Рет қаралды 133,355
#Business
#BusinessLoan
#job
#Emplpoyment
#vvvsi
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 'பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' என்ற திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை அரசு கடன் வழங்குகிறது.
மேலும், இந்த கடனில் 35 சதவிகிதம்வரை அரசு மானியம் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது முதல் தேர்வு செய்யப்படுவதுவரை அனைத்து செயல்பாடுகளும் எந்தவித இடைத்தரகர் இன்றி ஆன்லைன் வழியாகவே நடக்கிறது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்றால் என்ன, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான தகுதிகள் என்ன, இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன ஆகியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தேவையான தகுதிகள்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெற தகுதியானவர்கள்.
குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் உட்பட வேறு எந்தத் திட்டங்களின் கீழும் பலன் பெறாதவராக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
எதற்கு கடன் கொடுக்கப்படும்?
புதிதாக தொடங்கப்படும் சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படும்.
ஆனால் இந்த திட்டத்தின்கீழ் தொழில் விரிவாக்கத்திற்கும், நவீனமயமாக்கலுக்கும் கடன் வழங்கப்படாது.
எதிர்மறைத் தொழில்கள் பட்டியலில் உள்ள தொழில்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படாது.
இந்த திட்டத்தை 2026வரை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், 2021-2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.13,554.42 கோடிகளை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
Application Website Link - www.kviconline.gov.in/pmegp
Business List -www.kviconline.gov.in/pmegp/p...