Рет қаралды 41,995
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
❤️Sharechat: b.sharechat.com/gtAjGs32vgb
❤ instagram: / 1side_lover_mani
****************************************************
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗ ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣ ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣ ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
is FreeforYou🤗:
/ nellaitamilstudio
-----------------------------------------------------------------------------------
DISCLAIMER:This Channel Does Not Promotes Any illegal Content.All Contents Provided By This Channel is Meant For EDUCATIONAL Purpose Only.
----------------------------------------------------------------------------------- அய்யாவழி கல்யாண முறை
(மவுனி கல்யாண வாழ்த்து)
அய்யாதுணை
அய்யா வைகுண்டப் பரம் பொருளின் பாதம் பணிந்து
கல்யாண வாழ்த்து
மவுனி கல்யாணம் மணவோலை வாழ்த்தலுக்கு
சிவனே குருவான திருமேனி முன்னடவாய்
அய்யா நாரணரும் அம்மை உமையவளும்
தெய்வார் தமக்கிரங்கி திருமுகூர்த்தம் செய்யவென்று
அண்டரோடு தேவர் அறியவே ஓலையிட்டுக்
கொண்டாடி இன்பம் குளிர்ந்த நதி பாலது போல்
சீரான மக்களென்னும் தெய்வச் சான்றோர்களுக்கு
நாராயணர் தானும் நல்ல முகூர்த்தமிட்டு
கன்னி கல்யாணம் கைப்பிடிக்க வேணும் என்று
மன்னனுக்கு ஏற்ற மதிமந்திரியும் தானறிய
இவன் இவளாமென்று இனங்குறித்து
பெண்பேசி
அவனி அறிய அலங்காரம் இட்டனரே.
ஜீவத்மா பரமாத்மா ஐக்கியமே கல்யாணம்.
ஆண் பரமாத்மா, பெண் ஜீவாத்மா இந்த பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியமாகி மௌனத்தில்ஆழ்ந்து ஆனந்தத்திப்பதால் மௌனி கல்யாணம்.
மணவாழ்வைத் துவங்கும் மணமக்களை வாழ்த்த சிவனே குருவான திருமேனியாகிய அய்யாவைகுண்டர் மன்னிலை வகிப்பாராக.
அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகவும் தாயாகவும் விளங்குகின்ற அய்யா நாராயணரும்
அம்மை உமையவளும் தெய்வசான்றோர்களுக்காக திருமனதிரங்கி திருமுகூர்த்தம்
செய்யவென்று
உலகமக்களோடு தேவர்களும் அறிய ஓலையிட்டனர்.
நல்ல எண்ணம் நல்லசொல் நல்லசெயல்கள் ஆகிய தர்ம குணங்களையுடைய சீரான மக்களென்னும் தெய்வசான்றோர்களுக்கு மணம் பேசி முடித்து நாராயணர் நல்ல முகூர்த்த மிட்டர்.
நல்ல குணவதியும் தெய்வ சிந்தனையுடைய மனமாசற்ற தூய பருவத்தினளான மணமகள் , மனமகிழ்ச்சியுடன் என்றும் இன்பமாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் . அவள் சம்மதம் பெற்று மணகளுக்கும் மணமகனுக்கும் தெளிவாக அறிவித்து எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் அவரகளின் முழு மன ஒப்புதலுடன் இவனுக்கு இவள் என்று மனம் பேசி முடித்து உலகறிய அலங்காரம் செய்தனர்.
கட்டுடைய பந்தலுக்கு கால் ஒன்பது நாட்டிபட்டுமேற் கட்டியெனப் பந்தலிலே தான் வகுத்து
சில்விளக்கேற்றி சிறந்தபரி பூரணமாய்
நவக் கிரகங்களும் மணமக்களுக்கு நல்லருள் புரிய வேண்டி, ஒன்பது கால்கள் நாட்டி திருமணபந்தல் கட்டி, பட்டால் மேற்கட்டியும் கட்டி, அலங்கார விளக்குகளால் அப்பந்தலை அலங்கரித்தனர்.
நல்சுதிகள் பாட நடசாலையும் வகுத்து
சங்கீதம் பாட சகல கலையும் தொனிக்க
மங்கள ஓசை ஏழு வாத்தாயமும் முழங்க
கிம்புருடாதி முதல்கின்னரி வாசித்து நிற்க
தம்புரு வீணை சுரமண்டலம் முழங்க
கொலு கொலு வெனத் தெய்வார் குரவை முழங்கி நிற்க
மலமலென ஆவு நெய்யில் வாடா விளக்கெரிய
அழகு கொலுவிருக்க ஆலத்தி ஏந்தி நிற்க
ஒழுகு காளாஞ்சி ஒருமித்து வந்து நிற்க
சக்திமுனி பத்திரத்தால் சாயூச்சிய மாய் இருக்க
பந்தலுக்குள் இசை வல்லுனர்கள் அமர்ந்து இசை பாடுவதற்கான மேடை அமைத்தனர்
இசைவல்லுனர்கள் இசைபாட, தெய்வ சிந்தனையுடைய பெண்கள் குரவை ஒலி எழுப்ப, ஆலத்தி, கைவிளக்கு, காளாஞ்சி ஏந்திய பெண்கள் வரிசையாக வந்து நிற்க,
மலமலென ஆவு நெய்யில் வாடா விளக்கெரிய, சக்திமுனி என்னும் மகாவிஷ்ணுவும் பத்திரத்தாள் என்னும் அன்னை பத்திரமாகாளியும் சாயுச்சிய நிலையில் எழுந்தருளி ஒருமித்து அருள் வழங்க.
இத்தனை பண்பும் இதமுடனே தெய்வார்க்கு
பந்தலுக்குள்ளே பரிந்திருந்து எல்லோரும்
கந்தனுக்கு நற்சரடு கற்பிக்க வேண்டுமென்று
தாயாருடன் பிறந்த தன்மாமனை வருத்தி
காயாம்பு மேனியனார் கட்டிலொன்று தான் கொடுத்து
அதிலே இருமெனவும் அருகில் அவரிருக்க
சதுரான வார்த்தையொன்று தன் செவியி லுமூதி
கோப்புக்கு உண்டான கூறி முறைமையும் தான் கொடுத்து
இத்தனை சிறப்புடன் பந்தலுக்குள் எல்லோரும் அமர்ந்திருந்து
கந்தனுக்கு ( இந்திரியங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வீரத்திருமகனான மணமகனுக்கு திருமணம்செய்விக்க வேண்டி, தாயாருடன் பிறந்த தாய்மாமனை தக்க மரியாதையுடன் அழைத்து, மணமேடையின் அருகில் ஒரு ஆசனத்தில் அமரச்செய்து அவர் நல்லாசியுடன், சிவசிவ என்னும். ஞானம் வழங்கும் சதுரான வார்த்தையை மாப்பிள்ளையின் செவியில் ரகசியமாக சொல்ல அவருக்குண்டான குரு முறைமைகளை தகுந்த மரியாதையுடன் கொடுப்பர்.
மாப்பிள்ளையும் பெண்ணையும் வருவித்துத் துவாரகை நேர்
பரம ரகசியமாய் பலகைதனி லேயிருத்தி
அரகரா வென்று அம்மைஉமை யைநினைந்து
சிவசிவா என்று திருச்சரடு சேர்த்தனரே
தவசி முனியுடனே தானெழுந்து வந்து நின்று
சீதனங்களான சில வரிசை தான் கொடுத்து
மாதவனை நினைத்து வாழ்த்தினார் பாலர்தனை
மாப்பிள்ளையையும் பெண்ணையும் மணமேடையில் தெற்கு முகமாக அமரச்செய்து , அரகரா என்று அம்மை உமையை நினைத்து திருமாங்கிலியத்தை எடுத்து மணமகன் கையில் கொடுக்க மணமகன் அதைவாங்கி சிவசிவ என்று மணமகள் கழுத்தில் அணிவிக்க
இறை சிந்தனையுடன் பெரியோர்களெல்லாம் சீர்வரிசைகள் கொடுத்து அய்யாவை நினைத்து ஆசிகள் வழங்கினர்.
அய்யாஉண்டு
_______________
For more updates: Subscribe us: / nellaitamilstudio
/ nellaitipstamil thanks For Viwes
#அய்யாவைகுண்டர் #கல்யானவாழ்த்து #Ayya #Ayyavaikundar #Ayyavazhi #Ayyavali #Ayyavalimarriage #அய்யாவழி #GodSong #Ayyasong #ayyavaikunder Song