Рет қаралды 95,558
5.1 sound Quality
Amirthakali Mamangeshwarar | Full Songs | Juke Box | Original Songs |மட்டக்களப்பு | மாமாங்க பிள்ளையார்
colors production and foreign voice tamil Paris, France
Produce by :
colors production
Paris, France
Present by :
foreign voice tamil France
00:00 மாமாங்க ஈஸ்வரனின்
06:41 அமிர்தகழி சிவனுக்கு
11:56 ஆயிரம் நிலவாகி
19:19 கொக்கட்டி குருந்தை மர
23:58 மாமாங்கம் என்னும்
29:22அமிர்த நதியினிலே
36:00 வேண்டும் வரமருளும்
43:38 ஞானத்தை தேடி
50:45 சந்தன சேற்றின்
56:27 குருந்தை மர நிழல்தனிலே
01:01:40 ஆடி அமாவாசையிலே
01:07:57தான்தோன்றியாய்
கிழக்கிலங்கையில் மூர்த்தி ,தலம் ,தீர்த்தம் முதலிய சிறப்புக்களையும் பண்டைய வரலாற்று ஆவணங்களையும் தாங்கி நிட்க்கும் சிவாலயங்களில் மட்டக்களப்பு மாமங்கேச்சரம் பழமையான கோயிலாகும் அமிர்தகழி என்னும் பழம் ஊரில் ஐங்கரன் எனும் திருமேனியில் உள்ளுறை சிவலிங்கமாக உறைந்து மாமாங்க சுயம்பு லிங்க பிள்ளையாராக அருள்பாலித்து வருகின்றார். இராமாயண காலத்தில் இத்தலத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது ராமர் இங்கு அனுமன் கொண்டுவந்த சிவலிங்கத்தை பூசைசெய்து பூசித்த தலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது இங்குள்ள திருக்குளம் மாமாங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது காரணம் காசியிலிருந்து வந்த ஒரு முனிவர் தம் கமண்டலத்தில் கொண்டுவந்த ஒன்பது மங்கைத்தீர்த்தங்களை இத்திருக்குளத்தில் கலந்து நீராடி சிவனை பூசித்ததினால் இது மாமங்கை தீர்த்தம் என்று அழைக்கப்படலாயிற்று. கிழக்கிலே ஆடி மறைமதித்தீர்த்தத்துக்குப் புகழ் பெற்ற சிவத்தலமாகவும் விளங்குகின்றது. மட்டக்களப்பு மான்மியத்தகவல்படி ஆடக சௌந்தரி என்ற இளவரசி தனக்கு இருந்த மூன்று முலைகளையும் தான் கன்னிப்பருவம் அடையாத குறைபாடு உள்ளவளாகவும் இருந்ததனால் பின்பு இக்குளத்தின் மகிமையை அறிந்து நீராடி மூன்றாவது முலைத்தடம் நீங்கப்பெற்றும் கன்னிமையும், பேரழகும் பெற்றும் குளக்கோட்டு மகாராசாவை மணந்தாள் என்று கூறப்படுவதிலுருந்து இத்தீர்த்தத்தின் மகிமை பேசப்படுகின்றது இத்தலத்தை பூர்வீக காலம் வேடர்களே வழிபட்டு வந்தனர். என்பதட்கான கர்ண பரம்பரைக்கதைகளும் இவ்வூரில் கூறப்பட்டு வருகின்றது. ஈழத்தில் எந்த சிவாலயங்களிலும் இல்லாத தலவிருட்சமான குருந்தை மரம் இத்தலத்திலே மட்டுமே தரிசிக்க முடிவது பெரும் பேறாகும். இத்தலத்தின்மீதும் பல பக்திப்புலவர்கள் பதிகம்,கீர்த்தனை,விருத்தம் பாடி அருளி உள்ளனர் தட்க்காலத்தில் தென்னிந்தியப் பாடகர்கள் பாடிய மாமங்கேச்சர பக்திப்பாடல்கள் உலகளாவிய ரீதியில் இத்தலத்தின் பெருமையை பேசவைத்துக்கொண்டிருக்கிறது.
தருகை - சைவப்புலவர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த்
இலங்கை திருநாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களின் மேல் பாடப்பெற்ற பக்த்திப் பாடல்களை மிகத்துல்லியமான ஒலி நயத்துடன் கேட்டு மகிழுங்கள்
Enjoy listening to devotional songs sung on top of the historic temples of Sri Lanka with the most accurate sound.