Рет қаралды 139,262
இளைஞர் உயிரைப் பறித்த 'இன்ஸ்டா' படங்கள் - ரூ.12 லட்சம் கேமராவுக்காக கொன்ற நபர்கள் பேஸ்புக்கால் சிக்கியது எப்படி?
புதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2024
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரவாடா என்னும் ஊரைச் சேர்ந்தவர் 23 வயதான சாய் விஜய் பவன் கல்யாண் குமார் (சாய் குமார்). தொழில்முறை புகைப்படக் கலைஞரான இவர், திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பவர்.
பிப்ரவரி 26 அன்று ஒரு நிகழ்வை படம்பிடிப்பதற்காக விசாகப்பட்டினத்திலிருந்து ராஜமுந்திரிக்கு ரயிலில் புறப்பட்ட சாய் குமார், ஆந்திராவின் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள மூலஸ்தானம் கிராமத்தின் மணல் குன்றுகளில் மார்ச் 3ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? ஒரு நிகழ்வை படம்பிடிக்கச் சென்ற சாய் குமாரை கொன்றது யார்? அவரது பெற்றோரும் காவல்துறையும் என்ன சொல்கிறார்கள்?
#Andhra #Saikumar #Instagram
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil