Рет қаралды 20,504
தில்லி சுல்த்தான்களிடமிருந்து மதுராபுரியை மீண்ட விஜயநகரத்திற்கு உடனடியாக இரண்டு தேவைகள் இருந்தன
1 விஜயநகரத்தின் மதுரை மண்டலத்திற்கு பொருளாதார தேவைகள்
2 மதுரை மண்டல பாதுகாப்பிற்கு போரிட படைகள்
இந்த இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்ய மதுரை மண்டலேஸ்வரவர் விஸ்வநாதர் தலைமையில் அரியநாத முதலியின் யோசனையினால் மதுரை மண்டலம் 72 பாளைங்களாக உருவாக்கப்பட்டன பாளையங்கள் என்றால் படைக்களங்களுடைய முகாம் எனலாம் பாளையங்களுக்கு பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பாளையத்திற்குட்பட்ட மக்களிடம் வரி வசூல் செய்து, மூன்றில் ஒரு பங்கு வரியை மதுரை மண்டலத்திற்கு கப்பமாக கட்டுவதும் பாளையத்திற்கான படைகளை உருவாக்கி அவற்றை நிர்வகிப்பதும் தேவையான நேர்வுகளில் மதுரை மண்டலத்திற்கு அனுப்பி வைப்பதும் அவர்களுக்கான கடமை
விஜயநகரப் பேரரசின் மதுரை மண்டலத்திற்குட்பட்ட 72 பாளையங்களில் நிலக்கோட்டை பாளையமும் ஒன்று. இந்த பாளையத்தினை மாக்களசாமி நாயக்கர் என்பவர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் உருவாக்கினார் கி பி 1801 ஆம் ஆண்டு வரை பாளையமாக இருந்த நிலக்கோட்டை அதன் பிறகு ஜமீன் என்றும் மாறியது.
ஜமீனாக மாறிய பிறகு நிலக்கோட்டை பாளையத்தின் பொழிவு குறையத் தொடங்கி, ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்திற்கு பிறகு முற்றிலும் தனது பொழிவினை இழந்துவிட்டது.
இந்த நிலக்கோட்டை ஜமீன்தாரி பரம்பரையைப் பற்றிய வலையொலிதான் இது.
Location Map: goo.gl/maps/HTxCaraBqThcFfLX8