Рет қаралды 2,601
கார்த்திகையில் கார்த்திகை நாள் கலி கெடவே வந்துதித்து காரிமாறன் ஆயிரத்தை கமழ வைத்த கலைவலவர் நம்பிள்ளை லோகாசாரியர் . காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமியால் நிர்மாணம் செய்யப் பெற்ற நம்பிள்ளை ஸந்நிதியில் சீரார் வடக்குத்திருவீதிப்பிள்ளையொடும், ஏரார் பெரியவாச்சான் பிள்ளையொடும் இற்றைக்கும் சேவை சாதிக்கிறார்கள். நம்பிள்ளை வருஷ திருநக்ஷத்ர தினமான கார்த்திகையில் கார்த்திகை நாளில் யதோக்தகாரி (சொன்னவண்ணம் செய்த) பெருமாளிடம் இருந்து பரமாசார்யரான நம்பிள்ளைக்கு மரியாதை.