தம்பி... | நா.முத்துக்குமார் | பவா செல்லதுரை | Bava Chelladurai | Part - 1 | Na. Muthukumar

  Рет қаралды 85,523

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி பவா. செல்லதுரை பேச்சு
Bava Chelladurai | Part - 1 | Na. Muthukumar
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 221
@senthilnathansp5387
@senthilnathansp5387 4 жыл бұрын
நான் ஓரு முறை இரண்டு வெளிநாட்டு நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன்.ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும், மற்றவர் ஆப்ரிக்காவையும் சேர்ந்தவர்.அப்போது நான் நா.முத்துக்குமாரின், சத்தம் போடாதே படத்தில் இடம்பெற்ற பேசுகிறேன்,பேசுகிறேன் என்ற பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். இந்தப் பாடலின் அர்த்தம் என்ன என்று கேட்டார் அதில் ஒரு நண்பர். நான் பின் வரும் வரிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன்" கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இலைப்பாற இடமே இல்லை சலைக்காமலே கண்டம் தாண்டுமே.முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால் முடிவென்பதே ஆரம்பமே...." இதைக் கேட்ட உடன் அவர்கள் இருவரும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றனர்.ஒரு சினிமா பாடலில் இத்தனை பெரிய தத்துவத்தை, நம்பிக்கையை,முயற்சியை வெளிப்படுத்திய முகமறியாக் கவிஞனை வியந்து வியந்து பாராட்டினர். நா.முத்துக்குமார் தமிழில் எழுதிய உலக கவிஞன்.....
@spssaran
@spssaran 4 жыл бұрын
well said 👍
@trollingtamilanchannel4949
@trollingtamilanchannel4949 2 жыл бұрын
🥺😳😳😳💗💓🤞
@rjartscbe
@rjartscbe 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@murugadossdirector
@murugadossdirector 4 жыл бұрын
நா.முத்துக்குமார் பற்றிய பதிவு அவரோடு பணிபுரிந்த நாட்களை நினைவுகூற வைத்தது பவா சார்..கண்கலங்க வைக்கும் பதிவு.!
@ndbinny70
@ndbinny70 3 жыл бұрын
Absolutely true AR doss .
@krishnaveniteacher1643
@krishnaveniteacher1643 3 жыл бұрын
வணக்கம் sir
@stareagles6448
@stareagles6448 2 жыл бұрын
Sir is that u
@natarajand.natarajan2435
@natarajand.natarajan2435 Жыл бұрын
Yes sir
@sarathkumarsubbaiyan6582
@sarathkumarsubbaiyan6582 4 жыл бұрын
நா.முத்துக்குமாரை பிடிக்காது என்று சொன்ன ஒருவரை கூட இதுவரை நான் பார்த்ததில்லை
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 4 жыл бұрын
பார்த்ததில்லை பார்க்க போவதும் இல்லை அப்படி ஒருவர் பிறக்க போவதும் இல்லை.
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 3 жыл бұрын
Na muthukumar Pudikathu
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
நான் முதல் முதலாக யார் இந்த பாடலை எழுதியது என்று பார்த்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் 💟💚💜💕
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
நான் மிகவும் விரும்பிய இளம்கவிஞர் முத்துக்குமாா்....❣❣❣❣❣❣❣
@rameshkumarcrk3351
@rameshkumarcrk3351 4 жыл бұрын
நா முத்துக்குமார் அவர்களின் கவிதைகளில் ஐந்தாம் வகுப்பு அ பிரிவு எனக்கு பிடித்த கவிதை
@prabak83
@prabak83 4 жыл бұрын
கற்றது தமிழ் பட பாடல்கள் அனைத்துமே கவிதை தான்...
@vijayadurai_govindan
@vijayadurai_govindan 4 жыл бұрын
'அணிலாடும் முன்றில்' ஒரு புத்தகம் போதும், உன்னை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க...
@manoharanpitchai3103
@manoharanpitchai3103 4 жыл бұрын
பவா சார், தங்களின் எழுத்து வேலைக் கிடையே நேரம் ஒதுக்கி கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களைப் பற்றிய எண்ணங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@saravanans5111
@saravanans5111 3 жыл бұрын
Na muthukumar sir pathi inum therinjukanum sir
@prakashg6574
@prakashg6574 4 жыл бұрын
காலம் முத்துக்குமாருக்கு மற்றுமொரு கால் நூற்றாண்டை கொடுக்கத் தவறி விட்டது இழப்பு என்னவோ வாழும் மனிதருக்கு தான்
@puduvaikaruna231970
@puduvaikaruna231970 4 жыл бұрын
நீண்ட காலம் வாழ இயற்கை ஆசிர்வதித்தாலும் சமூக சூழல் மாமனிதனை கரைத்துவிட்டதாக கருதுகிறேன்....
@gvestates
@gvestates 4 жыл бұрын
அருமை பதிவு. இட்லி கவிதை. ஆழமான வரிகள்
@SakthiC
@SakthiC 4 жыл бұрын
idlykal kolkaiyatravargal
@MathanHimadri
@MathanHimadri 4 жыл бұрын
நா.முத்துகுமார் இடத்தை நிரப்ப இன்னும் எத்தனைப் பேர் வந்தாலும் முடியாது. உவமைகளும் இசையுடன் அழகாக உட்காரும் தமிழ் யாரும் எழுதாதது. ❤
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 4 жыл бұрын
வணக்கம் பவா. வழக்கம்போல நான் முத்துக்குமாரின் கவிதைகள் எதையும் வாசித்ததில்லை. எல்லோரையும் போல எனக்கும் அவர் திரைப்பட பாடலாசிரியர் ஆக மட்டுமே அறிமுகம். அவரின் ஆனந்த யாழ் எனக்கு பிடித்த பாடல். அவரை நிறைய நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சியில் பார்த்ததுண்டு. அப்பொழுது அவர் முகம் பேரமைதியாகவோ அல்லது நூலிழை சோகம் உள்ளடங்கியதாகவோ இருப்பதாய் தோன்றும் எனக்கு. திரைப்பட துறைக்கே உண்டான துள்ளல் எள்ளல், நாகரீகப் பூச்சு எதுவும் இல்லாமல் இருப்பார். சில மனிதர்கள் உயிரோடு இருக்கும் போது ‌ அற்பமாய் தெரிவர். அவர்களுடைய மரணத்திற்கு பிறகு விஸ்வரூபம் எடுப்பர். அப்பொழுது பாரதி. இப்போது நா. மு மற்றும் ‌கா.சி.........நூறு வருடம் வாழ்ந்து உண்டு ‌, உறங்கி சராசரியாக இறந்து போவதைக்காட்டிலும்‌ இந்த மார்க்கண்டேயர்களின் இறப்பில் இறுமாப்பு கொள்வதில் துயரேதும் இல்லை.
@muralieezhumalai644
@muralieezhumalai644 4 жыл бұрын
அர்த்தமுள்ள தமிழன் என் வளர் இளம் பருவங்களை முழுமயாய் ஆட்கொண்டவர். தமிழின் சுவையை உச்சிகொட்டி சுவைத்தது இவர் வரிகளில்... எழுதிப் பழகியதும், கவிதை வரைவுகளுக்குமான பிள்ளையார் சுழி இவர்... விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஊறங்காது என்பது போல....இவர் விதைத்த தமிழ் ஆர்வம் வீரியமானது.... இன்றும் பல விருட்சங்கள் இவர் தயவில் -இவர் தமிழில்... தொடர் கதையாய் தொடர்ந்திருக்லாம் ஹைக்கூ வாய் முடித்துகொன்டார்... மழைநின்றபின் மண்வாசம் போல் கவிஞரின் மறைவின்பின் தமிழ்வாசம்-வீசும். தமிழ் ரத்தினம்தான்;கவிதைகள் பவளம்தான்- அதை அலங்கரிக்க ஏற்ற முத்துதான் இந்த முத்தகுமார்..- உன்னால் என் தமிழ்.
@karunyasanthaseelan3969
@karunyasanthaseelan3969 4 жыл бұрын
வெயிலுக்கும் அழகு உண்டு என்று சொல்லி கொடுத்தவர் நா. முத்துக்குமார்...
@narenkumar3985
@narenkumar3985 4 жыл бұрын
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சென்னையின் பிரம்மாண்ட புத்தகக் காட்சியில் முத்துக்குமார் அண்ணனின் புத்தகங்கள் முழுவதுமாக கிடைக்காமல் போய்விட்டன. விகடன் பிரசூரிக்கும் அணிலாடும் முன்றில் மற்றும் வேடிக்கை பார்ர்பவன் மட்டுமே கிடைக்கின்றன. பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம், தூசிகள், கிராமம் நகரம் மாநகரம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய புத்தகங்கள் மீண்டும் அச்சுக்கு வரவேண்டும். நதி வெள்ளம் போன்று அவரது புத்தகங்கள் அச்சாகிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே என்னை போன்று அவரையும் அவர் எழுத்தையும் காதலிப்போரின் அவா!
@sureshsa9695
@sureshsa9695 4 жыл бұрын
அந்த நாள்... ஏதோவொரு சனிக்கிழமைனு நினைக்கிறேன். தூங்கி எழுந்து டிவி போட்டால் நா. முத்துக்குமார் 😪. எதையும் புரிந்துகொண்டு சாதாரணமா எடுத்துக்கொள்ளும் பக்குவம் உள்ளவன் தான் நான், ஆனால் அன்று முழுவதும் என்னையுமறியாமல் அழுது கொண்டே இருந்தேன். ஏதோவொரு சொந்த அண்ணனை இழந்த இழப்பு...
@kannanlove7270
@kannanlove7270 2 жыл бұрын
சனிக்கிழமை இல்ல ப்ரோ. அது ஞாயிற்றுக்கிழமை அந்த நாளை என்னாலயும் மறக்க முடியாது
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p 4 жыл бұрын
தூர் இந்த கவிதை என்னை மிகவும் பாதிப்புள்ளாக்கிய கவிதை...
@sowntharya3068
@sowntharya3068 4 жыл бұрын
*நன்றிகள்* *பவா* 🙏🙏🙏 ❤ *நெருப்பிலும்* *தண்ணீர்* *உண்டு* *அதுவே* *கண்ணீர்* *- வேடிக்கை பார்ப்பவன்*
@tamilaram-792
@tamilaram-792 4 жыл бұрын
அண்ணனை நினைக்கும் போது , கண்களில் நீரும் , இதயத்தில் கணமும் நிறைந்து உள்ளது. பவாவிடம் நீண்ட நாள் கேட்க நினைத்த கேள்வி நா.முத்துக்குமார் பற்றி. பவா ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல !
@premdwh
@premdwh 4 жыл бұрын
வழக்கு என் 18 திரைப்படம் வந்தபோது கலந்துரையாடல் SKP கல்லூரியில் நடைபெற்ற போது நீங்கள், முத்துகுமார் அண்ணன் உரை இன்னமும் நினைவில் இருக்கின்றது..
@boobalaaravinthan5239
@boobalaaravinthan5239 4 жыл бұрын
நா மு வை பற்றி மேலும் எதிர் பார்க்கிறோம்..
@terryprabhu1568
@terryprabhu1568 4 жыл бұрын
உயிர் உறவு சகோதரனே இதுவரை தாங்கள் எடுத்துரைத்த எதுவுமே படிக்காதவரை படிக்கவும். படித்தவரை மேலும் படிக்கவும் பகிரவும் தூண்டுவனவையே. நீர் ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளனைப் போலும் தொல்லியல் துறை அறிஞனாகவும் தமிழுக்கு சேவை செய்வது மெத்தை மகிழ்ச்சி. காஞ்சிபுர கவிதைமேதை காலம் வரும் முன்பே கரைந்து போனது விதிவசமே. நம்தமிழ் இதுவரை இழந்தது இவ்வாறே. சகோதரா இளைஞர்கள் எழுதும் வழக்கத்தையும் ஏற்படுத்துவோம். உமது கதைசொல்லும் பாங்கினால் தமிழ் படிக்கும் புதியவர்கள் அதிகமாகியுள்ளனர். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@diksha4bsubhiksha8dselvara71
@diksha4bsubhiksha8dselvara71 4 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் எதிலும் இல்லாத போதை இலக்கியத்தில் இருப்பதால்தான் உடல் அரோக்கியத்தை கவனிக்க மறந்து விடுகின்றோமோ என்று தோன்றுகிறது பவா சார்.
@kakakalaiyangam
@kakakalaiyangam 4 жыл бұрын
அருமை ...இமாலய கவிஞன் ஒருவனை மீண்டும் ஈன்றெடுத்த பகிர்வு ..புதிய தகவல்களை அறிந்தேன் ..ஊக்கமடைந்தேன் . நன்றி ஐயா
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 4 жыл бұрын
பல ஆண்டுகள் இல்லை ஐயா.. முத்துகுமாரைப் போல வார்த்தைகளால் பல இதயங்களைக் கவ்வித் தின்னும் கவிஞனை தமிழகம் இனி என்றுமே பார்க்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்..
@kandasamidhasan5695
@kandasamidhasan5695 4 жыл бұрын
தம்பி நா முத்துக்குமார் பற்றி இது வரை அறியாமல் இருந்த தரவுகளை நான் தெரிந்து கொள்ள வைத்த பாவ அவர்களுக்கு நன்றி உங்கள் புதிய வாசகர் கந்தசாமி
@mubarakm8487
@mubarakm8487 4 жыл бұрын
நீங்கள் நா.முத்துக்குமாரின் "வேடிக்கை பார்ப்பவன்" புத்தகம் படியுங்க அதில் அவர் தன்னைப் பற்றி வேறு விதமாக எழுதியிருப்பார். அப்படி ஒரு சுயசரிதை கண்டதில்லை
@kandasamidhasan5695
@kandasamidhasan5695 4 жыл бұрын
@@mubarakm8487 வேடிக்கை பார்பவன் online ல கிடைக்குமா pl give details
@mubarakm8487
@mubarakm8487 4 жыл бұрын
@@kandasamidhasan5695 தெரியவில்லை. நான் புத்தகத்தில் படித்தேன். கூகுளில் கிடைக்க வாய்ப்புண்டு... 🤔🤔
@babua3462
@babua3462 4 жыл бұрын
,🙏 பவா உணர்வுகக்ளை பகிர்ந்து கொண்டீர்கள் கவிஞர் ந. முத்துக்குமார் அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள் அவர் ஏன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்
@francismoto
@francismoto 4 жыл бұрын
இயற்கை செய்த பிழை நா. முத்துகுமார் நம்மிடம் இன்று இல்லை. குறுகிய காலத்தில் அவர் சாதித்தது அதிகம். ஆனால் எப்போதும் அவர் கவிதைகள் பாடல்கள் நிலைத்து நிற்கும்.
@kannanlove7270
@kannanlove7270 2 жыл бұрын
இயற்கையின் தவறு ஒன்றும் இல்லை. இது நா.முத்துக்குமார் அவர்களின் தவறுதான். மஞ்சகாமாலை வந்த பிறகும் குடிச்சா செத்துப் போய் வாங்க என்று எல்லாருக்கும் தெரியும். அப்படியிருந்தும் அவர் குடித்து இருக்காரு. ஏன்னா அவர் குடிக்கு அடிமையாகி விட்டார்
@mythiliravi7186
@mythiliravi7186 4 жыл бұрын
பேரன்பின் வன்முறை என்ன அழகான உவமை. அழகான நட்பு.சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.இந்த நட்பு வட்டத்தில் நாம் இல்லையே என்ற ஏக்கம் கூட வருகிறது. அன்பின் உச்சம்,வலியின் உச்சம் இரண்டும் அடைந்துள்ளீர்கள்
@anandnatarajan8212
@anandnatarajan8212 4 жыл бұрын
காலத்தை வென்ற கவிஞன் நா.முத்துக்குமார்....அக் கவிஞனின் மரணம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு பேரிழப்பு...ஆம்..நாங்களும் ஆதவன்களே...
@RS-df2gr
@RS-df2gr 4 жыл бұрын
வழக்கம் போல் ஓவியமான பதிவு!! முத்துக்குமார் என்ற கவிஞனுடன் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருக்கிறோம்!!
@velurajendran8467
@velurajendran8467 4 жыл бұрын
அணிலாடும் மூன்றில் என்கிற தனது உறவுகளின் தொகுப்பு மூலமாக என் மனதில் எப்போதும் ஆடிகொண்டிருக்கிறார் அண்ணன் நா.மு
@dharshinibhuvana2438
@dharshinibhuvana2438 4 жыл бұрын
முத்து குமார் அண்ணாவுடன் உங்களுடைய பயணம் மிக இனிமையான நினைவுகள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை எனக்கு வெகு நாட்களாக தங்களுடைய அலைபேசி எண்ணை சொல் வீர்களா
@user-tf8it6sc2l
@user-tf8it6sc2l 4 жыл бұрын
நா. முத்துக்குமார்...எளிய மனிதனே...என்ன அவசரம்..அதற்குள்...உம் வாழ்க்கையை முடித்துக்கொண்டீர்...உம் கவிதைகளுக்காக மட்டும் இல்லை..எப்போதும் உம் கை பிடித்து நடந்து கொண்டிருந்த அந்த பிஞ்சு விரல்கள்...அதற்காகவேனும்..இன்னும் சிறிது உமது வாழ்வை வாழ்ந்திருக்கலாம்..
@sathurthi1731
@sathurthi1731 4 жыл бұрын
பெருமைக்குறிய அனுபவம் நேரடியாய் காணக்கிடைத்த காணொலி ஐய்யாவின் அன்பில் நனைந்தபடி..
@jayanthi4828
@jayanthi4828 4 жыл бұрын
WE MISS U NA...MUTHUKUMAR ⚘🥀🍁
@Velinadupaithiyakaran8565
@Velinadupaithiyakaran8565 4 жыл бұрын
😭😭😭😭😭 அண்ணா 😭😭😭😭😭 அவரை பற்றி நான் அறியும் தருணம் 😭😭 அவர் இல்ல என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அண்ணா
@teammavis5258
@teammavis5258 4 жыл бұрын
Thank u Bava chelladurai Waiting for this
@vjeeva123
@vjeeva123 4 жыл бұрын
நன்றி பவா.. எங்கள் வேண்டுகோளை ஏற்று நான் முகம் பார்காத என் சகோதரர் நினைவுகளையும் நட்பை தாண்டிய உங்கள் உறவுகளை பகிர்வதற்கு... தொடர்ந்து அந்த மகாகவிஞனை பற்றி நீங்கள் சொல்ல காத்திருக்கும் உங்கள் சகோதரி..
@radhajyothi6502
@radhajyothi6502 4 жыл бұрын
ஆச்சர்யம்..... இல்லை சாதாரணமாகக் கூட இருக்கலாம் நானும் நா. முத்துக்குமார் அவர்களை என் சகோதரனாகவே நினைத்திருக்கிறேன் (முகம் பார்க்காத )
@chinnasamy1481
@chinnasamy1481 4 жыл бұрын
மரணத்தை வென்றவர் ஆயுள் முழுக்க அவரின் பாடல் ஓயாமல் ஒலிக்குமே.... அவரின் தாடி முகம் கவியுலகிற்கு முத்திரை ஏனோ... பாரதியும் பட்டுக்கோட்டையும் முத்துக்குமாரோடு இணைந்துகொண்டனர்..... இள வயதில் இவர்களின் மறைவு... இன்னமும் ஏற்பதற்கில்லை.... நெஞ்சே அடங்கு...
@rameswaryraja7459
@rameswaryraja7459 4 жыл бұрын
கண்ணீர் ததும்பாமல் கேட்கமுடியவில்லை..
@sorukulambu3271
@sorukulambu3271 4 жыл бұрын
நா.மு😘
@user-fm3gg2uo4l
@user-fm3gg2uo4l 4 жыл бұрын
அண்ணன் நா.முத்துக்குமார் மனதின் சாளரம், வாழ்கை சிக்கல்களையும், கொண்டாட்டங்களையும் கவிதையாய் மொழியாக்கம் செய்தவர். ஏனோ அவரை நினைக்காத நாள் இன்னும் என் வாழ்கையில் வரவேயில்லை..
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
என் தெய்வம் நா. மு அவ்வளவு தான்
@muralieezhumalai644
@muralieezhumalai644 4 жыл бұрын
பவா... என் வளர்இளம் பருவங்களின் தமிழ் பெருமை கொள்ள இவரின் வரிகளே காரணம்...... நூலகத்தை வீடாய் கொள்ள எத்துனை பேருக்கு வாய்க்கும்...
@kannanlove7270
@kannanlove7270 4 жыл бұрын
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. அன்று ஞாயிற்றுகிழமை. எப்போதும் தியேட்டருக்கே அதிகம் போகாத நான் அன்று காலை 10.30 மணிக்கு ஜோக்கர் படம் பார்க்க அருப்புக்கோட்டை குவின்ஸ் நாச்சியார் தியேட்டருக்கு போனேன். திரும்பி வந்து 1 மணிக்கு டிவியை போட்டதும் ஏதோ ஒரு நியூஸ் சேனலில் நா.முத்துகுமார் இறந்து விட்டார் என்று செய்தி பார்த்தேன். பொய் செய்தியாக இருக்கும் என்று நினைத்து அலட்சியமாக அடுத்த நியூஸ் சேனலை மாற்றினால் அத்தனை சேனல்களிலும் அதே நியூஸ் தான். அன்று முழுவதும் இடிந்து உட்காந்து பிரபலங்கள் நா.முத்துகுமார் பற்றி பேசிய நியூஸ் சேனல்களையே பார்த்து கொண்டு இருந்தேன். அதன் பிறகு கிட்டதட்ட ஒரு மாதம் யூடியூப்பில் அவரின் பழைய பேட்டிகளையே பார்த்து கொண்டு இருந்தேன். எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும் என்று எனக்கே அப்போது தான் தெரிந்தது. வாலி, வைரமுத்து பெண்களின் உடலையும், முலைகளை பற்றி மட்டுமே வர்ணித்து காதல் பாடல் எழுதி வந்த நிலையை மாற்றிய மேதை நா.முத்துகுமார். கண்ணதாசனின் காதல் பாடல்களில் காதலியை தன் குழந்தை போல பாவித்து எழுதுவார். ஆனால் நா.முத்துகுமார் அதற்கு மறுமுனையாக காதலியை அம்மா போலவும் தன்னை அம்மாவின் முலைப்பாலுக்காக ஏங்கும் குழந்தை போல அதாவது காதலியின் அன்புக்காக ஏங்குவதாக நினைத்து எழுதுவார். சினிமா சம்மந்தப்பட்டவர்களை பெரிதாக மதிக்காதவன் நான். ஆனால் இவரின் எளிமையும், சிரிப்பில் இருக்கும் குழந்தைதனமும், பாடல்களில் இருக்கும் உணர்ச்சி பெருக்கும் என்னை பெரிதும் பாதித்தாக இப்போது உணர்கிறேன். எங்கள் ரெண்டு பேரின் கேரக்டரும் கிட்டதட்ட ஒன்று என நினைக்கிறேன். அதனாலோ என்னவோ இன்னும் இவரின் மரணத்தின் பாதிப்பு எனக்கு உள்ளது. இப்போது கூட யாராவது நா.முத்துகுமாரை பற்றி பேசினால் அந்த பேச்சு நீண்ட நேரம் நீளாதா என்று நெஞ்சம் ஏங்குகிறது. இப்போது கூட இந்த வீடியோவின் கிட்டதட்ட அனைத்து கமெண்ட்களையும் பார்த்துவிட்டேன். என்னை போல பலர் அனுப்பிய இ மெயிலை மதித்து நா.முத்துகுமார் பற்றி பேசியதற்கு நன்றி பவா. முடிந்தால் அடுத்த பாகம் போடவும் பவா
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 жыл бұрын
Waiting for the second part.. Appa really a wonderful person Na. Muthukumar Sir.. Very nice to hear ur experiences with him... Very simple person won so many good hearts in the world by his creativity..
@vasanthv6850
@vasanthv6850 4 жыл бұрын
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் கோவில்கள் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
திறமையானவர்கள் நல்லவர்கள் எல்லோரும் சீக்கிரமே நம்மை விட்டு சென்று விடுவார்கள் போல .
@user-qj2ws2bx3q
@user-qj2ws2bx3q 4 жыл бұрын
நா. முத்துகுமார் ♥️♥️♥️♥️
@vijayag2012
@vijayag2012 4 жыл бұрын
நா.முத்துக்குமார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
கவிஞர் நா. முத்துக்குமார் பற்றி அருமையாக சொன்ன பவா செல்லத்துரை அவர்களுக்கு நன்றி.
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 жыл бұрын
Eagerly waiting so many days above topic. Really heart touching entire life Na. Muthukumar. Thank you so much bava sir.
@Thiruko2020
@Thiruko2020 4 жыл бұрын
அருமை அய்யா
@naseemanaseema7132
@naseemanaseema7132 4 жыл бұрын
நன்றி ஐயா நா. முத்துக்குமார் பற்றி பேசியதற்கு
@thambidurai8289
@thambidurai8289 3 жыл бұрын
நா முத்துக்குமார் அண்ணார் அவர்களை நானும் நண்பேன்டா பட இயக்குனர் ஜெகா என்கிற ஜெகதீஷ் அண்ணார் அவர்களும் வீட்டில் 2001இல் சந்தித்தோம். முத்துக்குமார் அண்ணனின் பாட்டியார் அவர்கள் எங்களை அழைத்து தேநீர் கொடுத்து உபசரித்து அந்த தாழ்வான காரை வீட்டில் உள்ளே வரவழைத்து சாமி ரூமில் எங்களை சாமி கும்பிட வைத்து அனுப்பிவைத்தார் அது இன்னும் எங்கள் நெஞ்சில் அப்படியே இருக்கிறது அன்னாரது இழப்பு ஒரு பேரிழப்பு.
@anandhananandhan7126
@anandhananandhan7126 4 жыл бұрын
பவா கடந்த பத்து நாட்களாக உங்களை காணாமல் தவித்தேன். . .
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 Жыл бұрын
நா. முத்துக்குமார் 😍😍நான் முத்துக்குமார் 🥰🥰🥰🥰
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 жыл бұрын
கண்ணீர் வராமல் இருக்காது முத்துக்குமார் எனும் கவிதை தாயகன். பேரன்புகள் பவா. 😍 😘
@duraibabudurai1559
@duraibabudurai1559 4 жыл бұрын
Miss you Na. Muthukumar my favorite lyrics
@thameemify
@thameemify 4 жыл бұрын
நிச்சயமாக கவிஞர் முத்துக்குமாரின் படைப்புகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்..
@vijayankalyan8790
@vijayankalyan8790 4 жыл бұрын
நன்றி பவா முத்துக்குமார் பற்றிஉரையாடியத ற்கு
@krishnaveniteacher1643
@krishnaveniteacher1643 3 жыл бұрын
வணக்கம் பவா ஐயா 🙏 நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை எங்கள் பள்ளியில் தாங்கள் பேச வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு காலம் கனிந்து நம்மைச் சந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது 🙏
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 жыл бұрын
Thanks appa, Muthukumar simple genius poet
@arulkumaru3305
@arulkumaru3305 4 жыл бұрын
நல்ல மனிதர் இரண்டு மூன்று முறை பேசிஇருக்கிறேன்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.
@swarubarani5391
@swarubarani5391 4 жыл бұрын
Thank u very much Bava brotheŕ
@prasathneelakrishnan6880
@prasathneelakrishnan6880 4 жыл бұрын
Naan Rombaa naal wait pannitu irrunthan.. neenga avara oda ninavukkal share pannuvinganu.. waiting for next part.. super sir
@anbuviki9197
@anbuviki9197 4 жыл бұрын
Tq bava... nanum ketan...இலந்துருக்க கூடாத இழப்பு
@manjulaumapathy1018
@manjulaumapathy1018 4 жыл бұрын
Sir the beauty with in you reflects on your face.
@adhikaalaitamil
@adhikaalaitamil 3 жыл бұрын
நெகிழ்ச்சி..... பவா....... மனம் நிறைய கனம்.... நன்றி !
@sivakumarmg4735
@sivakumarmg4735 4 жыл бұрын
பவா அண்ணனுக்கு மிக்க நன்றி கவிஞர் நா. முத்துகுமார் அவர்களின் கவி நேய நினைவு!
@muhammadfarid827
@muhammadfarid827 4 жыл бұрын
சிரித்து, புன்னகித்து,, ரசித்து , ருசித்து பார்த்து முடித்தேன்; தேன்.🌹
@balaganesanr518
@balaganesanr518 2 жыл бұрын
👌
@karthikbalaji4882
@karthikbalaji4882 4 жыл бұрын
Super video bava sir Romba thanks nanum na muthukumer sir pesa sonna sir
@pasupathiraj5714
@pasupathiraj5714 4 жыл бұрын
நெகிழ்வான அருமையான பதிவு
@kumaresanr9321
@kumaresanr9321 Жыл бұрын
Appa Amma.... Nanban raja.... Sagatharan... Nataraaja... Nanban.................
@bharatetios3450
@bharatetios3450 4 жыл бұрын
📺காட்சிகள் புதுமையானது. நன்றி அய்யா 📚👍
@brdurai8776
@brdurai8776 3 жыл бұрын
அய்யா மன்னிக்கவும் பகை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார் என்கிற வார்த்தை அதில் இடம் பெறவில்லை படை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார் . என்கிற வார்த்தைதான் தூர் கவிதையில் இடம் பெற்றிருக்கிறது
@RANJITHKUMAR-zr6gz
@RANJITHKUMAR-zr6gz 4 жыл бұрын
நீண்ட நாள் ஆசை உங்கள் குரலில் முத்துவை பார்க்க❤️
@tamilcrown9502
@tamilcrown9502 4 жыл бұрын
நன்றி அண்ணா
@ramc.h.e.e.m.s
@ramc.h.e.e.m.s 3 жыл бұрын
வரிகளில் வாழ்ந்து வருகிறார் 🥰 நா. முத்துக்குமார்
@ebenezervictor5449
@ebenezervictor5449 4 жыл бұрын
I love this man. So simple. and. knowledgeable. Child.
@biobio1053
@biobio1053 4 жыл бұрын
Good massage
@muthukrishnan9404
@muthukrishnan9404 4 жыл бұрын
செம்ம சார் 👌
@Rupeshkumar-pv5uz
@Rupeshkumar-pv5uz 4 жыл бұрын
90S kidsகளின் காதல் கவிஞன்
@elanchezhiyan245
@elanchezhiyan245 4 жыл бұрын
அருமை
@mahalakshmi-ed1cv
@mahalakshmi-ed1cv 4 жыл бұрын
பட்டாம்பூச்சி விற்பவன் - நா. முத்துக்குமார்
@vickymu5812
@vickymu5812 4 жыл бұрын
Bava sir ..neenga vedaikaran kathai kdkka arumaiyana undru
@vannamproductions533
@vannamproductions533 4 жыл бұрын
மறக்க முடியாது அண்ணன் உன்னை. என் உயர் இருக்கும் வரை.
@uthumanhameed
@uthumanhameed 4 жыл бұрын
Tamil missed NaMu....Thanks Bava for NaMu tribute!!!
@vinodhkumar4823
@vinodhkumar4823 4 жыл бұрын
அருமை பவா sir.
@ThePremanand711
@ThePremanand711 4 жыл бұрын
Bavaaa saaarrrrr your the Heart Beat sir
@adarshkmohan6751
@adarshkmohan6751 4 жыл бұрын
நன்றி ❤
@naveenkumars1417
@naveenkumars1417 4 жыл бұрын
நினைவுகள் சுகம்....நா.மு ஒரு பனித்துளி!!!!!
@jaitemplejewellery356
@jaitemplejewellery356 4 жыл бұрын
Super sir...
@pachamuthu3973
@pachamuthu3973 4 жыл бұрын
👏👏👏🌹🌹
@madhuparthi4829
@madhuparthi4829 4 жыл бұрын
waiting
@AshokKumar-qh3ly
@AshokKumar-qh3ly 4 жыл бұрын
உங்கள் கதைக்கு இபையேயான விளம்பரத்தால் என் போனுக்கு சிறகு முளைத்தது...
@dinakaran316
@dinakaran316 4 жыл бұрын
மிரட்டும் சாமத்து பேய்கதைகள் வரும், விளம்பரங்கள் துரத்தும் தொலைக்காட்சி தொடர்களில் கூட கண்டதில்லை இப்படி ஒரு தொடரும்...மை. (நாளையே வந்துடுங்க பவா)
@thangamanis9471
@thangamanis9471 4 жыл бұрын
அருமை என் அண்ணன்
@prshnprshn6275
@prshnprshn6275 4 жыл бұрын
Super ♥♥♥♥♥
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,3 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 7 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 3,7 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 8 МЛН