Рет қаралды 117,216
இந்தியாவின் கிராமங்களில் வசிக்கும் சுமார் 20 கோடி குடும்பங்களின் வீடுகளில் குடிநீர் குழாய்கள் இல்லை. இக்குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் நடந்து சென்று, மணிக்கணக்கில் வரிசையில் நின்று தண்ணீர் சேகரிக்கின்றனர். இந்த சவாலை சமாளிக்க, நரேந்திர மோதி அரசு 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை அறிவித்தது. இது 2024ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. இதுவரை 10 கோடி வீடுகளில் குழாய்கள் போடப்பட்டுவிட்டதாக அரசு கூறுகிறது. இந்தத் திட்டம் எவ்வளவு பயனுள்ளது, அதில் உள்ள சவால்கள் என்ன - இதற்காக பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள மூன்று பகுதிகளுக்குச் சென்றார். இந்தத்தொடரின் முதல் நிறுத்தம் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் பார்மெர் மாவட்டம் . பாலைவனத்தில் இருக்கும் வீடுகளுக்கு எப்படி தண்ணீர் சென்றடைகிறது என்பதை இந்த சிறப்பு செய்தியில் பார்க்கலாம்.
#watercrisis #rajasthan #jaljeevanmission
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil