🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@sumathikrishnan76892 жыл бұрын
நாயகன் விளக்கம் அருமை கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்னே நாம் கர்த்தா இல்ல நாம் நிமித்தம் மாத்ரம் போராட வேண்டும் அருமை கோதை காட்டியா பாதையில் அழைத்து செல்ல கண்ணன் ஐ பிரார்த்திக்கிறேன் தலை அல்லால் கை மாறிலனே 🙏🙏🙏🙏
முதல் பகுதி - கண்ணனின் பாதையே சரியாக வழிநடத்திச் செல்லும் பாதை என்பதை தன் நிரதிசய ஞானத்தால் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் திருஷ்டாந்தம் மூலம் நிர்ணயித்த திலிருந்து- கண்ணனை ஒரு நாயகனாய்,நண்பனாய், தூதுவனாய், கீதாச்சார்யனாய், போன்ற பல்வேறு முகங்களாய் அடியார்களுக்கு மெய்யனாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கண்ணனையும் நம் பாரத கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாய் ராமாயணம் மகாபாரதம் திகழ்கிறது என்பதையும் ஸ்வாமிகள் கோடிட்டார். ஒருவன் ராமன் நடந்து சென்ற வழியையும், கண்ணன் உபதேசித்த மார்க்கத்தையும் துணை விளக்காய் கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும் மற்றும் பிள்ளை லோகம் ஜீயர் சாதித்த ராமாயணத்தில் சிறை இருந்தவளான சீதையின் வைபவத்தையும் ஏற்றத்தையும், மஹாபாரதத்தில் தூது போன கண்ணனின் பிரபாவத்தையும் ஸ்வாமிகள் நினைவு கூர்ந்தார். தீரோ தாத்த நாயக :8 விதமான நற்குணங்கள் நிரம்பப் பெற்ற வர் .தீரோந்த நாய க -டம்பர், சோர்வு மத மாத் சார்யம் போன்ற தீய குணங்களின் இருப்பிடம். தீர லலித நாயக - பெண்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தான் வாளாகி இருப்பது. தீர பிரசாந்த நாயகா சத்வ குணங்கள் நிரம்பி சாந்திரஸத்துடன திகழ்வது என்பதாய் அர்த்தங்களை விசேஷித்தார். மேலும் பாண்டவர்களுக்கு ஒரு ஸ்நேகிதனாய் ஆத்ம பந்து வாய், அவரை எதிர்த்த சிசுபாலனுக்கு ஒரு பகைவனாய், தன் பிரேமத்தால் கோபியர்கள் மனம் கவரும் கள்வனாய், குசேலரின் உன்னத நட்பிற்கு ஆத்ம மித்ரனாய், கண்ணனிடம் அபரிமிதமான பக்தியை செலுத்தும் உத்தவர், விதுரர் போன்றவர்களுக்கு பக்த பராதீனனாய் இங்கனம் அடியார்களின் பாவனைக்கு ஏற்ப கண்ணன தன்னை உருமாற்றிக் கொள்ளும் திறனை அருமையாய் ஸ்வாமிகள் சாதித்தார். மேலும் ரிஷிகேசனாய் நம் இந்திரியங்களை பெருமான் தன் வசப்படுத்தித் கொள்கிறார். போராடுவது நம் கடமை எனில் முடிவில வெற்றியை பெற்றுத் தருவது அவனின் பெருமை என்றார். அளவுக்கு உட்படாத உயர்ந்த அபரிமிதமான துரியோதனாதிகள் சேனை, அளவுக்கு உட்பட்ட தாழ்ந்த பீமனாதிகள் சேனை என்பதைவிட கண்ணனே பாதுகாவலனாய், வழிநடத்தி செல்லும் ஆச்சார்யனனாய் நேதா வாய் ஒரு தலைவனாய் நிலை நிற்கும் பாண்டவ சேனை ஒரு படி உயர்ந்த நிலை என்பதையும் தெரிவித்தார். கண்ணனின் தேவதத்தா சங்கநாதத்திற்கு திருதராட்சனின் மனம் உலுத்து போனதையும் ஒரு கோடி சைன்யம் உள்ள துரியோதனாதிகள் சேனையும் கண்டு அஞ்சும்படி இருந்தது என்பதை அழகாய் ஸ்வாமிகள் எடுத்துரைத்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@RamRam-ly9hl Жыл бұрын
🙏🏿
@malathynarayanan6078 Жыл бұрын
@@RamRam-ly9hl 🙏🙏
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி - 2 கண்ணனின் பாதையின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய சாதித்ததிலிருந்து - கண்ணன் நேதா வாய் ஒரு தலைவனாய் மஹாபாரத போரில் நடத்திய ப்ரபாவத்தை கூறும் வகையில், போட்டியைக் கண்டு துவளாமல் அர்ஜுனன் இருக்க கண்ணன் நாயகனாய் ஒரு ரக்ஷகனாய் ரக்ஷித்ததை திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை உதாஹரித்து விளக்கி, தேரில் ப்ரதான்யம் யாருக்கு கண்ணனுக்கா, அர்ஜுனுக்கா என்பதை அவரவர் கண்ணோட்டத்திலிருந்து அத்புதமாய் ஸ்வாமிகள் விளக்கி இதன் முடிவில் ஞான மார்க்கத்தில் அழைத்துச் செல்லும் பரமாத்மாவான கண்ணனை பின் தொடர்ந்து வந்த ஜீவாத்மாவான அர்ஜுனன் ஓம் என்ற ப்ரணவத்தின் அர்த்தமாய் தோன்றும் பரமாத்மா - ஜூலாத்மா ஸ்வாமி - தாஸன் என்ற நிருபாதிக பந்தந்தை நிலைநிறுத்தி கர்த்தாவான கண்ணன் ஜீவாத்மாவான அர்ஜுனனை ஒரு நிமித்தமாய் செயல்புரிய வைக்கும் வழிநடத்தும் தத்துவத்தையும் விவரித்தார். மேலும் அர்ஜுனனின் காண்டீபத்தை யாராவது தரம் குறைவாக கூறினால் அவன் வெகுண்டு எழுந்து அவர்கள் கொலை செய்யவும் தயங்கமாட்டான் என்பதின் விளக்கமாய் தர்மர் அர்ஜுனனின் காண்டீபத்தை தரம் தாழ்த்தி பேச, அர்ஜுனும் தர்மரை கண்ணனின் உபதேசப்படி அவனை கொன்றதற்கு சமானமாய் த்வம் த்வம் எனக் கூறியது( சான்றோர்களை இகழ்ந்து பேசி த்.வம் த்வம் என்றால் அவர்களை கொன்றதற்கு சமானம் என சமயோதி மாய் கண்ணன் கையாண்ட விதத்தை ஸ்வாமிகள் எடுத்துரைத்தது) அஜாயமான ஹ பஹீதா விஜாயதே என்பதின் அர்த்த விசேஷமாய் பிறப்பே இல்லாத பெருமான் நம் போல் கர்ம வசத்தால் பிறக்காமல் தன்க்ருபா வசத்தால் தன் ஸத்ய ஸங்கல்பத்தால் பல அவதாரங்கள் எடுக்கிறார் என்பதை உரைத்து, பின் மஹாபாரத போர் முழுவதுமே தேரை முன்னும் பின்னும் நடாத்தியே அர்ஜுனனை வெற்றி பெறச் செய்த பிரபாவத்தை திருஷ்டாந்தத்துடன் விளக்கியது, பசுமாட்டுகன்றுக்கு தண்ணீர் குடிப்பதை கற்றுக் கொடுக்க தானே யமுனை ஆற்றில் குடித்து காட்டிய ஸூலபனான கண்ணனை நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் இஷ்டமான பசுக்கள் என துவங்கும் பாசுரார்த்தத்தை அர்த்தித்து உதாஹரித்தது வராஹசரம ஸ்லோகத்தை சாதித்து, ஒருவன் இளம் பிராயத்தில் செய்த சரணாகதியை நினைவு கூர்ந்து ப்ராப்ய மார்க்கத்தில் ஈடுபட்டாரெனில் அவனுக்கு அந்திமதிசை வரும் போது அவனால் பகவன் நாமாக்களை கூற இயலாத தருணத்திலும் பெருமான் அவன் முன்பு கூறியதை கருத்தில் கொண்டு அவனுக்கு மோக்ஷ கதியை பெற்றுத் தருகிறார் என்றார். இவ்வாறு ஒரு நாயகனாய் எவ்வாறு ஆஸ்திரிகர்களை வழி நடத்தி செல்ல வேண்டும் என்பதற்கு சான்றாய் கண்ணன் ஒரு நேதாவாய் - தலைவனாய் விளங்கி அடியார்களை ரக்ஷித்து தன் ரக்ஷகத்தனத்தை நிலை நாட்டியதை எடுத்துரைத்தார். மேலும் சிருங்கார ரஸத்தில் ப்ரணயத்துவம் பூரணமாய் நிரம்பிய ஆழ்வார் . கண்ணனின் ப்ரணய. கலஹ வ்ருத்தாதத்தை அழகாய் ஸ்வாமிகள் சாதித்தார். வாழ்க்கையில் எப்போதும் ஜெயம் மட்டும் என்றில்லாமல் தோற்று ஜெயிக்க வேண்டும் என்பதை சீதா, ராமன், லக்ஷமணன் கோதாவரி நதியில் நடைபெற்ற நீச்சல் போட்டி வ்ருத்தாந்தத்தின் மூலம் பத்தினிக்கு தோற்பான் பரம ரசிகன் என்பதை ஸ்தாபித்தார். ராஸிக்கை என்னும் ஒரு கலையை உணர்த்தும் வகையில் ஆழ்வார் நம்பி உரையாடல் மூலம் ஆழ்வார் போ என்பதற்கும் வா என்று உள் அர்த்தமாய் கொள்வது மற்றும் எங்கெங்கு தோற்று ஜெயிக்கனுமோ அங்கங்கு விட்டுக் கொடுத்து ஜெயிக்கும் பண்பை வளர்த்துக்கொள்வதையும் அருமையாய் குறிப்பட்டு இப்பகுதியை ஸ்வாமிகள் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெயஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@umagiri7218 Жыл бұрын
Thank you ma
@malathynarayanan6078 Жыл бұрын
@@umagiri7218 🙏🙏
@RamRam-ly9hl Жыл бұрын
நல்லவனாக இரு ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே அதை விட முட்டாள்தனமான விசயம் எதுவும் இல்லைஎதுவும் இல்லை பகவான் கிருஷ்ணன் ,🙏🏿🙏🏿