கவியரசரின் பாடல்கள் பலவிதம்.. அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்
Пікірлер: 238
@suseelaponnusamy10794 жыл бұрын
ராமன் எத்தனை ராமனடி எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ராமனின் பல பரிமாணங்களைஒரே பாட்டில் கொண்டுவந்தார்👌கவிஞருக்கு நிகர் கவிஞரே🙏
@jayanthiramakrishna98434 жыл бұрын
கண்ணதாசன் அவர்களின் கவிதை போல தங்கள் பேச்சும் மிக அருமை
@emmaressnadhan80134 жыл бұрын
கவியரசரை சிறுமைப் படுத்த டைமண்டுவுக்கு"கவிப்பேரரசு"என்று போலி பட்டம் கொடுத்த கட்டுமரத்தின் கெடுமதியை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@smani43574 жыл бұрын
அன்பரே தமிழன்னென்றபோர்வைகிடந்தத????????????????? ஒன்றா இரண்டா முருகா!!! ஐயாவின்நல்லதமிழ் கேட்கும்போது ஏன் அது அது அது??? அதுக்குத்தான்னே ஐயா ஏ பி யே கலாம்அவர்கள் என்ன பட்டம்சரியாதெரிய அதுக்குகொடுக்கமறுத்துவிட்டார்( பதமபூசனம் பத்மசிறி பரத்துக்குரத்ன ) அதுக்குஇது எல்லாம் ரெபதுரத்துக்கு போ???
@annamalaiss51194 жыл бұрын
Unmai sir
@mohans2874 жыл бұрын
முற்றிலும் உண்மை. பழி வாங்கும் சிறு மதியாளனை வெறுத்து ஒதுக்குவோம்.
ஒருவருக்கு கவிப்பேரரசு என்ற பட்டம் கொடுத்தால், கவிஞர் கண்ணதாசனை சிறுமைப்படுத்த முடியுமா? வியப்பாக இருக்கிறதே! ஒரு கவிஞனனின் சிறுமையும் பெருமையும் அவன் பாடல்களில் இருக்கின்றன தம்பி. அதை எவராலும் மாற்றவியலாது. புரிஞ்சுக்கோ.
@PARTHASARATHIJS4 жыл бұрын
மனம் நெகிழ்ந்தேன் அண்ணாதுரை ! இன்னும் 3 ஆண்டுகளில் அயோத்தியில் ராமர் ஆலயம் வந்து விடும். இன்றைய செய்தி.
@anandharaj14364 жыл бұрын
Super ji
@rajeshwardoraisubramania71384 жыл бұрын
That song should b broadcasted..
@avadim3894 жыл бұрын
தமிழ்நாட்டில் எப்போது வரும்? கவிஞரின் பாடல்கள் தமிழில் அல்லவா இருந்தன? சினிமா மூலமாகத்தான் இராமனுக்குப் புகழ் வரவேண்டுமா? சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். அம்மனை நயந்தாரா சினிமாவில் பார்த்துக் கும்பிடமுடியாது.
@MaduraiKasiKumaran4 жыл бұрын
பல முறை பால்வண்ணம் பற்றி கேட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் இனிப்பைப் போல், தங்கள் விளக்கத்தில் கேட்பது ஆனந்தமாக உள்ளது. ராமன் எத்தனை ராமனடி சினிமாப் படப் பாடல் அல்ல. நித்தம் ராமனைப் பாடும் பாராயணப் பாடல். சுசிலா அம்மாவின் குரலில் கவிஞர் வடித்த பக்திப் பாடல். எளிமையான திருமொழி. வாழ்க கவிஞர் புகழ். தமிழார்வம் வளர்க. நன்றி. தொடரட்டும் சீரிய பணி.
@mvvenkataraman3 жыл бұрын
இந்த பாடல் உயர்ந்த பாடலாகும் மிகவும் சிறந்த வகையில் போகும் பாடல் பிறந்த கதை மிக அருமை இது கண்ணதாசனின் திறமை இதை கேட்கக்கேட்க இன்பமே ராமனை நெஞ்சம் நம்புமே! M V Venkataraman
@suvethanankalidhas97664 жыл бұрын
மிக்க நன்றி துரை அண்ணா. கவிஞரின் படைப்புகளை வியந்து அனுபவித்த எமக்கு அவர் வாழ்வதனை கண்முன் காட்டும்போது மிக ஆனந்தமாக உள்ளது. நீங்கள் கூறும் விதமும் அற்புதம். 80 களில் பிறந்த எனக்கு, உங்கள் கதைகளை கேட்டு அவ்வப் படங்களை பார்க்கும்மோது என்ன ஒரு சுவாரசியமாக உள்ளது. உங்கள் பணி இனிதே சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள். அத்தோரு மெல்லிசை மன்னர் விசுவநாதன் ஐயாவுடைய கதைகளையும் முடிந்த அளவு பகிருங்கள். இலங்கையிலிருந்து மனமார்ந்த நன்றிகள்.
@srinivasgopu48194 жыл бұрын
கவிஞர் with KVM நினைவுகளையும் எதிர்ப்பார்க்கிறோம் !
@jbphotography58504 жыл бұрын
கவிஞரின் வண்ணங்கள் ஆயிரம், எண்ணங்கள் கோடி வாழ்க கவிஞர்...
@mullairadha5868 Жыл бұрын
கவி யரசு கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்கள் கேட்கும் போதெல்லாம் உரிகிப்போகிரேன் பால் வண்ணம் பருவம் கண்டு பாடல் என்னை எங்கோ கொண்டுசெல்கிறது காதல் நினைவுகளில்... முல்லை ராதா
@balakavee92314 жыл бұрын
எத்தனை இராமன் . வந்தாலும் , அத்தனையும் வர வைத்தவர் எங்கள் கவிஞர் அவர்களே.
@balasubramaniangopalakrish42124 жыл бұрын
சுருங்கச்சொல்லின் “ கண்ணதாசன் நாவில் சரஸ்வதிதேவி நிரந்தரமாக குடியிருந்த காரணத்தால்தான் அவரது பாடல்கள் மூலமாக இன்றும் நம்மிடையே உலாவருகின்றார். அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடருவார்.
@papayafruit57034 жыл бұрын
You are so innocent like your dad . This episode is very nice 😊🙏. As usual, song is too good. Miss kannadasan sir sooo much
@devsair2 жыл бұрын
என் சிந்தையை இன்றும் என்றும் மயக்கும் பாடல்களில் ஒன்று... பால் வண்ணம் பருவம் கண்டேன்
@mohangeeelegant73744 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு! சுட்டியுள்ள இரு பாடல்களையும் ஏற்கனவே பலமுறை இரசித்திருந்த போதிலும், பாடல் உருவான சம்பவங்களுடன் இணைத்து பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது! வடஇந்திய இசைக்கலைஞருக்கு, கவிஞர் விருந்து கொடுத்தது பாராட்டியது, அவரை மிகச் சிறந்த கலா இரசிகன் என்று அனைவருக்கும் புலப்படுத்தியுள்ளது! மிகச் சரளமாகவும்,அழகாகவும் தொகுத்து கொடுத்த துரை அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்! வாழ்க! வளர்க!!
@knatarajannatarajan88683 жыл бұрын
கவிஞர் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் அண்ணல் அண்ணாதுரை அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏👍❤️❤️❤️❤️
@sridevinarra47533 жыл бұрын
கவிஞரை காண பாக்கியம் இல்லை ஆனால் தங்களால் அவரின் அருகில் இருந்து அனைத்தையும் பார்ப்பதை போல் உள்ளது.உங்களின் பேச்சு அருமை.வாழ்க கவிஞரின் புகழ்
@beekay78814 жыл бұрын
Fantastic Mr.Annadurai Kannadasan 👌. We have group literally in different continents (Europe and America) discussing various songs by Kavingyar. This information adds more to our thoughts. Though away from India, Kavingyar's songs and MSV's music keeps me going and keeping me in my village days! Awesome job. Keep giving us more! Thank you 🙏
@natarajansuresh61484 жыл бұрын
பால் "வண்ணம்", வன்னம் அல்ல, தயைகூர்ந்து திருத்தவும்
@jayanthi48284 жыл бұрын
செம்மை
@meenalochanisuresh29804 жыл бұрын
Annamalai sir,super recollection. Thanks for sharing the interesting details. Really Blessed by Goddess சரஸ்வதி.,your father. Kavi Arasar thaan. Raman எத்தனை raamanadi. அற்புதமான பாட்டு. இன்றளவும் மனதில் நிற்கும் வரிகள். நம்பிய பேருக்கு ஏது பயம், என்னும் வரிகள் கேட்கும் போது , கண்டிப்பாக கண் கலங்கும்.
@kumarsubramaniam3414 жыл бұрын
மகன் ... தந்தைக்கு ஆற்றும்... ஆஹா அருமை... அனுபவித்து சொல்ல சொல்ல...இனிக்குதடா....ஆஹா
@pkprasads3 жыл бұрын
கவிஞரின் கம்ப ராமாயண புலமையை நாங்கள் அறியும் வண்ணம் சொன்னதற்கு நன்றி . ரசித்து பார்த்தேன் .
@k.piramanayagam90042 жыл бұрын
எண்ணத்தில் பல்லாயிரம் கவிதையைச் சுமந்த கவிதேவன் ! கை வணௌணத்தில் பிறந்த கவி கதைகளில் காதலுமிருக்கும் நல் தத்துவத்தோடு ஆன்மீகமும் இருக்கும் ! முதுமை வருமுன்னே விண்ணுலகு எய்தியதால் தமிழுக்கு வந்ததோர் இழப்பு ! பல்லாண் டிருந்தால் இமயம் தாண்டி நிற்கும் அவர் படைப்புகள்!
@clevermurugesan77264 жыл бұрын
நான் ரசித்த நெகிழ்ச்சி மிக்க கவிஞர் கண்ணதாசன் சொல்ல தெவிட்டாத செம்பொன் எழுத்துக்கு சொந்தமானவர் கண்ணதாசன் குடும்பத்தில் பிறக்காத மூத்த குழந்தையாகவே என்னை நினைத்து கொள்வேன்
@mohan61263 жыл бұрын
Annadurai sir excellent speech I really inspired by your mesmerizing voice prof Dr Mohan Kumar
@a.s.ramesh93964 жыл бұрын
அண்ணா, அப்பா சரஸ்வதியின் முழுமை அருள் பெற்ற ஒரே ஒரு மகன் கவியரசர் சரஸ்வதியின் தமிழ் தாய் பால் குடித்த மூத்த மகன்
@kalinatesan65664 жыл бұрын
அருமை சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி
@suruli16244 жыл бұрын
அன்பு வணக்கம்.... கவிஞர்எனும் ஒற்றைச் சொல் இங்கே கவியரசு "கண்ணதாசனை"..... மட்டுமே குறிக்கும்.... மற்றவர்கள் யாராக இருந்தாலும் தங்களது பெயருக்கு முன்னால் கவிஞர்எனப் போட்டுக் கொள்ளலாம்... பிரபல சினிமா கதாசிரியர் ஜிபிஎஸ் அவர்களின் உடன்பிறந்த தம்பியின் மகளைத்தான் மணம் செய்துள்ளேன்... நமது கவியரசுக்கு நிகராக உலகில் இதுவரையில் யாரும் பிறக்கவில்லை என்பதுதான் உண்மை. கவிஞர்புகழ் வாழ்கவே.
@vairavannarayan32874 жыл бұрын
நம் தலைமுறையில் வாழ்ந்த எந்த ஒருவரும் இத்தனை ஆயிரமாயிரம் இனிமையான நிகழ்ச்சிகளுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. சிறுகூடல்பட்டி ஈந்தளித்த பெருங்கொடை. துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள். 'difference of opinion' என்பதற்குப் பதிலாக 'difference of view/thought' என்று தாங்கள் குறிப்பிட்ட context ல் சொல்லியிருந்தால் சரியாக இருக்கும். நன்றி.
@jayasreerajaram60004 жыл бұрын
கர்ணன் படத்தில் அற்புதமான ஷெனாய் கலைஞர் ஷேக்பிஸ்மில்லாகான் அவர்கள் பங்கேற்றார் என்று மெல்லிசை மன்னர் டிவி நிகழ்ச்சியில் சொன்னதாக நினைவு.....
@jayanthi48284 жыл бұрын
Yessssssssssssa
@dayalandayalan29684 жыл бұрын
ஆமாம் கர்ணன் படம் தான்
@flutesashi8104 жыл бұрын
Sorry shehnai played by Sri.satyam sir...not bhismillah Khan saheb...
@jayasreerajaram60004 жыл бұрын
@@flutesashi810 thank you sir...but one matter from msv sir TV program in iravum nilavum song bgm two shenoi played .... please listen...any way thank you very much.. Msv told both of this participate in that song
@sundarviswanathan65004 жыл бұрын
நான் என்ன 'கவிஞரா'?! அவர் இயற்றிய ஒவ்வொரு பாட்டிற்கும் புதுப்புது சொற்களால் கவிஞரை பாராட்டுவதற்கு. அவர் பாடல்களை பாராட்ட அருமை, ப்ரமாதம் என்று தான் கூற வேண்டும். ம்ம்ம் வார்த்தைப் பற்றாக்குறையால் ஏற்பட்ட பெருமூச்சு.🙏 ()
@kumaresann33114 жыл бұрын
ஐயாஇவர்போல் ஒருகவிஞரும் இனி உலகில்இல்லை இதுபோல்பாடல்இயற்றயாரும் இல்லை
@sridhartv45434 жыл бұрын
Kavignar is an encyclopedia of good quality tamil lyrics, I have no words to describe his abilities, he is a god sent man for tamil tinsel world, all is Lord narayana s leelai
@jayakrishnan75794 жыл бұрын
One of my favorite songs indha ' Raman ethanai Ramanadi ' .It sums up the whole story of Kamba Ramayanam. Am delighted to know Kavingar 's inspiration from Raman's reply to Lakshman 's question. Thank you sir for your wonderful videos.
@ramamirthamsepperumal75704 жыл бұрын
அருமை எத்தனை ராமன். வாழ்த்துகள்.
@ravindranmunian34784 жыл бұрын
Thank you for sharing sir! The songs are beautiful. The inspirations is even more beautiful! Please keep sharing! Appreciate your effort sir! 🙏
@physics202464 жыл бұрын
கவிதை சொல்ல வார்த்தைகள் உண்டு! நம் கவிஞரை சொல்ல உம் நாவுமுண்டு!
@saravanaaganapathi63894 жыл бұрын
Aaha. Fine very nice 👌👍👍😊❤️👌
@avadim3894 жыл бұрын
இருபாடல்களும் சிறந்தவை. எனினும், பால் வண்ணம் பாடலே இலக்கிய நயமும், தமிழ் மொழி நடையழகும், இசை இன்பமும் உடையது. இராமனைப்பற்றிய பாடல் வெறும் பக்தி பாடல் மட்டுமே.
@avadim3894 жыл бұрын
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் பெண்: கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னம் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னம் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் ஆண்: மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
@avadim3894 жыл бұрын
Right first night song.முதலிரவு படுக்கையிலும் வரலாமா? என்று கேட்கும் பண்புள்ள தலைவன். இன்னுமேன் தயக்கமென அனுமதி தரும் தலைவி. ஆண்-பெண் கலவியல் உறவும் பண்போடு கலந்து இருக்கவேண்டுமென்று காட்டும் பாடல். இலக்கிய செறிவும் கருத்து செறிவும் அடங்கிய அழகு தமிழ்ப்பாடல்.
@saravanaaganapathi63893 жыл бұрын
Paal vannam paruvam kandaen Paadal. Really great ❤️. Only kannadasan the legend ❤️❤️🎉🎂🎂🎂
@sureshKumar-xh6qi4 жыл бұрын
கவிஞர் கலைமகள் கடாட்சம் பெற்றவர் அல்லவா
@scsangaran4 жыл бұрын
அப்பாவைப் பற்றிய அசாதரனமான விஷயங்களை மிகவும் இளகுவாகவும் சரலமாகவும் நீங்கள் சொல்லிச் செல்லும் விதம் மிகவும் அர்புதம். தந்தையைப் பற்றி ஒவ்வொறு விஷயங்களையும் சொல்லி சொல்லி கேட்க பிரமிப்பு மட்டுமே மேலோங்கி நிர்க்கிறது. மிக்க நன்றி.
@AshokKumar-dt4rb4 жыл бұрын
கம்ப ராமாயணத்தை பற்றி கம்பரை விட அதிகம் தெரிந்தவர் கணணதாசன். தட்ஸ் ஆல்.
@oppoy33494 жыл бұрын
Great soul Kavignar. Salute.
@Ramkumar-wv5ln4 жыл бұрын
Super sir, I am enjoying your speech & kannadasan sir stories
@msanjith9564 жыл бұрын
Vanakkam Ayya... Tq so much for sharing about kavingar Ayya... Please do continue Ayya...
@balasubramaniangopalakrish42124 жыл бұрын
இதேபோன்ற நிகழ்வு நினைவில் உள்ளது, துரை ! மூன்று தெய்வங்கள் படத்தில் “வஸந்தத்தில் ஓர்நாள்” பாடலில் சிச்சுவேஷனுக்கு ஏற்றாற்போல் வைதேகியின் நிலையை எடுத்துக்கூறியிருப்பார். சைதை நூர்ஜஹானில் படம் பார்த்த நினைவு பசுமையாக உள்ளது.
@iamsrkarthik4 жыл бұрын
Excellent reference sir.. Google search I was thinking in the same way that you said. My kind regards to you.
@silambuselvan78214 жыл бұрын
அருமை ஐயா 💕 💕
@papunsriprasath50074 жыл бұрын
உங்கள் பதிவு அருமை ஐயா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
@jayaramankumaar17904 жыл бұрын
ஐயா ஒரு விண்ணப்பம், டிரைய்லர் இல்லாமல் உங்கள் யதார்த்தமான வணக்கங்களுடன் பதிவுக்குள் சென்றால் இன்னும் நன்றாக இருக்கும். பதிவுகள் அருமை.
@MrEranyanathan3 жыл бұрын
திரு.ஜெயராமன் கூற்று சரியே. நன்றி
@sakalam574 жыл бұрын
Delectable episode. Thanks for sharing.
@rangajagannathan9104 жыл бұрын
Simply superb no words 🙏🙏
@mgrajan39954 жыл бұрын
தமிழே தன்னைப் பற்றி எழுதியது போல் உள்ளது ! ! !
@jayakrishnan75794 жыл бұрын
Rendu nimishathil paadal muluvathaium solli viteerhalae ! I think you share your dad's memory power !
@gokhileshgokhilesh11974 жыл бұрын
பொக்கிஷம் சார்👌💐💐💐💐
@flutesashi8104 жыл бұрын
Sir Vanakkam karnan songs were played by Pandit Ram Narayan..the instrument is saarangi since I am a musician I am aware of that instrument...your programme is very interesting sir , I have been regularly watching your programme..thank you sir
@ravindranathv78434 жыл бұрын
beautiful keep going..
@kumart12494 жыл бұрын
காலை வணக்கம் ஐயா. தங்கள் விளக்கவுரையை கேட்க்கும் போது, கவிஞரைப் பற்றி மட்டுமல்லாது புதுப்புது விசயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது. மிக்க நன்றி ஐயா.
@musicanthem77232 жыл бұрын
கவிஞர் பாடலாசிரியர் ஆவது எப்படி என நம்பிக்கை மலர்கள் என்ற புத்தகத்தில் கூறியிருப்பதாக நீங்கள் கூறிய வேறு வீடியோவில் பார்த்தேன் அதில் புராதான மற்றும் இலக்கியங்களை மனப்பாடம் செய்ய சொல்லியிருந்தார் அதை இப்போது நான் உணர்ந்தேன் ❤️
என்னுடைய colleague தேவகோட்டையை பூர்வீகமாக கொண்டவர்.நகரத்தார் வகுப்பை சார்ந்தவர்.அவர் கவிஞரின்அருமை பெருமைகள் மற்றும் அவரின் வெள்ளை மனம் குறித்தும் நிறைய சொல்வார்.கவிஞர் அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கேட்க ஆனந்தமாக இருக்கிறது.🙏
@mmarath2k73 жыл бұрын
4am I am watching. I had a doubt in one line in this song. Now cleared. Also great to know the reference from kambaramayanam. Thanks for your info.
@0806maya4 жыл бұрын
apt song during Bhumi pujan in Ayodhya. 🙏🏽
@dr.r.thiagarajan4284 жыл бұрын
Pls don't stop your episodes...
@balurr92444 жыл бұрын
Arumai Arumai sir. Kavingar is Great
@samdevaraj18413 жыл бұрын
Pal vannam song is a classic song . only kanndasan only can write it. You came out with an excellent episode. Thanks.
There is no doubt about Almighty Blessed Kavignar Kannadasan to deliver right message for right audience for all kinds of occasions. Honestly, I feel, great kudos to Mr.Annadurai Kannadhasan for bringing as much true light behind scenes for each of his Dad's deed. Great thing I like his videos, lot of research he does and modest and polite reveals with things he know and doesn't know. Now we can relish the great poet Tamil words more than before because of his Son (Mr.Annadurai K), his family members and good friends surrounded by them. Enjoyable worth watching video channel. Thanks...!
@manjulasivarajan92483 жыл бұрын
Anna u also like ur. Dad talking and explaining all v good and , clear ,and eazy telling 🙏
@vishikm42633 жыл бұрын
Dear Anna Durai sir All tamilians all over the world will be proud of kannadasan !! The great poet after mahakavi Bharathi !! Continue the good work of appa
@srinivasan59324 жыл бұрын
Sir, you have spoken about MSV and Ilayaraja in your videos. Kindly share some experiences from Kavignar and KV Mahadevan composing. I heard, KVM always composes after the lyrics are written.
@pdamarnath39423 жыл бұрын
Yes, Mama is a real legend and trend-srtter in tamil vine music. Please say something about him also
@manikrishnanAmmukkutty2 жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் அலுக்கவில்லை அற்புதம்
@vijayapalanvijayapalan74492 жыл бұрын
என் தானை தலைவன் என் தன்மான தலைவன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான்
@soundararajansubbaryan8194 жыл бұрын
கவியரசர் அவர்கள் தோன்றிய "கரு"விலே கவிஞரானவர். அதுமட்டுமின்றி அந்த காலத்தில் கசடற அனைத்தையும் படித்தனர் எந்த மதமானாலும் குறைகளை விடுத்து நிறைகளை பாடல்களின் மூலம் மக்களுக்கு தந்தார்கள். பத்துப் பாட்டு,எட்டுத்தொகை தெரியாதவரெல்லாம் பாடல் எழுதி மமதையுடன் திரியும் இந்த காலத்தில் கவியரசர் எழுதிய ஒவ்வொரு பாடலுக்கும் அவர் எப்படி இருந்திருக்க வேண்டும் அப்படி எல்லாம் இல்லாமல் இருந்ததனால் காலத்தால் அழியாத "மாங்கனி"யாய் மக்கள் மனதில் சிம்மாசன போட்டு அமர்ந்திருக்கிறார். கம்பன் ஏமாந்தான் ஆம் அவன் ராமயணத்தை எழுதிய போதுதான் படித்திருப்பான் கம்ப ராமயணத்தை கவியரசர் படித்ததால் எழுதும் பாடல்களால் நம்மை படிக்க வைத்தார். "கோடு போட்டு நிற்கசொன்னார் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதையில்லையே" ராமயணம் இதிலே அடங்கி விட்டது. கம்பன் ஏமாந்தான் நாலு வரியிலே நமது ராமயணத்தை இருபதாம் நூற்றாண்டில் ஒரு கவிஞன் சொல்வான் என்று.
@gopin96904 жыл бұрын
Truely legend....Kaviyarasar..
@dayalandayalan29684 жыл бұрын
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் செல் போன் ரிங் டோன் என்று கேள்வி பட்டேன் (படம் கர்ணன் பாடல் கண்கள் எங்கே)
@veritatisvimalviktorvinod90803 жыл бұрын
Miga sirappu, annathe!
@shankarnatarajan62304 жыл бұрын
கவியரசர் அவர் புவியரசர்
@leshmikuppusamy70664 жыл бұрын
Excellent sir
@devendranshanmugam12914 жыл бұрын
சித்தர் பாடல்களையும் கவிஞர் கையாண்ட விதத்தை கேட்கவும் ஆவல்..
@pdamarnath39423 жыл бұрын
Actor and director vijayanirmsla liked this raman ethansi ramansdi very much and got a similar song written in telugu for her movie by great telugu lyricist Arudra.
@pmarun834 жыл бұрын
Only bharathi and kannadasan were real poets....they lived eccentric life and never cared of society...they found meaning of life by living life to fullest without worrying abt safety and security of future...he was a true saint..
@karupayyakaliyan89813 жыл бұрын
மிக்க நன்றிங்க சார்
@msrrao32104 жыл бұрын
A great poet in this world. Now in this present age even though if you want to search through goole it takes Some times, subject to internet to work. But in that Olden days kavingar brain it self more than this present computer. Also Once I heard ( to my memory) the north indian musian used his instrument is SARANGHI in KARNAN. God is great for creating this kind of Nobel person in our country BHARATH.
@saravanankumar1904 жыл бұрын
Thank you Sir
@muthukani15734 жыл бұрын
நன்றி ஐயா
@veerasuresh39074 жыл бұрын
Karakudi 🙏🙏🙏🌹🌹🌹
@rajocod63394 жыл бұрын
அருமை
@RajaRam-ee2je4 жыл бұрын
அத்தனை வண்ணத்தையும் ஒரே மாலையில் சாியாக தருகிற கை வண்ணம் கண்ணதாசன் அவா்களுக்கே உாியது! அத்தனை ராமனையும் கேட்டதும் இந்த ராஜா ராமனுக்கே கண்ணதாசன் என்னும் சீத்தா ராமன் மீது காதல் வந்தது!
@senthilnathmks18524 жыл бұрын
🙏🙏🙏
@pavithramurugan7363 жыл бұрын
Google search sonnathu arumai ,neega pesarathum nalla irukku ketuteee irukalam pola irukku ,perathu solra vitham allam nalla irukku
@anandr78427 ай бұрын
கம்பனின் கவிவண்ணம உன்கவியினில் நான்கண்டேன்
@arulkalyani15933 жыл бұрын
நன்று
@angavairani5384 жыл бұрын
❤❤❤❤❤⚘⚘⚘
@gnanamanig26744 жыл бұрын
சிவா, என்ன பெருமை தெரியுமா? தஞ்சாவூர், ஆட்டுமந்தை தெருவில் நடந்த கூட்டத்தில் *45*வருடங்களுக்கு முன்பு *கவிஞர் *யாம் நின்று இருந்தேன், வாழ்த்துக்கள் *