சங்கீதகலாபூஷணம் பொன் சுந்தரலிங்கம்அவர்கள் பாடிய திருப்பள்ளியெழுச்சி "புத்தூர்சிவன் கோவில்"

  Рет қаралды 344,834

புத்தூர் சிவன் tv

புத்தூர் சிவன் tv

6 жыл бұрын

புத்தூர் சிவன் ஆலய வருடாந்த உற்சவம்
ஈழமணி திருநாட்டிலே வடபால் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக்குடா நாட்டிலே நடுநாயகமாக அமைந்திருக்கும் புத்தூர் பதியினிலே மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை தன்னகத்தே கொண்டு வேண்டுவாருக்கு வேண்டுவனவெல்லாம் அள்ளி வழங்கிக் கொண்டிக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சுவாமி சமேத ஸ்ரீ விசுவநாத சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது.இது புத்தூர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும்
நன்றி தினக்குரல்
இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறுகின்றது.
பல்லவரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இந்துசமய மறுமலர்ச்சியை தொடர்ந்து சமண சமயம் போன்றன வீழ்ச்சியுற்றதாகவும் நாயன்மார்களின் தேவார திருவாசகங்கள் மற்றும் ஆழ்வார்களின் திவ்விய பிரபந்தங்கள் தோற்றம் பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.இந்தக் காலத்தில் புதிய ஆலயங்கள் தோற்றம் பெற்றதாகவும் பழைய ஆலயங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.தக்ஷ்ண கைலாய புராணத்திலே கூறப்படுகின்ற கோவில் இந்தக் கோவிலையும் அதில் குறிப்பிடப்படுகின்ற நீரூற்று நிலாவரை வாவியினையும் குறிக்கின்றது.இந்தக் கோவிலுக்கும் வாவிக்கும் இடையே தூரம் ஏறக்குறைய 1/2 மைல் ஆகும்.வரலாற்று காலம் தொடக்கம் இந்த வாவியில்தான் தீர்த்தோற்சவம் இடம்பெற்றாலும் காலவோட்டத்தில் இது மருவி ஆலயத்தோடு அமைந்துள்ள திருக்குளத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெற்று வருகின்றது.
போர்த்துக்கேயர் மற்றும் அவர்களை தொடர்ந்து ஒல்லாந்தரும் இலங்கைக்கு வருகை தந்ததும் அதனைத் தொடர்ந்து இந்து சமயத்தில் ஏற்பட்ட தாக்கங்களும் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் இந்த ஆலயமும் அழிக்கப்பட்டது.ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் நிலவிய சாதாரண சூழல் அழிவடைந்த ஆலயங்களை புனரமைக்கவும் புதிய ஆலயங்கள் அமைக்கவும் உகந்த காலப்பகுதியாக அமைந்தது.
ஏற்கனவே அழிக்கப்பட்ட ஆலய சுற்றுப்புறங்கள் யாவும் புல் நிலமாகவும் பிரப்பம் பற்றை நிறைந்தும் காணப்பட்டது.அந்தப் பகுதியில் கிராம வாசிகள் தமது மாடுகளை மேய்த்து வந்தனர்.அங்கு வேளாண்மை தொழில் செய்த சிதம்பரநாதர் என்பவரும் அங்கு தமது மாடுகளை ஒரு சிறுவனைக் கொண்டு மேய்த்து வந்தார்.ஒரு நாள் மாலைப்பொழுதில் ஒரு கிழவி பொல் ஊன்றிவந்து பிரப்பம் பற்றைக்குள் மறைந்ததை அந்தச் சிறுவன் கண்டு தனது எஜமானரிடம் கூறினான்.பின்னர் சிதம்பரநாதர் அந்தப் பிரப்பம் பற்றையை சென்றுபார்த்து வழிபட்டுவிட்டுச் சென்றார்.அன்றிரவு அவரின் சொப்பனத்தில் தோன்றி"பிரப்பம் பற்றைக்குள் பிலா ஒன்று முளைத்துள்ளது அதில் என்னை ஆதரி' என்று கூறிச் சென்றது.நடந்தவற்றை சிதம்பரநாதர் ஊராரிடம் கூற ஊரவர்கள் சொப்பனத்தில் தோன்றியது எமை ஆளும் உமையாள் என முடிவு செய்து அந்தப் பலாமரம் அமைந்திருந்த பிரப்பம் பற்றை சூழல் துப்புரவு செய்யப்பட்டு கோவில் அமைக்கும் பணிகளை ஆரம்பித்தனர்.அப்போது பழைய கோவிலின் இடிபாடுகளையும் கண்டனர்.அங்கு கோவில் அமைக்கப்பட்டு அது சக்தி தலமாக வழிப்பட்டு வந்தனர்.
கோவில் அமைத்து பூஜைகள் இடம்பெற்று வரும்போது கோவிலை விசாலமாக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. அதாவது முன்பு இடிக்கப்பட்ட கோவில் போன்ற கோயில் அமைக்கப்படவேண்டும் என்ற நோக்கில் இடம்பெற்றன. இந்த வகையில் பலா வடிவில் அம்மன் விக்கிரகமும் அதன் சுற்றுப்புறங்களில் சிவன், விசாலாட்சி அம்மாள்,விநாயகர்,வைரவர் விக்கிரகங்கள் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஆரம்பத்தில் பிலாவடி அம்மன் ஆலயத்தில் அலங்கார உற்சவம் இடம்பெற்று தீர்த்தோற்சவம் நவசைலேஸ்வரம் என்கின்ற நிலாவரை வாவியிலும் இடம்பெற்றது. 1876 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அர்த்த மண்டப, மகா மண்டப, தரிசன மண்டபப் பணிகளை தொடர்ந்து இது சிவாலயமாக மாறலாயிற்று.
தீர்த்தத் திருவிழாவிற்கு நிலாவரைக்குச் செல்வதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக 1896 ஆம் ஆண்டு ஆலயத்துக்கு அருகே திருக்குளம் அமைக்கப்பட்டது. இதில் ஆடிப்பூர தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெறுகிறது. 1903 ஆம் ஆண்டு பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனி கோவில்கள் கட்டப்பட்டன. இவ்வாறு வருடங்களாக இடம்பெற்ற புனருத்தாரண வேலைகளைத் தொடர்ந்து 1911 ஆம் ஆண்டு அப்பர் சுவாமிக்குரிய சித்திரை சதயத்தில் முதலாவது கும்பாபிஷேக திருவிழா இடம்பெற்றது. ஆரம்பம் முதல் புனருத்தாரண, பரிபாலன வேலைகளை பல பெரியார்கள் முன்னின்று நடத்தி வந்தனர். 1911 ஆம் ஆண்டுக்குப் பின் ஆலயத்தினை திரு மழவராயர் என்பவர் பரிபாலனம் செய்ததோடு அதற்குத் தனது சொத்தின் பெரும் பகுதியை தர்மசாதனம் செய்தார். அவரின் பின் அவர் தம் புதல்வன் கந்தையா பரிபாலித்து வந்தார். அவரின் காலத்தில் பஞ்சலிங்கங்கள், சனீஸ்வரன், சந்தான கோபாலர், சூரிய சந்திரன், தெட்சணாமூர்த்தி மற்றும் வெண்கலத்தினால் செய்யப்பட்ட தில்லை நடேசர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகன், சோமஸ்கந்தர், அம்மன், விநாயகர் ஆகியனவும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கந்தையா தனது சொத்துகளின் பெரும் பகுதியை தர்மசாதனம் செய்து வைத்தார்.
இவ்வாறு தமிழகத்தில் இருந்த மூவேந்தர்கள் வளர்த்த சைவத்தினையும் தமிழையும் ஆறுமுக நாவலர் வளர்த்த சைவத்தையும் தமிழையும் பிற்பட்ட சந்ததியினர் அறியும் படியாக மேற்குறிப்பிட்ட தந்தையும் மகனும் செய்தனர். பெரிய புராண கலாசாரம் வாழவும் வளரவும் வழிவகுத்ததுடன் அறனாலயம், அறிவாலயம், அன்னசத்திரம் என்பனவும் அமைக்கப்பட்டன. அறுபத்துமூன்று நாயன்மார்களின் குருபூசையும் சிறப்பாக இடம்பெற வழிசமைக்கப்பட்டது.
இவ்வாறாக காலங்கள் கடந்து சென்று கொண்டிருந்த போது 1939 ஆம் ஆண்டு கார்த்திகை பூர்வபக்க ரேவதியில் இரண்டாவது மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது. பூங்காவன உற்சவம் என்பது இந்த ஆலயத்திற்கே சற்று விசேடமானது. கோவிலில் இருந்து 250 யார் தொலைவில் உள்ள பூந்தோட்டத்தில் உமையாள் சிவனை நோக்கி தவமிருக்கவும் பின் சிவன் வந்து அழைத்துச் செல்வ

Пікірлер: 121
@baluyoutubechannel5315
@baluyoutubechannel5315 2 ай бұрын
அருமையான குரல் வளம் மெய் மறந்து கண்ணீர் பெருக பாடலை ரசித்தேன்
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 6 ай бұрын
ஈழத்து மாணிக்கவாசகர் அவர்கள் குரலில் இறைவனை வழிபட்டு வந்தால் இந்த அனுபவம் புரியாத புதிர்.. உங்கள் குரலுக்கு செவி வழி அடிமைகள்... அன்பே சிவம்
@bhuvaneshpandi1075
@bhuvaneshpandi1075 11 ай бұрын
இப்பாடலை எங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்தின் அருகே உள்ள படியில் அமர்ந்து சிறிது நேரம் தியான நிலையில் இப்பாடலை அங்குள்ள ரேடியோ வில் கேட்டுள்ளேன். மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஓர் ஆசை 🙏🏻ஓம் நமசிவாய🙏🏻
@vijendrankaraiyankadu-qc8wm
@vijendrankaraiyankadu-qc8wm Ай бұрын
அருமை
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 7 ай бұрын
தேடியும் கிடைத்தற்கரிய சொத்து பகிர்ந்தமைக்குபலகோடி நன்றிகள்
@devarajanbala6250
@devarajanbala6250 3 жыл бұрын
இந்த பாடல் செவியுற்றேன் பிறவி பயன் பெற்றேன்
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 3 жыл бұрын
இறைப்பசிக்கு அன்றாட அருசுவை விருந்து . செவிக்கு, ஆத்மாவிற்கு விருந்துமாகி , மருந்துமாகும் இனிய கானம்
@esivaramaniyer
@esivaramaniyer 3 ай бұрын
எம்பெருமானே, வையகம் உம்மைத் தொழுது உய்ய கருணை காட்டுங்கள்.
@navashanthikrishnasamy236
@navashanthikrishnasamy236 2 жыл бұрын
திருசிந்தூர்!-திருச்செந்தூர் திருச்சீரலைவாய் -!- மன்னார் வளைகுடா~~~~{சிந்துர(மின்)மேவு
@vijayabhargavinagarajan2580
@vijayabhargavinagarajan2580 2 жыл бұрын
சிவாலயம் சென்ற நிம்மதி. நாதஸ்வரம் , ஐயா குரலில் திருப்பள்ளியெழுச்சி நன்றிகள் கோடி 🙏🙏
@vetrivelramya8814
@vetrivelramya8814 2 жыл бұрын
Thanks for a one. Million
@KanagasapaiAmirthanayaga-ry4vq
@KanagasapaiAmirthanayaga-ry4vq 12 күн бұрын
இத்துடன் அடியேனைஆஆட்கொள்ளவும்
@jaganathankrishnamoorthy6284
@jaganathankrishnamoorthy6284 8 ай бұрын
உங்களுடைய பாடல் கேட்டு பரவசம் அடைந்தேன்
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தந
@hmcmillenium
@hmcmillenium 3 жыл бұрын
திருப்பள்ளியெழுச்சி - மணிவாசகர் போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே! புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்; சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய்! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (1) அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர்! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே! (2) கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய்! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (3) இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ; திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (4) பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (5) பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா! செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (6) "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு அரிதென, எளிதென", அமரும் அறியார், "இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே; எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் மதுவளர் பொழில் திருஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே! (7) முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்! பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே! செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (8) விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே! வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே! கடலமுதே ! கரும்பே ! விரும்படியார் எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே! (9) "புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (10) திருச்சிற்றம்பலம் Source: www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm
@geeveeu
@geeveeu 6 ай бұрын
@arnatarajan7099
@arnatarajan7099 4 жыл бұрын
பாடலை செவியுறும்கால் மனம் உருகி, ஊண் உருகி சிவதரிசனம் கண்களில் காண ஆனந்தமே! பாடகருக்கு தலையாய வணக்கம்.
@d.venkatasubbareddy3896
@d.venkatasubbareddy3896 4 жыл бұрын
சிவமும் செந்தமிழும் சேர்ந்தெமை மயக்கும் சிவம் உமைக்காத்தருள தவமிகுதமிழகம்தழைக்க உவமையில்வகையில் உருக்கி நீர் இசைத்தால் அவமெலாம்தீர எமக்கு அருளுக மேன்மேலும் புவனமும் சிறக்கும் புனிதமே நிறைக்கும் புன்மைகள் ஒழிந்து நன்மைகள் செழிக்க! வெங்கடசுப்பாரெட்டி மயிலை சென்னை
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
@@d.venkatasubbareddy3896 நன்றி
@p.sampathkumarsampatjkumar1717
@p.sampathkumarsampatjkumar1717 Жыл бұрын
மிகவும் அருமை அற்புதமான குரல் வளம்
@jaganathankrishnamoorthy6284
@jaganathankrishnamoorthy6284 Жыл бұрын
இனிமையான குரல் தெளிவான உச்சரிப்பு அருமை
@yuvanpraveen6147
@yuvanpraveen6147 Жыл бұрын
உருகியது ஊர் உயிர் ஐயா உங்கள் குரலில்
@srbalayourfriend1729
@srbalayourfriend1729 2 жыл бұрын
தெய்வீக குரல் ஓம் நமசிவாய
@arunmelody5255
@arunmelody5255 Жыл бұрын
உங்கள் இசைக்கு நான் அடிமை ஐயா
@shanmugasundaramsundaram9114
@shanmugasundaramsundaram9114 2 жыл бұрын
நல்லதொரு இசையுடன் கூடிய கணீர் குரலில் கேக்கும் போது முருகனே என்ன வேண்டும் என்று கேக்கு தூண்டும் வகையான பாடல் - சூப்பர் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை 16
@annamalai7015
@annamalai7015 Жыл бұрын
⁰⁰lllllllllllll
@c.venkatachalamvenkatachal9976
@c.venkatachalamvenkatachal9976 Жыл бұрын
கபில்வெங்கட் தேடக்கிடைக்காத பொக்கி்சம் உங்கள்பதிவு சிவயாநமக
@rsssasikumarsuba7647
@rsssasikumarsuba7647 2 жыл бұрын
கடவுள் தரிசனத்தை உணர்ந்தும் இந்த பதிவு ‌வணக்குகிறேன்
@manirajah811
@manirajah811 Жыл бұрын
அருமையான பதிவு👍
@sivajeevajothisiddhargal4206
@sivajeevajothisiddhargal4206 3 жыл бұрын
ஐயா திருவாசத்தில் இருந்து திருப்பள்ளி எழுச்சி மிக அருமை உங்கள் குர்ல் மிக மிக அருமை ஐயா என்னை ஈர்த்த குரல் நமச்சிவாய வாழ்க
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 3 жыл бұрын
மிகவும் இனிமையான குரல்.
@kalaiaraspandian4052
@kalaiaraspandian4052 3 жыл бұрын
தெய்வீககுரல்
@m.arumugam5493
@m.arumugam5493 Жыл бұрын
அற்புதம்
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 жыл бұрын
iyya used to sing prayer song first thing in the morning, in skanada varodaya college those days then classes start so that helped a lots of students to concentrate all now in good positions all over the world
@jayaramann854
@jayaramann854 3 жыл бұрын
Very good to hear Immeasurable anandham peace with Mangàla Isai of NATHASWARAM Great
@srk8360
@srk8360 3 жыл бұрын
ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏...திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி...
@sivathasanmathyvannan8003
@sivathasanmathyvannan8003 4 жыл бұрын
எல்லாம் சிவமயம்🙏🇩🇪
@venkatvanswaminathan5634
@venkatvanswaminathan5634 3 жыл бұрын
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள்வாழ்க என்னை ஆட்கொண்டு செயல்பட வைப்பாயாக இறைவா கூத்தா சடையா
@jayaramann854
@jayaramann854 3 жыл бұрын
Divine voice to listen forever forgetting worldly affairs
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
இறைவனே வந்து காட்சி தருகிறான், இன்னிசையால் மகிழ்ந்து, எம் உயிர் கரைந்து. சுந்தர் தம்பிக்கோட்டை
@rsssasikumarsuba7647
@rsssasikumarsuba7647 2 жыл бұрын
பட்டுகோட்டை அருகே மகிழ்ச்சி
@govindarajansankaran4516
@govindarajansankaran4516 7 күн бұрын
திருச்சிற்றம்பலம்🙏🏼
@HemaNemoo
@HemaNemoo 4 жыл бұрын
ஆரமுதே பள்ளியெழுந்தருளாயே
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 4 жыл бұрын
அருமையான குரல் திருச்சிற்றம்பலம் ஓம் நம் நமச்சிவாயம் போற்றி போற்றி
@anbunagi4489
@anbunagi4489 3 жыл бұрын
Om omom Nama siva siva siva Sivaya Nama omomom Erayva nin padham. Saranam saranam Ellam siva mayam. Sivamey Jayam sivamey Thavam omomom
@kalaik5949
@kalaik5949 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய ....
@elangogopi8481
@elangogopi8481 3 жыл бұрын
திருவாசகத்திற்கு"உருகாதாா் ஒரு வாசகத்திற்கும் உறுகார் என்பது பழம்"சொல் ஆனாலும் அண்ணலின் குரல்"சாட்சாத் அந்த"இசை"சக்கரவர்த்தி எம்பெருமான் அருளால்"கிடைத்த வரம்தான்"என சொல்வேன். வாழிய"உங்கள் இசை பயணம். அன்புடன்"இளங்கோசம்பந்தம்
@arunagiri8796
@arunagiri8796 4 жыл бұрын
இனிமையாக உள்ளது
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம், வாழ்த்துக்கள், நன்றி கள்.
@shanmugamsangarapillai1975
@shanmugamsangarapillai1975 3 жыл бұрын
excellent performance voice so divine full of bakthi nandri iyya Australia
@kalyanraman801
@kalyanraman801 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் பதிவு
@rangarajusivashanmugam2057
@rangarajusivashanmugam2057 4 жыл бұрын
Goodmorning
@sureshbabu4212
@sureshbabu4212 3 жыл бұрын
Sivayanama ayya kuralin dheiveegam manadhai mattumalla aiempulanaiyum vurukkugiradhu sivathai kanmun niruthugiradhu ayya 🙏🙏🙏🙇🙇🙇🙏🙏🙏 thiruchitrambalam
@arunagiri8796
@arunagiri8796 4 жыл бұрын
வளர்க உமது இறை வழிபாடு
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 3 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத இனிமையான குரலுடன் கூடிய இசைத்தமிழ்
@palanisamypmp9723
@palanisamypmp9723 3 жыл бұрын
Very excellent
@subramaniamn8324
@subramaniamn8324 4 жыл бұрын
Very very pleasant nice voice.thanks.
@raghavanrajuiyer8311
@raghavanrajuiyer8311 3 жыл бұрын
Only tears flowing from my eyes on hearing your Mighty voice. Lord Shiva has abundantly blessed you with a golden voice. Vazhga Valamudan Iyya.
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@brindhavijayan7227
@brindhavijayan7227 2 жыл бұрын
@@Manikavasagari b.,v
@kannayiramkannayiram6921
@kannayiramkannayiram6921 3 жыл бұрын
சிவாய நம ஓம்
@rajamanickamsekar6960
@rajamanickamsekar6960 3 жыл бұрын
இப்பிறவி யான் பெற்ற பேறு
@kannanmarathar427
@kannanmarathar427 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@SureshSuresh-sp6sm
@SureshSuresh-sp6sm 4 жыл бұрын
சிவாயநம🙏🙏🙏
@veenai.s.thirumalvasagan7653
@veenai.s.thirumalvasagan7653 2 жыл бұрын
Very good I am very happy sir
@karthiksrinivasan7152
@karthiksrinivasan7152 8 ай бұрын
Arumai
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 2 жыл бұрын
Fantastic rendition by Sangeetha Vidhwan Pon Sundaralingam Aiyah. Salutations to all in the team who made it .
@aruk3421
@aruk3421 4 жыл бұрын
Excellent voice,wonderful
@rrkopal5454
@rrkopal5454 8 ай бұрын
தமிழ் முக்கியம்
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 Жыл бұрын
Oom nama shivaya
@nithyamoulipalanimouli1156
@nithyamoulipalanimouli1156 4 жыл бұрын
Very nice voice
@meerabiju1294
@meerabiju1294 3 жыл бұрын
Om Namashivaya
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 8 ай бұрын
Om namasivaya
@AsokanP-ee2uw
@AsokanP-ee2uw 9 ай бұрын
பொன் அசோகன்
@pechimuthu9449
@pechimuthu9449 4 жыл бұрын
Good service continue thanks
@vanmugil8222
@vanmugil8222 4 жыл бұрын
Sarvam sivamayam
@selvarajmarimuthu5157
@selvarajmarimuthu5157 3 жыл бұрын
I have heard this song almost 100 times. How to explain to others about this song.? One way to explain. 1st time hearing I felt 100 feet away from god. 100 th time hearing I felt 1 feet away from god. This is the easiest way to explain about this song.
@rrkopal5454
@rrkopal5454 8 ай бұрын
தமிழிலேயே திருவாசகம் எழுதப்பட்டுள்ளது.நாம் நம்முடைய கருத்தையாவது தமிழில் எழுதுவோம் சிவாயநம திருச்சிற்றம்பலம்
@guruguharamanaalayam4917
@guruguharamanaalayam4917 Жыл бұрын
உள்ளமும் உயிரும் உருகுதய்யா உந்தன் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது ❤❤❤
@thanasingm3000
@thanasingm3000 3 жыл бұрын
Very good to hear
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 жыл бұрын
cosmic voice overflowing bakthi anbu arul gift from shivaperuman , i went to the school as iyya went ;;skandavadaya college chunngam in 1963 1964 s i think
@vanmugil8222
@vanmugil8222 4 жыл бұрын
Sema super voice shiva
@lalithasatya7139
@lalithasatya7139 4 жыл бұрын
very nice voice and sang very well. full of bhakti feel like hearing again and again. A small request if you can mention the raga of each one that will help us to learn and sing. Thanks
@raja.k2038
@raja.k2038 2 жыл бұрын
Vuyir moochallava enn Ambalavanan om namasivayame potri Thiruchitrambalme potri inbasivame potri potri potri potri potri
@rajagopallingusamy673
@rajagopallingusamy673 2 жыл бұрын
Om namasivaya namaka
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@saarmenthradirghar7550
@saarmenthradirghar7550 4 жыл бұрын
Soulful and blissful rendition of this beautiful composition
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
Tamil musical composition about god siva. 1400 years old.THiRUVSAGAM singer Ponsundaralingam jaffna.
@tharsinitharsinisini8435
@tharsinitharsinisini8435 7 ай бұрын
🙏🙏🙏🌹🙏🙏🙏
@elangovanr682
@elangovanr682 4 жыл бұрын
Biessed to hear the song .Honey coated and mesmerising voice.
@rekhamuruganandham6143
@rekhamuruganandham6143 3 жыл бұрын
Muruganandam Sivaynama arumaiy
@madhavanvenkataraman980
@madhavanvenkataraman980 4 жыл бұрын
Super
@t.arumugamt.arumugam8278
@t.arumugamt.arumugam8278 2 жыл бұрын
குரல் இனிமை
@punniakotti9667
@punniakotti9667 4 жыл бұрын
🙏🙏🙏
@apparelexportskillcenter6721
@apparelexportskillcenter6721 2 жыл бұрын
ஓம் நமசிவாய tuch all 🙏🙏🙏
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 2 жыл бұрын
Beautiful rendition. God Bless. Salutations to Oodhuvar .
@balamurugan-lc4ig
@balamurugan-lc4ig 2 жыл бұрын
Om ammaiappa potri
@ramamoorthia3422
@ramamoorthia3422 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@banumani2858
@banumani2858 3 жыл бұрын
ராகங்களின் பெயரை போடமுடியுமா.
@sudalaimuthus3663
@sudalaimuthus3663 3 жыл бұрын
ஈசனின்அருள்கடாஜம்உடனேஇந்தபாடலைகேட்கும்போதேஇறைநிலையில்லயித்தவிடுகறோம்திருச்சிற்றம்பலம்
@98765lkjhg
@98765lkjhg 3 жыл бұрын
Sir Does anyone have திருநீற்றுப் பதிகம் sung by mathipukkuRiya Thiru Pon Sundaralingam ayya ? . if so please share links
@marasamya8427
@marasamya8427 Жыл бұрын
Bless my god
@vijayagopal4414
@vijayagopal4414 3 жыл бұрын
Before pon sundaralingam Who sung
@ramarm1384
@ramarm1384 3 жыл бұрын
Download panna mudiyuma ayya
@annamalaib9628
@annamalaib9628 3 жыл бұрын
Zee it
@AsokanP-ee2uw
@AsokanP-ee2uw 9 ай бұрын
1:21
@GOD-lw5qd
@GOD-lw5qd 3 жыл бұрын
See " TheNeilriver " channel in KZfaq to see many videos of appearance of gods and goddesses in sky.
@krishnamoorthypadmanabhan8909
@krishnamoorthypadmanabhan8909 3 жыл бұрын
Why are u having advertisement during this beautiful devotional song. It is irritating all the devotees.pls stop advertisements atleast during devotional songs.
@renganayagishakthi7755
@renganayagishakthi7755 3 жыл бұрын
அருமை....ஐயா. .இன்னிசை வீணையர். ..இது எந்த ராகத்தில் பாடப்பட்டுள்ளது?
@visva6179
@visva6179 Жыл бұрын
சாவேரி இராகம்
@srinivasanjeya
@srinivasanjeya Жыл бұрын
@@visva6179 Ragamalika each stanza is set to different ragaa
@srinivasanjeya
@srinivasanjeya Жыл бұрын
@@visva6179 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ; this stanza alone was such in Saveri.
@srinivasanjeya
@srinivasanjeya Жыл бұрын
@@visva6179 பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும் - sahana
@srinivasanjeya
@srinivasanjeya Жыл бұрын
@@visva6179 "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு அரிதென, எளிதென", அமரும் அறியார், - Ataanaa
@rajagopallingusamy673
@rajagopallingusamy673 2 жыл бұрын
Om namasivaya namaka
@muruganc1628
@muruganc1628 3 жыл бұрын
ஐயாதங்கள்குறலில்சிவனின்படல்கள்மனத்தைஉறுக்கிவிட்டதுஎண்ணாள்மனப்பாடம்செய்துபாடமுடியவில்லையேவருந்துகிறேன்
Sivapurana Pathikam
10:45
Pon Sundaralingam - Topic
Рет қаралды 2,6 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Thirupalliyezhuchi with lyrics-Dharmapuram P.Swaminathan-திருப்பள்ளியெழுச்சி-தருமபுரம் சுவாமிநாதன்
22:10
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Рет қаралды 200 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН