Рет қаралды 63
இந்த கவிதை உங்களுடைய நம்பிக்கையை பற்றிய கவிதை.
நீங்கள் படிக்க விருப்பம் நண்பர்கள் என்றால்
இந்த கவிதை வரிகள் உங்களுக்காக..
உன் மேல் இருக்கும்
உனது நம்பிக்கை ஒரு போதும்
உன்னை விட்டு நீங்காமல் பார்த்துக்கொள்...
உன் கனவை நீண்ட பாதையாக தீர்மானிப்பது உன் இலக்காக இருக்கட்டும்...
உன்னை முந்தி போகிறவர்கள்
போகட்டும்...
அதை கண்டு நீ கலங்காதே...
ஓடும் நீரில்
மிதந்து போவதை விட...
நிற்கும் ஓடையில்
தெளிந்து நிற்பது சிறப்பு...!!
உன் சிந்தனையில்
உன் கனவு மட்டுமே உயிர்ப்பாய் நிற்கட்டும்.
ஏற்றம் வரலாம்
இறக்கம் வரலாம்
உன் பயணம் கனவை நோக்கி நகர்ந்து செல்லட்டும்.
நன்றி வணக்கம்.
கவிஞர் சிவா
@Kavingarsiva
#நம்பிக்கை
#selfconfidence