
இப்படியோர் அற்புதத் தலம் எங்கிருக்கிறது என்கிறீர்களா?
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள ஊர் காங்கயம்பாளையம். இங்குதான் காவிரியின் நடுவில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு நட்டாற்றீஸ்வரர். கயிலையில் நிகழ்ந்த சிவ-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை தென்புலம் அனுப்பினார் சிவனார். அத்துடன், வேறு சில அரும் பணிகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அப்பணிகள் ஐந்து என்றும், அவற்றில் இரண்டாவது நட்டாற்றீஸ்வரர் திருத்தலத்தை உருவாக்குவது என்றும் தெரிவிக்கின்றன புராணங்கள்.
#kovil#kovil #sivan#lord #temple#god #சிவன் #சிவன்மலை #சிவன்பாடல்கள் #சிவன்பக்தி #தமிழ் #tamil #tamilnews #tamilnadu #newplacevlog #traveling #travelvlog