Рет қаралды 772
#groundnut
#நிலக்கடலை
முதிர்ந்த இலைகள் காய்ந்து மஞ்சள் நிறமாகி கருப்பு நிற புள்ளிகள் தென்படும்.
செடியை பிடுங்கி பார்த்தால் கடளை பருப்புகள் முற்றியும் அவற்றின் ஓடுகள் கருப்பு நிற கோடுகளுடனும் காணப்படும். அந்த சமையத்தில் தண்ணீர் பாய்ச்சி கடலை செடியை அறுவடை செய்யலாம் இயந்திரத்தின் உதவியுடன் கடலையை அறுவடை செய்யலாம்.
நிலக்கடலை முக்கிய எண்ணெய் வித்து பயிராகவும், உணவுப் பொருளாகவும், நுண்சத்துக்களாகவும் அதிகளவில் பயன்படுவதால் அவற்றை இந்தியா மட்டும் அல்லாது மற்ற நாடுகளிலும் நிலக்கடலை சாகுபடி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை மானாவாரி பயிராகவும் இறவையிலும் சாகுபடி செய்து அவற்றின் உற்பத்தியை பெருக்க முன்வருவோம்.
வீட்டுப்பருப்பாக இருந்தாலும், ஆலைப்பருப்பாக இருந்தாலும,; கடைகளில் வாங்கிய பருப்பாக இருந்தாலும் முளைப்புத்திறன் பார்ப்பது அவசியம் கொட்டாங்குச்சியில் மண் நிரப்பி 10 பருப்புகளை போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும் 8 லிருந்து 9 பருப்பு முளைந்திருந்தால் அவை 80 சதம் அல்லது 90 சதம் முளைப்புத் திறன் இருக்கிறது 6- 7 பருப்புகள் முளைத்தால் அவை விதைப் பருப்பின் அளவை 10 கிலோ கூட்டி விதைக்க வேண்டும். இவை பயிர் எண்ணிக்கையை பராமரிப்புக்கு அவசியம். களைக்கொத்து கொண்டு ஆட்கள் மூலம் நடவு செய்யலாம், அல்லது உழவு சாலில் போட்டு விதைக்கலாம்.