Рет қаралды 11,642
லண்டன் காதலியை இந்து முறைப்படி சடங்குகள் செய்து பெற்றோர் உற்றார் உறவினர்கள் ஆசிரிவதிக்க தாலிக்கட்டி கரம் பிடித்தார் தஞ்சையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த பெரியசாமி ஜமுனா தம்பதியினரின் மகன் கார்த்தி, பொறியியல் பட்டதாரியான இவர் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் software Engineer ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவரோடு அதே நிறுவனத்தில் பணிபுரியும் அலிஷ் ஃபால்க் என்ற லண்டன் வாழ் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்கள் காதலை பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.
இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து திருமணம் தேதி குறித்தனர்.
இதனை அடுத்து லண்டனில் இருந்து மணமகள் குடும்பத்தினர் தஞ்சை மாவட்டம் திருவையாறு வந்தனர்.
இன்று திருவையாறில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடந்தது.
லண்டன் மணப்பெண் பட்டுப்புடவையில் மண மேடைக்கு வந்தார். மணப்பெண் தாய், தந்தை, சகோதரர் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து மேடையில் நின்றனர்
இந்து முறைப்படி புரோகிதர் மந்திரம் சொல்லி மாங்கல்யம் எடுத்து தர மணமகன் கார்த்தி லண்டன் காதலி ஆயிஷ் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார்.
பெற்றோர். உற்றார் உறவினர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்.