Рет қаралды 102
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாச சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (05.04.2024) வெள்ளிக்கிழமை தொடங்கியது. சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மண்டகப்படி தாரர்களுக்கு முதல் மரியாதை செய்தனர்.
இதில் 8ம் திருநாள் மண்டகப்படி தாரரான பட்டங்கட்டியார் சமூகத்தினருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டது.
பரிவட்டம் கட்டும் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.