Рет қаралды 1,002
தயாரிப்பு :பாலமுனை கண்ணகி இளைஞர் ஒன்றியம் (கட்டார்)
வரிகள் : கிரிதரன் ரகுகாந்தன்
இசை : டினேஸ் திரு சந்தனா
குரல் : சிவஸ்ரீ.திருச்சிற்றம்பல தேவகுமார் குருக்கள்
எஸ்.சர்மினி, கே.பிரசாத்
01.திருவளரும்பிட்டியடிதுறையூரையாளும் செல்வி கண்ணகை மீது காவியம்பாட மருவுலா வியகமல பதமும் குடவயிறும்
மதகரி முகமழகு வைந்துகரத்தோனும்
02.எழிலொழுகும் திருமண்டூர் திருமுருகவேளும்
என்நாவில் குடிகொண்ட கலைவாணித் தாயும் வரும் பிழைகள் தனையகற்றி வழி செய்ய வேண்டும்
மலரடிகள் ஒருநாளும் மனதில் மறவேனே
03.வாவி வயல் சூழவே வந்தமர்ந்து கொண்டாய்
வைகாசி வளர்மதியில் வரமதுவும் தந்தாய் நாகமரநிழல்தனிலே நன்றாயமர்ந்தாய் நாளுமெமை யாளுகின்ற கண்ணகைத்தாயே
04.பிட்டியடித்துறையூரை யாள்பவளும் நீயே பிணிதொல்லை தீர்த்தருளும் பத்தினித்தாயே நித்தமுன் பாதமலர் நாம் தொழவே வந்தோம்
நிதம் எம்மைக் காத்து வரமருளுவாயே..
05.அயராமால் மானாகர் மாகளாக வந்தாய்
அழகான பாலமுனையூரில் லமர்ந்தாய் செயலான மாவின்கனியெனவே யுதிர்த்தாய் தெய்வீக மாயந்த பேளையுள்ளானாய்
06.மயலான கோவலரின் மனைவியென வந்தாய்
மானாகர் மகளாக வந்தவதரித்தாய் தயவாக வென்றுமெமை யாள்பவளும் நீயே
சக்தியே பிட்டியடித்துறையமர்ந் தாயே..
07.பக்தரின் இதயத்தி லுறைந்தவளும் நீயே பாலமுனையூரில் வந்தமர்ந்தாயே
கத்துக் கடல் சூழ ஈரேழு புவனமும்
காப்பாற்றி ரெட்சித்த கண்ணகைத் தாயே
08.பக்தியுடன் மீனவன் விழி மறைத்தாயே பண்பில்லா தட்டானை பொடிய வைத்தாயே நித்தமருள் செய்தெம்மை யாள்பவளும் நீயே பிட்டியடித்துறையூரின் பத்தினித் தாயே...
09. வாழுமாதுராபுரி யெரித்தது நீ பொய்யோ
மானாகர் மகளாக வந்ததுநீ பொய்யோ தாளில் மணி யரவம் நீ மணிந்தது பொய்யோ
சாற்றரிய பொதுவர் மனை காத்ததுநீ பொய்யோ
10.மாவின் கனியாக நீ வந்தது பொய்யோ
மாறனுயீர்தனை நீ வதைத்தது பொய்யோ நாளுமெமை யாள்கின்ற தாயவளும் நீயே நாயகியே பிட்டியடித்துறையமர்ந் தாயே
11.எழில் கொஞ்சும் பாலமுனையூரிலமர்ந்தாய்
ஏக பத்தினியாக எழுந்தாட்சி செய்தாய் வருமடியார் கண்நோய்கள் கவலைகளும் தீர்த்தாய்
மாகாளியுருவாகி மதுரை யெரித்தாய்
12.வருடமொரு வைகாசிப் பெருவிழா கொண்டாய்
மானுடர் நோய் தீர்த்து அருள்வாக்கு தந்தாய் தயவாக வென்றுமெனை யாள்பவளும் நீயே சக்தியே பிட்டியடித்துறையமர்ந் தாயே...
13.கண்ணும் நீ கண்ணுக்கு ஒளியான சக்தி நீ
கண்ணகை பெயர் கொண்ட பத்தான பத்தினி
விண்ணதுவும் மண்ணதுவு மான சிவ சக்தி நீ வித்துக்குள் முளையான வித்தார சக்திநீ
14.எண்ணுவோர் எண்ணத்தை ஈடேற்றும் சக்தி நீ
ஏகாந்த சக்தி சிவ ஞானாந்த சக்தி நீ வண்ணமிகு பாலமுனையூரிலே வாழும் மாது நீ பத்தினி கண்ணகைத் தாயே
15.பக்திமிகு தவில் சங்கு தாரை குழல் கொம்பு
பல்லியம் மல்லாரி தப்புருவு டுக்கை
மத்தளம் நாகஸ் வரவீணை எக்காளம்
வரிசை பெறு பல்லியம் பலவித முழங்க
16.நித்தபரி பூரணி ஆன எம்தாய்க்கு நின்று செந்தமிழ் வாணர் காவியம் பாட அத்தனருளாற் பூசை கொண்டருள் செய்கின்ற
ஆதியே பிட்டியடித்துறையமர்ந் தாயே..
17.கற்பரசி பொற்பரசி பத்தான பத்தினி பாலமுனை வந்தமர்ந்த உத்தமித் தாயும் நீ ஆதியும் அந்தமும் ஆன சிவ சக்திநீ
அகிலத்தை யாள்கின்ற அலங்கார சக்தி நீ
18.பிட்டியடித்துறையாள வருகின்ற சக்தி நீ
பிணி தொல்லை தீர்த்து அருளும் பத்தான பத்தினி....
நித்தமுன் பாதமலர் நாம் தொழவே வந்தோம் நிதமெம்மை காத்து வரமளுள வேண்டும் ..
19.அழகான பிட்டியடித்துறை யூரமர்ந்தாய்
அழியாத கண்ணியென நெஞ்சில் குடிகொண்டாய்
வடிவான சிலம்பதனை கையிலே யெடுத்தாய் ..
மாறாத கண்நோய் கவலைகளும் தீர்த்தாய்..
20.ஒருகையில் சிலம்பேந்தி உலகாள வந்தாய்.... ஓங்கார ரீங்காரமான கண்ணகையே
கமலமலர் பாதமதை நாளும் பணிகின்றோம்.... காப்பாற்றி ரெட்சிக்கும் கண்ணகித் தாயே....