No video

மணி ஒலியும், இளையராஜாவும்! | Advocate Sumathi talks about Ilaiyaraja

  Рет қаралды 156,750

Shruti TV

Shruti TV

Күн бұрын

இளையராஜா பாடல்கள் பற்றி வழக்கறிஞர் சுமதியின் அருமையான உரை
ஆத்மார்த்தியின் 'ஏந்திழை' (நாவல்) மற்றும் 'புலன் மயக்கம்' (தொகுதி - 4) நூல்கள் வெளியீட்டு விழா
சாரு நிவேதிதா
சுமதி
வஸந்த் எஸ் சாய்
ராசி அழகப்பன்
கயல்
#ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair #ChennaiBookFair2K19
#Ilaiyaraja
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 437
@parthitamizh7238
@parthitamizh7238 4 жыл бұрын
என் போற்றோர் எல்லோருக்கும் உலகத்தில் பாதி பேர் மனதில் வாழும் உயிர் இளையராஜா சார் தான் .
@sarunachalamkrish
@sarunachalamkrish 5 жыл бұрын
மேடம் நாங்கள் ராஜாவின் ரசிகர்கள். எங்கள் மனதில் உள்ளதை கொட்டிவிட்டீர்கள். நன்றி
@Super2283
@Super2283 4 жыл бұрын
பட்டிமனற பேச்சாளர் பாட்டுமன்றத்திலும் கலக்குவார் என்பதை இந்த காணொளி மூலம் அறிந்து கொண்டோம். பேச வைத்த இசைக்கு சொந்தக்காரர் எங்களது இசைஞானி இளையராஜா அவர்கள்.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 5 жыл бұрын
உங்களுக்கு கோடா கோடி நன்றிகள்.இது போன்ற பதிவுகளை நிறைய பதிவிட வேண்டுகிறேன் உங்களைப் போன்றவர்கள் ராஜா சாரைப்பற்றி பேசும் போதுதான் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்
@arajaraja6945
@arajaraja6945 5 жыл бұрын
ரசிகைக்கே வியக்க வைக்கும் திறமை இருக்கும் போது, இளையராஜா நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவர்.
@balasubramanian9520
@balasubramanian9520 5 жыл бұрын
இசைஞானியின் இசையின் இன்பத்தை சிலாகித்த சகோதரி சுமதியின் உரை கேட்டு கண்ணீர் துளிர்த்தது ராகதேவனின் ராக ராஜாங்கத்தை ரம்மியமாய் ரசித்துரைத்தமை அருமை
@sundaraadith9683
@sundaraadith9683 4 жыл бұрын
உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒரு சந்தோசம் தர ஒரு இசைக்கு முடியும் என்றால் அவர் தான் இளையராஜா தான் அவர பகழ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது விட்டது.உங்க இசை ஆர்வம் ரொம்ப அருமை
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 4 жыл бұрын
நீங்கள் இளையராஜா இசையமைத்த பற்றி மிக ஆழ்ந்து சிந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி
@vanniappan6365
@vanniappan6365 5 жыл бұрын
Wow புல்லரிக்குது மேம் உங்களுக்கெல்லாம் இளையராஜா தெரியாது என நினைத்திருந்தேன் ஜதி சொன்னீங்க பாருங்க அடடா No words
@v.v.s.matchpackingunit9323
@v.v.s.matchpackingunit9323 5 жыл бұрын
அம்மா சகோதரி வணங்குகிறேன்.வாழ்த்துகிறேன்.என்ன அருமையான பேச்சாற்றல்.இளையராஜாவின் ரசிக உள்ளங்களில் தலையானவர்.அவருடைய இசையை கேட்டு நாங்கள் ஒன்றுமே புரியாமல் திகைத்துப்போய் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறோம்.இது எப்படி வந்தது எவ்வாறு சாத்தியப்பட்டது.அவரே எனக்கு தெரியாது என்கிறார்.எப்படியோ இன்னும் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு ஒவ்வொரு பாடலையும் ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள் வருங்கால சந்ததியினர்.அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமைப்பட்டு கொள்ளலாம்.
@kashinathana9487
@kashinathana9487 3 жыл бұрын
உண்மை தான்!
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 4 жыл бұрын
சகோதரி மிகவும் அருமையாக உரை நன்றி உங்கள் உரை கேட்கும்போது அந்த ராகதேவன் காலடியில் என் ஆத்மாவை வைத்து விட்டேன்....!
@mohandevendrar5294
@mohandevendrar5294 4 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு வழக்கறிஞர் என்று மட்டுமே நினைத்தோம். எவ்வளவு பெரிய இசை ,கவிதை ரசிகர் என்பது புரிகிறது. வியந்து ரசிக்கிறோம் உங்களின் ரசிப்பை. நல்ல பாடகரும் நீங்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி அம்மா.
@francisinban.p8074
@francisinban.p8074 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுதாக ஒரு ஆராய்ச்சி பூர்வமான உணர்வு பூர்வமான ஆற்றல் மிக்க பேச்சு. வாழ்த்துக்கள் தோழி.
@sampathkumar6096
@sampathkumar6096 5 жыл бұрын
இந்திய இசைக்கலைஞர்களான நௌஷத், சலீல் சௌத்ரி, R.D.பர்மன், லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால், அலிஷா, பீம்சேன் ஜோஷி, ஹரிப்ரசாத் சௌரஸ்யா, கர்நாடக இசைக் கலைஞர்களான செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், சுப்புடு, சுதா ரகுநாதன், T.N.சேஷ கோபாலன், நித்யஸ்ரீ, பட்டியல் நீள்கிறது. அனைவரின் பாராட்டையும் ஒருங்கே பெற்றவர் இளையராஜா. தற்போதுள்ள தேவிஸ்ரீ பிரசாத், இமான், ஜேம்ஸ் வசந்த், ரமேஷ் விநாயகம், ஹேரிஸ்ஜெயராஜ், பரத்வாஜ், விஜய்அந்தோனி போன்ற வளரும் இசையமைப்பாளர்களும் இளையராஜாவின் சாதனைகளை வியக்கின்றனர். வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற பாடலில் மொசார்ட்டின் ஒரு சிறிய இசை ப்ரயோகம் எடுத்து அழகுற கையாளப்பட்டு அந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை போன்றே சில நேரங்களில் சில இயக்குனர்களின் வேண்டுகோளுக்கிணங்க சில பாடல்களில் வேற்றிசை சிறிதாக புகுத்தப்பட்டிருக்கும். இளையராஜா விரும்பி செய்வது அல்ல. ஒரு கலைஞனக்கு கற்பனை வறட்சி இருந்தால் அந்த கலைஞனால் வெகு தூரம் கலைக்கடலில் நீந்த முடியாது. ஆஸ்கார் விருது பெற்ற பாடல்களை வானொலியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ கேட்டு மகிழந்ததுண்டா. ஆஸ்கார் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய தேர்வர்களின் கருத்தோட்டமே. இசை என்பது ஆஸ்கார்களுக்காக அல்லவே அல்ல என்றும் எப்பொழுதும் விரும்பி உருகும் ஆன்மாக்காளுக்காக மட்டுமே. இளையரஜா வின் இசையில் ஆன்மாக்கள் லயிப்பது கேட்பவர்கள் மட்டுமே அறிந்த உண்மை. ஒரு கலைஞன் 42 வருடங்களுக்கு பின்னாலும் தன திறமையை நிரூபிக்க முடிகிறது என்றால் அது Maestro இளையராஜா மட்டுமே. இளையராஜா என்ற இசைக் கலைஞனின் ஆக்கங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் கேட்பவரை மதி மயங்கச் செய்து இசை ரசிகரை அமைதிப்படுத்தி கேட்கும் நேரம் அவரை மகிழச்செய்வது இன்றும் இப்பொழுது இந்த உரையை எழுதும்போதும் எப்போதும் இருப்பது நிஜத்திலும் நிஜம், கடவுள் சித்தம். அது இசைக் கற்றறிந்தோராகவோ, அல்லது வெறுமனே ரசிப்பவராகவோ அல்லது கடும் உழைப்பாளியாகவோ, தொலை தூரம் பயணிக்கும் வாகன ஓட்டுபவராகவோ ஏன் சிறந்த இசைக்கலைஞராகவோ கூட இருக்கலாம் ஆனால் இவர்கள் எவருமே இளையராஜா என்ற மாபெரும் கலைஞனின் படைப்புகளை என்றுமே புறக்கணிக்க முடியாது என்பதே உண்மை. இளையராஜா என்னும் இசைக்கலைஞன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று அனைவருமே பெருமை கொள்ளலாம். ஒரு காய்கறி கடையில் காய்கள் வாங்கிய கணக்கில் திருப்தி ஏற்பட சில நிமிடங்கள் தேவைப்படும் இந்த கணிப்பொறி காலத்திலும் 3௦௦ வினாடிகளுக்கான ஒரு பாடலின் ஏற்ற இறக்கங்களை, ஆரம்ப இசையை, இடை இசையை, தாள பிரயோகங்களை ஒரு தாளில் எழுதி கலைஞர்களை வாசிக்க செய்பவர், அவர்கள் வாசிக்கும் முன்பே அந்த நாதம் எழும் முன்பே தான் தன் மனதில், மூளையில் அந்த இசை கோர்வையை வாசித்து பார்ப்பவர் இளையராஜா என்னும் மாபெரும் இசை விஞ்ஞானி மட்டுமே. அவர் விஞ்ஞானி மட்டுமல்ல ஒவ்வொரு பாடலிலும் உள்ள இசைக்கோர்வைகளின் கால நீளங்களை பார்க்கும்போது அவர் ஒரு ராமனுஜம் ஆகவும் அறியப்படுகிறார். இளையராஜா என்னும் அரிய பொக்கிஷம் அளித்த ஆண்டவனுக்கு அனேக நன்றிகள். ஒரு இசை நம்மை இவ்வுலகிலிருந்து ஒரு கண நேரம் வேறு உலகிற்கு அழைத்து செல்கின்றது எனில் அது நிச்சயமாக இளையராஜாவின் இசைப் படைப்பாகவே இருக்கின்றது அதனால் அனைத்து படைப்பாளிகளும் படைப்பாளிகள் அல்ல என்றல்ல. ஒவ்வொரு இசை அறிஞருக்கும் அவரது மிகச்சிறந்த படைப்புகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் ஆயின் இளையராஜாவின் படைப்புகள் எண்ணறவை என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே இல்லை. இளையராஜா அற்ப ஆஸ்கார்களுக்கும், கிராம்மி களுக்கும் கோல்டன் க்லோப்களுக்கும் எல்லாம் அப்பாற்பட்ட இசை விஞ்ஞானி. வீசும் காற்றை, ஒடும் ஆற்றை, காற்றில் அசையும் நாற்றை, ஆர்ப்பரிக்கும் அருவியை, மலர்களின் மணத்தை, மனித உணர்வுகளை கவலை, மகிழ்ச்சி, தயக்கம், குழப்பம், தெளிவு, எதுவாக இருப்பினும் தன் ஒப்பற்ற ஒசை எனும் இசை மூலம் மொழிபெயர்க்கும் திறம் படைத்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை விஞ்ஞானி. திருமதி. சுமதி அவர்களை ஒரு வழக்கறிஞராக துக்ளக் இதழில் கட்டுரையாளராக அறிவேன். இன்று அவர் இளையராஜாவின் இசையின் மகத்துவத்தை விளக்கும்போது அவர் மீது பெரும் மரியாதை ஏற்படுகிறது. Madam, You have won the hearts of die hard fans of Raaja. Hats off madam.
@vinothkumarpalanisamy8297
@vinothkumarpalanisamy8297 5 жыл бұрын
அண்ணா அருமை,இதை படிக்கும் போதே ராஜாவின் ரசிகன்,பக்தன் என்ற பெருமையும் கர்வமும் சேர்ந்து கண்ணீரும் வருகிறது. இசைக்கு ராஜா என்றும் எங்கள் இளையராஜா மட்டுமே.
@MadPriya1
@MadPriya1 5 жыл бұрын
Sampath sir, omg.. mind-boggling comment.
@daniesipad
@daniesipad 5 жыл бұрын
Sampath Kumar arumai ayya
@JosaphIrudayaraj
@JosaphIrudayaraj 5 жыл бұрын
"இசை என்பது ஆஸ்கார்களுக்காக அல்லவே அல்ல என்றும் எப்பொழுதும் விரும்பி உருகும் ஆன்மாக்களுக்காக மட்டுமே"... அருமை!.
@janakiraman3721
@janakiraman3721 5 жыл бұрын
Sir rompo sirappa sonnergal....naan raja voda veriyan....enakku isai patri theriyathu....aanal ilayaraja isai illamal oru naal kuda irukka mudiyathu....
@johnpeterp8723
@johnpeterp8723 4 жыл бұрын
சுமதி அவர்கள் திரைப்படத்துறைக்கு வரவேண்டியவர். இயல்பாகவே கலை அறிவு மற்றும் திறமை வாய்ந்த கலைஞராக இருக்கிறார். வாழ்க வளமுடன்.
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 4 жыл бұрын
ராஜா சார் இசையில் மணியோசையை இவ்வளவு அழகாக பயன்படுத்தி நம்மை எல்லாம் ரசிக்க வைத்துள்ளார். மணியோசையை இன்னும் எவ்வாறெல்லாம் பயன்படுத்த இருக்கிறார் என்பதை நினைத்து ஆவலாக உள்ளது. அவரின் இசையில் நான் மணியோசையை கேட்டு மிகவும் சந்தோசம் அடைந்த உங்களை போன்றோரில் நானும் ஒருவன். ராஜா சார் நமக்கு கிடைத்தது இறைவனின் வரம்.
@chandramohanm885
@chandramohanm885 4 жыл бұрын
வக்கீல் திருமதி சுமதி அவர்கள் இளையராஜா இசைப் பற்றி அழகாகவும், அருமையாகவும் விவரித்து பேசியுள்ளார்.
@divanetcorner
@divanetcorner 5 жыл бұрын
சுமதி மேடம்- பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் என்ற பாடலின் பின்னனி இசையில் வரும் மிருதங்கம், தபேலா இசை, அவதாரம் படத்தில் இடம்பெற்ற சந்திரனும் சூரியனும் என்ற பாடலில் ராஜா சார் பயன் படுத்தியிருக்கும் சிம்ஃபோனி இசை, இது போல நிறைய உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம். உங்களைப்போன்றவர்கள் சொன்னால்தான் எல்லோருக்கும் போய் சேரும்
@samasam4617
@samasam4617 5 жыл бұрын
sumathi, Ilayaraja,sang,
@truehuman9449
@truehuman9449 4 жыл бұрын
ராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் பிறந்து வளர்ந்ததே ஒரு கொடுப்பினை தான்...
@padmap5313
@padmap5313 4 жыл бұрын
அனு அனு அனுவாக ராஜாவின் ராகங்கள் , ரசனை. சிறப்பு மகிழ்ச்சி
@palanikalidasan
@palanikalidasan 4 жыл бұрын
பாடல் வரிகளையும் ,படமாக்கப்பட்ட விதங்களையும் ,இசையையும் ,இசையில் உள்ள நுனுக்கங்களையும்,பிண்ணனி இசையையும், ஆத்மார்த்தமாக ரசித்து உணர்ந்து பேசியுள்ளீர்கள் என்பதை என்னால் உங்களின் இந்த உரையாடல் மூலமாக உணரமுடிகின்றது வாழ்த்துக்கள்
@anand7921
@anand7921 5 жыл бұрын
இனி வரும் காலங்களில் இளையராஜாவின் இசையை ஆராய்ச்சி செய்து கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் எப்படி இந்த மாதிரி இசையை கொடுத்தார் என்ற கேள்விகுறி இருந்து கொண்டேதான் இருக்கும்.
@TheMpganesh2009
@TheMpganesh2009 5 жыл бұрын
True but they cannot get answer
@thebraveheartop4142
@thebraveheartop4142 5 жыл бұрын
U r crct. I'm also think abt this. What u said
@vinoth1846
@vinoth1846 5 жыл бұрын
Correcta sonninga sir
@sundarsundarsundar7617
@sundarsundarsundar7617 5 жыл бұрын
ss
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 5 жыл бұрын
கேள்விக்கு விடை கிடைக்க வாய்புண்டா.....நன்பரே..
@eswaranramasamy2478
@eswaranramasamy2478 5 жыл бұрын
என்ன ஒர் அருமையான தெளிவான நேர்த்தியான விளக்கம். அருமை சுமைதி அவர்களே.
@clivesingh7633
@clivesingh7633 4 жыл бұрын
This is the best speach I have ever heard someone analysing the music and composition. The way she explained and felt while speaking explains how she has enjoyed the music of ilayaraja. Hats off ma'am.
@maheswarank5117
@maheswarank5117 4 жыл бұрын
இசைக் கடவுள், எங்கள் இசைஞானி இளையராஜா.
@celaiyaraja
@celaiyaraja 5 жыл бұрын
ஆஹா!, ஆஹா!, நீங்கள் படித்து உருகிய விஷயங்களை, விளக்கிய விதம், கண்களை குளமாக்கியது. நன்றிகள் கோடி கோடி. வாழ்க பல்லாண்டு.
@veeraastudio4435
@veeraastudio4435 5 жыл бұрын
ஆத்மார்த்தமான ரசனை .தலை வணங்குகிறேன் தாயே .மேஸ்ட்ரோ பட்டம் கொடுக்க அந்த ஒரு பாடல் போதும் என்று சொன்னதற்காக .
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 5 жыл бұрын
இசைஞானியை எத்தனை பேர் விமர்சித்தாலும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் அவரை அசைக்க முடியாது... நன்பரே.. இசையின் இசை இளையராஜாவின் வெறியன் என்பதில் கர்வம் கொள்கின்றேன்....
@sherylmerrica2414
@sherylmerrica2414 5 жыл бұрын
Oru nalla..paaraattu...evlo..music knowledge.. Am already yr fan.. Very proud of you...super madam
@senthilponn859
@senthilponn859 4 жыл бұрын
எனக்கு பிடித்தமான பாடல் வரிகளும் & இசையை பற்றியும் அழகான மற்றும் மிகைப்ப்டுத்தாத பேச்சு. சிம்பிள் சூப்பர்.
@cannalingambirabakaran1763
@cannalingambirabakaran1763 5 жыл бұрын
இளையராஜா என்னும் இசைக்கலைஞன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம், உங்களுக்கெல்லாம் இளையராஜா தெரியாது என நினைத்திருந்தேன்.நன்றி
@LiveCoimbatore
@LiveCoimbatore 3 жыл бұрын
அடேங்கப்பா... ராசைய்யாவின் இசையை...இளையராசய்யாவின் இசையை இப்படி யாராவது அணு அணுவாக ரசித்து ருசித்து விவரித்திருக்க முடியுமா? என்பது அய்யமே...? அருமை சகோதரி சுமதி அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்...
@Cheravanji
@Cheravanji 5 жыл бұрын
Lovely speech! One of a best fan of raja sir!! My love and respect to you mam. Brilliant speech. Brilliant. Advocating for maestro , in any day is the best day in life!
@ankithdas
@ankithdas 5 жыл бұрын
Sumathi speaks very nicely with feeling on behalf of all of us. Thanks Sumathi. The truth behind the phenomenon called Raja is: The Supreme Divine being is the source of everything, including sound. Music is also from Him. He sends it through some blessed vessals (humans) for the rest of us - and Illaiyaraaja is one of them who lives in our own lifetime. This is why 1. Raja's "creative genius" can never be measured or understood. take any song . 2. This is also why even Raja struggles to de-mystify his genius in his own words 3. also why he is so misunderstood and called arrogant when he comes across as calling himself a god/demigod. What he means is he is a channel an I personally always only take it that way. Please re-listen his words/interviews in this new light and you will understand. 4.That is also why all our collective hearts are drawn to his music compositions despite the general frivolousness of the medium (cinema). 5. That is also why the 'puritans of classical music' had been forced to openly accept Raja during his earlier years; and in later years treated him as a living legend by the next generations of those same purists. Their heads may have resisted but their hearts secretly (and then openly) melted. So many next-gen currently carnatic musicians do their PhD on his work today despite the film format of his work. (It is said Semmangudi Srinivasa Iyer the doyen of Carnatic music from the 1930-1990s era) is said to have kept a photo of Raja in his bedroom along with the Trinity of Carnatic music ... and non-film people like writer Sujatha and harsh critics like Subbudu took to Raja very dearly, what to talk of the film world) One song janani janani is enough to tell some one where such music orginiates from . .. God. 6. This is also why the flow from the divine has slowed down through Raja in later years. Like a tap turned off / down. If this is not true, we will see Raja create hit after hit at will even today - but he cannot - that time has passed. Raja can still surprise us now and then but he has already done enough. So all our credit giving and thanks [for Raja's presence in Tamil country and his hard creative work] should go to God.[Ella puhzum Iraivanukke. As ARR would say] Let's have a loving prayer for Raja's good health and well being during his remaining years. There seems the only 2 things all of us can do in studying the phenomenon -- become more God conscious in life and realize everything come from Him, and thank Raja who accepted the gift flowing through him and worked hard to distribute it.
@dharmalingamjaishankar6702
@dharmalingamjaishankar6702 5 жыл бұрын
Well said...we love raja sir...
@zamselvachandran2212
@zamselvachandran2212 4 жыл бұрын
சில்லிடும் பாடல்களுக்கு துள்ளிடும் குறிப்போடு மெல்லிடையானதொரு விளக்கம்..! வாழ்த்துக்கள்..!
@balasubramanian288
@balasubramanian288 5 жыл бұрын
To speak about RAAJA ANNA's music Five janmas ( five lifetimes) are not enough. Thanks for this video. Superb talk. Madam what knowledge you have? excellent. LORD please give RAAJA ANNA a long and happy life.
@kalisseenu6904
@kalisseenu6904 5 жыл бұрын
இசைஞானி ஐயா இந்த இரசிகையை கூப்பிட்டு பாராட்டவும்..👌👌
@manivannangopalan6504
@manivannangopalan6504 5 жыл бұрын
ஸ் படிக மயமான உரை சுமதி மேடம்
@rameshsundaram08
@rameshsundaram08 5 жыл бұрын
Wow.
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 жыл бұрын
@@manivannangopalan6504 நல்ல வார்த்தை ஜா லம்!
@sampathkumar6096
@sampathkumar6096 5 жыл бұрын
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோரு composing style...MSV இரண்டு சரணங்களுக்கான இடை இசையை ஒரே மாதிரி அமைத்திருப்பார்... ஆனால் இளையராஜா இடை இசையை ஒன்றுக்கொன்று வேறு விதமாய்..ஆனாலும் அதேசமயம் அப்பாடலின் மைய அச்சை விட்டு விலகாமல் ரசிக்கும்படி அமைத்திருப்பார்... பாடலின் துவக்க இசையிலேயே அப்பாடலின் சூழலையும் அப்பாடல் ஏற்படுத்த வேண்டிய உணர்வையும் அறிமுகப்படுத்தி விடுவார். பாடல் ஒலிக்கும் அந்த 300 வினாடிகளும் அப்பாடல் உணர்த்த வேண்டிய உணர்வுத் தாக்கத்திலிருந்து இம்மியளவும் பிசகாமல் இருக்கும்படியான மெட்டமைப்பு இருக்கும்... ஒலிக்கருவிகளின் தேர்வும், அவ்வொலிக்கருவிகளின் நுழைவு மற்றும் பின் வாங்கல்களும் மிகவும் நேரத்தியாக இருக்கும் படி செய்வதில் இளையராஜாவிற்கு நிகர் இளையராஜாவே.... வார்த்தைகளற்ற இளையராஜாவின் மெட்டுகளுக்கு உயிர்ப்பு எப்போதும் உண்டு...தாள அமைப்புகளில் விவரிக்க இயலாத கணக்கீடுகள், மற்றும் காலப்பிரமாணங்கள் complex rhythm patterns...வைப்பதில் தன்னிகரற்றவர்....
@shanmugamravi3224
@shanmugamravi3224 4 жыл бұрын
Wow
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 4 жыл бұрын
Excellent
@lakshmipriya6521
@lakshmipriya6521 4 жыл бұрын
தன்னிகரற்றவர் இந்த ஒரு வார்த்தையில் உங்கள் குணம், பண்பு, உங்களது ஆழ்ந்த சிந்தனை இவை அனைத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது... நன்றி ஐயா... இளையராஜா என்னும் மாமனிதர் இல்லை என்றால் பல பேர் மனநல காப்பகத்தில் தான் இருக்க வேண்டி இருக்கும்...
@sampathkumar6096
@sampathkumar6096 4 жыл бұрын
@@lakshmipriya6521 நன்றி.. நான் என்னோட மேதாவிலாசத்தை வெளிப்படுத்தவில்லை... இவை மட்டும் அல்ல நான் சொல்லாத சொல்ல மறந்த சிறப்புகளும் இசை மேதை இளையராஜா அவர்களின் இசையில் உண்டு... நன்றி.. 🙏
@nagarajuthayappa8329
@nagarajuthayappa8329 5 жыл бұрын
I am diehard fan of Maestro and also you ,great speech and way of admiring the great living legend .I love your talents as a good speech and knowledge on music.
@gurubhramma7026
@gurubhramma7026 5 жыл бұрын
Mam பேசினாலே மனசு பேச ஆரம்பிச்சதும் மனசு மகிழம்பூவால. பூத்துக்கெடக்கும். ரசனைகளை உற்பத்திபன்னவோ ஊக்குவிக்கவோ Mamபோன்ற ஒரு சிலரால்தான் முடியும். ஆசிரியர் ஆத்மார்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.மேடமை இவ்ளோ குறவை பேச வைத்த உங்களுக்கு மிக மிக சொல்லமான கண்டனங்கள். மேம்முக்கும் என் பணிவான வணக்கங்கள் நன்றிகள் வாழ்த்துக்கள்
@thangamanisrirengan
@thangamanisrirengan 4 жыл бұрын
காற்றாரை கற்றாரே போற்றுவர்😍
@kashinathana9487
@kashinathana9487 3 жыл бұрын
கற்றோரை கற்றோரே போற்றுவர்!
@qtr567
@qtr567 4 жыл бұрын
Sumathi's this speach from heart this time. We can feel the same in many location in this video. மூச்சு முட்டுது பல இடங்களில்........
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 жыл бұрын
What an intellectual speech about music....that too Mastro's master pieces. Great Sumathi Madam.
@uthayshop6468
@uthayshop6468 4 жыл бұрын
அருமை அருமை..இசையை அனுபவித்து அருவிபோல் தமிழ் கொண்டு வார்த்து இருக்கின்றிகள்...
@gnanamgnam3128
@gnanamgnam3128 5 жыл бұрын
யார்யா இந்த. ராட்சசி???அருமையான. பேச்சு சுமதி மேம்
@prasannar3789
@prasannar3789 4 жыл бұрын
What an excellent speech and interpretation of maestro's songs. Hats off madam. Enjoyed thoroughly.very insightful👌👌👌
@user-xz2oe7si5k
@user-xz2oe7si5k 5 жыл бұрын
யாரிந்த அம்மா ,, பிரமாண்ட ஆராய்ச்சி ,, அட்டகாசமான விளக்கம் ,,
@chandrashekarr1977
@chandrashekarr1977 5 жыл бұрын
By profession she is a lawyer named Sumathi. She had written for Thuglak magazine for some time in the past.
@divanetcorner
@divanetcorner 5 жыл бұрын
இசையறிந்தவர்கள் பேசக்கேட்பது ஒரு தனிச்சுவை. சுமதி அவர்கள் ஒரு சகலகலாவள்ளி என்பதில் ஐயமில்லை. அருமையான ஒரு திறனாய்வு. keep it up Madam
@santhanamkrishnan759
@santhanamkrishnan759 5 жыл бұрын
சகலகலாவல்லி வள்ளி அல்ல
@divanetcorner
@divanetcorner 4 жыл бұрын
@@santhanamkrishnan759 thanks for correcting me
@rameshv6479
@rameshv6479 3 жыл бұрын
அம்மா நீங்கள் நீடுழி வாழ வேண்டும் நீங்கள் இசை கடவுள் பற்றி பேசியது கேட்ட போது சந்தோஷத்தில் கண்ணீர் வழிந்தது வார்த்தை இல்லை
@anbumani7531
@anbumani7531 4 жыл бұрын
பயன் உள்ள தகவல் மிக்க நன்றி அம்மா
@sampathkumar6096
@sampathkumar6096 5 жыл бұрын
பண்ணைபுரம் என்கிற ஒரு கிராமத்திலேருந்து பிறந்து ...எந்த சுய முன்னேற்றத்துக்கும் வாய்ப்பில்லாத பகுதியில் பிறந்து.... இசையை .. நம் கர்நாடக பாரம்பரிய சாஸ்த்ரீய இசையையும், மேற்கத்திய சாஸ்த்ரீய இசையையும் முறையாகக் கற்று, கிளாசிக் கிடார் ல் 8 grade gold medal வாங்கி திரை இசையில் அதை அழகுறப் புகுத்தி திரை இசை கேட்பதை ஒரு இனிமையான விஷயமாக மாற்றிய பெருமை இளையராஜாவையே சேரும், இளையராஜா அவர்கள் இசையை உருவாக்குவதே ஒரு அலாதியான விஷயம். ஓவ்வொரு இசைக்கருவிக்குமான காலப்ரமாணம், ஏற்ற இறக்கங்களை Score Sheet என்று சொல்லகூடிய இசைக் குறிப்பேட்டு தாளில் Notations என்று கூறக்கூடிய இசைக் குறிப்புகளை தெளிவாக எழுதி, இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் தரச்செய்து அவற்றை வாசிக்கப் பயிற்சி எடுக்கச் செய்து வாசிப்பு பயிற்சி முற்று பெற்று அவர்கள் தயாரானவுடன் இசைக் கலைஞர்கள் வாசிப்புடன் குரல் பதிவும் முடிந்து அந்த பாடல் முழுமை பெற்று அந்த பாடல் சேர்ப்புக்கு தயராகிவிடும். தான் ஒரு guitar இசைக் கலைஞர் என்பதால் பொதுவாக strings என்றால் embellishment என்று சொல்லக் கூடிய கை அசைவைக் கூட குறிப்பிட்ட ஒலிக்கோர்வையை உருவாக்குவதற்கு எழுதிக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர் இளையராஜா. உலக இசை மேதைகள் JohnScot போன்றோர் இளையராஜாவின் Re-recording வேகத்தை கண்டு அதிசயத்தவர்கள். வடக்கிந்திய இசை யமைப்பாளர்கள் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலின் ஆரம்ப இசையை குறிப்பிற்கு தகுந்தவாறு வாசித்தபின் எழுந்து நின்று கை தட்டி பாராட்டியது வரலாறு. ஒரு கலைஞனின் திறமையை உணர்வதற்கு இரு தகுதிகள் குறைந்தபட்சம் தேவை. ஒன்று தான் இன்னொரு கலைஞனாக இருப்பது அல்லது அக்கலையை விருப்பு வெறுப்பு இன்றி ரசிக்க கூடிய ரசிகனாக இருப்பது மிகவும் அவசியம். இதில் குறை காண்பவர்கள் எந்த ரகம் என்று இன்னும், தெரியவில்லை. இளையராஜா அவர்கள் இசையமைத்த nonfilmy albums ரமணமாலை, How to Name it? Nothing But Wind, India 24 Hours போன்றவை இசை ரசிகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப்படுகிறது. திரு SPB அவர்கள் கூறியது போன்று.. Ilaiyaraaja is self taught self made musician என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை...
@gowsalya.m1470
@gowsalya.m1470 4 жыл бұрын
Thanks sir
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 4 жыл бұрын
உங்கள் பதிவு படிக்க படிக்க மிகவும் ரம்மியமாக இருந்தது இன்னும் எழுதிஇருக்கலாம். நன்றி
@sampathkumar6096
@sampathkumar6096 4 жыл бұрын
@@srinivaasanrajha6092 மிக்க மிக்க நன்று... இதே பெயரில் (சம்பத்குமார்) இன்னும் இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன்... ராஜாவைப் பற்றி எழுவதெனில் அசரமாட்டேன்... கரும்பு தின்னக் கூலியா? உங்களுக்காக... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோரு composing style...MSV இரண்டு சரணங்களுக்கான இடை இசையை ஒரே மாதிரி அமைத்திருப்பார்... ஆனால் இளையராஜா இடை இசையை ஒன்றுக்கொன்று வேறு விதமாய்..ஆனாலும் அதேசமயம் அப்பாடலின் மைய அச்சை விட்டு விலகாமல் ரசிக்கும்படி அமைத்திருப்பார்... பாடலின் துவக்க இசையிலேயே அப்பாடலின் சூழலையும் அப்பாடல் ஏற்படுத்த வேண்டிய உணர்வையும் அறிமுகப்படுத்தி விடுவார். பாடல் ஒலிக்கும் அந்த 300 வினாடிகளும் அப்பாடல் உணர்த்த வேண்டிய உணர்வுத் தாக்கத்திலிருந்து இம்மியளவும் பிசகாமல் இருக்கும்படியான மெட்டமைப்பு இருக்கும்... ஒலிக்கருவிகளின் தேர்வும், அவ்வொலிக்கருவிகளின் நுழைவு மற்றும் பின் வாங்கல்களும் மிகவும் நேரத்தியாக இருக்கும் படி செய்வதில் இளையராஜாவிற்கு நிகர் இளையராஜாவே.... வார்த்தைகளற்ற இளையராஜாவின் மெட்டுகளுக்கு உயிர்ப்பு எப்போதும் உண்டு...தாள அமைப்புகளில் விவரிக்க இயலாத கணக்கீடுகள், மற்றும் காலப்பிரமாணங்கள் complex rhythm patterns...வைப்பதில் தன்னிகரற்றவர்....
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 4 жыл бұрын
@@sampathkumar6096 தொடர்ந்து எழுதுங்கள் நன்றி, வாழ்த்துக்கள்
@sampathkumar6096
@sampathkumar6096 4 жыл бұрын
@@srinivaasanrajha6092 இந்திய இசைக்கலைஞர்களான நௌஷத், சலீல் சௌத்ரி, R.D.பர்மன், லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால், அலிஷா, பீம்சேன் ஜோஷி, ஹரிப்ரசாத் சௌரஸ்யா, கர்நாடக இசைக் கலைஞர்களான செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், சுப்புடு, சுதா ரகுநாதன், T.N.சேஷ கோபாலன், நித்யஸ்ரீ, பட்டியல் நீள்கிறது. அனைவரின் பாராட்டையும் ஒருங்கே பெற்றவர் இளையராஜா. தற்போதுள்ள தேவிஸ்ரீ பிரசாத், இமான், ஜேம்ஸ் வசந்த், ரமேஷ் விநாயகம், ஹேரிஸ்ஜெயராஜ், பரத்வாஜ், விஜய்அந்தோனி போன்ற வளரும் இசையமைப்பாளர்களும் இளையராஜாவின் சாதனைகளை வியக்கின்றனர். வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற பாடலில் மொசார்ட்டின் ஒரு சிறிய இசை ப்ரயோகம் எடுத்து அழகுற கையாளப்பட்டு அந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை போன்றே சில நேரங்களில் சில இயக்குனர்களின் வேண்டுகோளுக்கிணங்க சில பாடல்களில் வேற்றிசை சிறிதாக புகுத்தப்பட்டிருக்கும். இளையராஜா விரும்பி செய்வது அல்ல. ஒரு கலைஞனக்கு கற்பனை வறட்சி இருந்தால் அந்த கலைஞனால் வெகு தூரம் கலைக்கடலில் நீந்த முடியாது. ஆஸ்கார் விருது பெற்ற பாடல்களை வானொலியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ கேட்டு மகிழந்ததுண்டா. ஆஸ்கார் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய தேர்வர்களின் கருத்தோட்டமே. இசை என்பது ஆஸ்கார்களுக்காக அல்லவே அல்ல என்றும் எப்பொழுதும் விரும்பி உருகும் ஆன்மாக்காளுக்காக மட்டுமே. இளையரஜா வின் இசையில் ஆன்மாக்கள் லயிப்பது கேட்பவர்கள் மட்டுமே அறிந்த உண்மை. ஒரு கலைஞன் 42 வருடங்களுக்கு பின்னாலும் தன திறமையை நிரூபிக்க முடிகிறது என்றால் அது Maestro இளையராஜா மட்டுமே. இளையராஜா என்ற இசைக் கலைஞனின் ஆக்கங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் கேட்பவரை மதி மயங்கச் செய்து இசை ரசிகரை அமைதிப்படுத்தி கேட்கும் நேரம் அவரை மகிழச்செய்வது இன்றும் இப்பொழுது இந்த உரையை எழுதும்போதும் எப்போதும் இருப்பது நிஜத்திலும் நிஜம், கடவுள் சித்தம். அது இசைக் கற்றறிந்தோராகவோ, அல்லது வெறுமனே ரசிப்பவராகவோ அல்லது கடும் உழைப்பாளியாகவோ, தொலை தூரம் பயணிக்கும் வாகன ஓட்டுபவராகவோ ஏன் சிறந்த இசைக்கலைஞராகவோ கூட இருக்கலாம் ஆனால் இவர்கள் எவருமே இளையராஜா என்ற மாபெரும் கலைஞனின் படைப்புகளை என்றுமே புறக்கணிக்க முடியாது என்பதே உண்மை. இளையராஜா என்னும் இசைக்கலைஞன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று அனைவருமே பெருமை கொள்ளலாம். ஒரு காய்கறி கடையில் காய்கள் வாங்கிய கணக்கில் திருப்தி ஏற்பட சில நிமிடங்கள் தேவைப்படும் இந்த கணிப்பொறி காலத்திலும் 3௦௦ வினாடிகளுக்கான ஒரு பாடலின் ஏற்ற இறக்கங்களை, ஆரம்ப இசையை, இடை இசையை, தாள பிரயோகங்களை ஒரு தாளில் எழுதி கலைஞர்களை வாசிக்க செய்பவர், அவர்கள் வாசிக்கும் முன்பே அந்த நாதம் எழும் முன்பே தான் தன் மனதில், மூளையில் அந்த இசை கோர்வையை வாசித்து பார்ப்பவர் இளையராஜா என்னும் மாபெரும் இசை விஞ்ஞானி மட்டுமே. அவர் விஞ்ஞானி மட்டுமல்ல ஒவ்வொரு பாடலிலும் உள்ள இசைக்கோர்வைகளின் கால நீளங்களை பார்க்கும்போது அவர் ஒரு ராமனுஜம் ஆகவும் அறியப்படுகிறார். இளையராஜா என்னும் அரிய பொக்கிஷம் அளித்த ஆண்டவனுக்கு அனேக நன்றிகள். ஒரு இசை நம்மை இவ்வுலகிலிருந்து ஒரு கண நேரம் வேறு உலகிற்கு அழைத்து செல்கின்றது எனில் அது நிச்சயமாக இளையராஜாவின் இசைப் படைப்பாகவே இருக்கின்றது அதனால் அனைத்து படைப்பாளிகளும் படைப்பாளிகள் அல்ல என்றல்ல. ஒவ்வொரு இசை அறிஞருக்கும் அவரது மிகச்சிறந்த படைப்புகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் ஆயின் இளையராஜாவின் படைப்புகள் எண்ணறவை என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே இல்லை. இளையராஜா அற்ப ஆஸ்கார்களுக்கும், கிராம்மி களுக்கும் கோல்டன் க்லோப்களுக்கும் எல்லாம் அப்பாற்பட்ட இசை விஞ்ஞானி. வீசும் காற்றை, ஒடும் ஆற்றை, காற்றில் அசையும் நாற்றை, ஆர்ப்பரிக்கும் அருவியை, மலர்களின் மணத்தை, மனித உணர்வுகளை கவலை, மகிழ்ச்சி, தயக்கம், குழப்பம், தெளிவு, எதுவாக இருப்பினும் தன் ஒப்பற்ற ஒசை எனும் இசை மூலம் மொழிபெயர்க்கும் திறம் படைத்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை விஞ்ஞானி. திருமதி. சுமதி அவர்களை ஒரு வழக்கறிஞராக துக்ளக் இதழில் கட்டுரையாளராக அறிவேன். இன்று அவர் இளையராஜாவின் இசையின் மகத்துவத்தை விளக்கும்போது அவர் மீது பெரும் மரியாதை ஏற்படுகிறது. Madam, You have won the hearts of die hard fans of Raaja. Hats off madam.
@smouttayan
@smouttayan 3 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த பாடல் இசையில் தொடங்குதம்மா இளையராஜாவை பற்றிய உங்கள் பேச்சு மெய்சிலிர்க்கிறது.
@malarvannansubramanian1569
@malarvannansubramanian1569 5 жыл бұрын
Beautiful & positive speech!! Amazed to see the way she liked/loved even minute things in music/lyrics❤️❤️ Raajaa Rulezzz!! ❤️❤️
@sathyatamilan5337
@sathyatamilan5337 4 жыл бұрын
What a defination of music of my raja .i wonder you mam,we love you.by raja veriyan
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
அம்மா வணக்கம் நீங்கள் திரை இசை ரசிகை யாய் இருப்பதில் ரெம்ப பெருமையாய் இருக்கிறது.நன்றி....
@sivakumarramalingam3390
@sivakumarramalingam3390 4 жыл бұрын
சுமதி அவர்களுக்கு இவ்வளவு திறமையா!
@deyvaraja2513
@deyvaraja2513 5 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி அம்மா
@santhakumart5330
@santhakumart5330 5 жыл бұрын
உங்கள் இசை அறிவு அபாரம்
@vadalurmskarthiktv3154
@vadalurmskarthiktv3154 5 жыл бұрын
எப்போதும் இளமையான இசை இசைஞானியார் இசை
@anuradhashanmugam9595
@anuradhashanmugam9595 5 жыл бұрын
Madam wonderful speech, I know you as advocate, but your music knowledge, is awesome. Hats off. No doubt you are multifaceted person.
@muralitharanm4904
@muralitharanm4904 4 жыл бұрын
என்றும் எங்கள் ராஜா
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 жыл бұрын
அருமை... அருமை அம்மா...👌👌👌இளையராஜா இந்த உலகுக்கு கிடைத்த பொக்கிஷம்.... போற்றி பாதுகாத்து வைக்க வேண்டும்...🙏🙏🙏🙏🙏🙏
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 5 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் சகோதரி அவர்களே. நன்றி
@rameshprabhu5272
@rameshprabhu5272 5 жыл бұрын
நீங்களே அய்யா அவர்களின் பாடலை எடுத்து விரிவாக youtube இல் வீடியோ போடுங்க..... நன்றி..... அருமை....
@manikandanshanmugaiah8670
@manikandanshanmugaiah8670 5 жыл бұрын
Superb Mam... True Speech for Maestro ilaiyaraja....
@elangovanarunachalam6490
@elangovanarunachalam6490 5 жыл бұрын
Excellent speech madam. Extraordinary musical taste and knowledge. Hats off to you
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 5 жыл бұрын
First of its kind speech about Raja sir... she reflects what each of the Raja fans realise when listening to these songs, but can’t express it to others...
@jeevarathinamjeevarathinam2863
@jeevarathinamjeevarathinam2863 5 жыл бұрын
Good explanations mam.thankyou.what a great music legend maestro performance mam!
@vj7021
@vj7021 5 жыл бұрын
Respect!!!!! That’s the only word I could find for you. It could be what you have in Raaja sir or what as his fan I have for you. 🙏🏾🙏🏾🙏🏾
@janakiraman3721
@janakiraman3721 5 жыл бұрын
Amma neengal engal rajavai patri migavum arumaiyaga pathivu seithu vittergal...
@vinoth1846
@vinoth1846 5 жыл бұрын
I love you meastro isaingani Dr.Ilayaraja...!!
@user-lw9nv6uk1e
@user-lw9nv6uk1e 2 жыл бұрын
நான் பிறந்த ஒலியை கேட்கும் வயதில் ஞானியின் ஆலாபனை ஆரப்பித்தது.
@saravanant9209
@saravanant9209 4 жыл бұрын
Which is why, MUSIC KING IS STILL NO. 1 INCOMPARABLE & UNBEATABLE!!!
@arula9794
@arula9794 5 жыл бұрын
Arumbum thalire, Ooradangum saamathilae, Malayil yaaro - are in my list of listening everyday before sleeping. Such a lovely compositions.
@manikamjayaraman
@manikamjayaraman 2 жыл бұрын
என்ன ஒரு ஞாபக சக்தி முழு ரசிக்கும் தன்மை திருமதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 жыл бұрын
மேடம் மிகமிக சூப்பராக பேசுகிறீர்கள் பாடல்வரிகளை எப்படித்தான் ஞாபகம் வைத்துக் கொள்கிறீர்களோ
@muthukrishnanm
@muthukrishnanm 5 жыл бұрын
Ooradangum saamathile is my favourite also
@jvpcm6923
@jvpcm6923 3 жыл бұрын
இசை கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்ற முழு திறமையும் உங்களுக்கு இருக்கு 👌 🙏
@berabagaranr
@berabagaranr 4 жыл бұрын
அட்ரா சக்கை ..இந்த அக்கா சொல்றப்ப அப்படியே நிறுத்திட்டு நிறுத்திட்டு ..இன்னொரு பக்கம் அந்த அந்த பாட்டு தேடி பாத்துட்டு வந்துட்டேன் ...நமக்கு இளையராஜா பாட்டு பிடிக்கும் ..அந்த பாட்டுல இருக்கற நுணுகிங்கள் சொல்லும் பொது , அப்படியே புல்லரிக்குது பா ....இளையராஜாடா!!
@rajaindia6150
@rajaindia6150 4 жыл бұрын
Semma brother
@B.Natesan
@B.Natesan 3 жыл бұрын
Me too
@manavalanashokan343
@manavalanashokan343 5 жыл бұрын
one of the great Raja's great fan
@manjunathanjeni1435
@manjunathanjeni1435 3 жыл бұрын
20 முறையாவது கேட்டிருப்பேன்....இனிய வாழ்த்துக்கள் அம்மா
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
Raja sir பற்றி யார் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும். இவர்களைப்போன்ற முதல் வரிசை ரசிகர்கள் Raja sir பற்றி பேசும் போது நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
@TheRamas4
@TheRamas4 5 жыл бұрын
There is no other music composer in the world who can match our Maestro. He has given gems that will require ages to analyse and understand and cherish.
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 4 жыл бұрын
Oh my god....Excellent thanks for telling about RAJA sir..
@jaypee83ster
@jaypee83ster 4 жыл бұрын
Sama sama madam deep understood of the song ❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾I love that song same 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@allunthulasi1805
@allunthulasi1805 5 жыл бұрын
Madam I have found new Sumathi from this speech. Your experience and enjoyment in song is Marvellous. Thanks Thanks a lot....
@vijayragavan1491
@vijayragavan1491 5 жыл бұрын
Music God ilayaraja
@mynexon2441
@mynexon2441 4 жыл бұрын
Vijay Ragavan lo to
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 5 жыл бұрын
Sumathi amma super ma God bless you and your family ma
@krishnamurthykesavan2878
@krishnamurthykesavan2878 3 жыл бұрын
wow great talk the power of good talk is it always gives a clear picture in listeners mind and ur talk gives mam 👍👍👍👍👍
@MELODiESYourSfavourite
@MELODiESYourSfavourite 4 жыл бұрын
Superb Speech.... mesmerizing
@sukumarank7595
@sukumarank7595 4 жыл бұрын
அசத்தல்...அருமை..
@ganeshr2015
@ganeshr2015 4 жыл бұрын
Super medam very true about Raja sir.
@vishnumn7098
@vishnumn7098 5 жыл бұрын
Good morning, Madame. With folded hands I humbly prostrate before you for your respect towards the Film Music Incarnate - Sri Raja Sir!
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj 4 жыл бұрын
அருமை பேச்சு வாழ்த்துக்கள்
@rameshrajaram4657
@rameshrajaram4657 3 жыл бұрын
வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ பாடல் ஒரு மலைகிராமத்து நாட்டுபுறபாடல் அதில் இடையில் வரும் SAXOPHONE எப்படி என்ன அருமை இசைஞானியார் இசைஞானியார் தான் இவர் எங்கப்பன் சிவபெருமான் இவர் மலையப்ப சாமி
@rajasekaransekaran1714
@rajasekaransekaran1714 5 жыл бұрын
சாலமன் பாப்பய்யா வுக்கும் சுமதி அம்மாவும் இணைந்து"பட்டி மன்றம் வேண்டும் அவா்களின் தகராறு முடிவு வேண்டும்
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 5 жыл бұрын
அருமை
@jaybeesarah307
@jaybeesarah307 5 жыл бұрын
மேடம் பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 жыл бұрын
All rounder Advocate Enna solla vaazhi nalam suzha sumathy sister 👌👌👌👌👌👌👍
@artistraja7623
@artistraja7623 5 жыл бұрын
அருமை.. அருமை.. அருமை...!
@nagarajnagarajan5787
@nagarajnagarajan5787 5 жыл бұрын
Thank you sumathi madum
@arulprakasam4451
@arulprakasam4451 3 жыл бұрын
அற்புதமான பேச்சு.
@reghuramand2673
@reghuramand2673 Ай бұрын
இசைஞானிக்கு பாரத் ரத்னா விருதுக்கு பல வருடங்களுக்கு முன்பே தகுதிபெற்றவர். பல ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர்.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 46 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
A RARE INTERVIEW OF ILAYARAJA ( இளையராஜா )
42:54
Shiran Mather
Рет қаралды 163 М.