சகல பாவங்களும் விலக ஓர் இரகசியம்- சிவ மஹா ருத்ர மந்திரம்

  Рет қаралды 4,948

Sivan Raja Yogam

Sivan Raja Yogam

2 жыл бұрын

For more details Call me : 9361942790
“உங்களை உணர, உலகை ஆள;
மனதை வெல்ல, மகிழ்ச்சியாய் வாழ”
"சிவ மகா ருத்ர மந்திர உபதேசம்"
.....
சிவமகா ருத்ர மந்திரத்தின் பலன்கள்;-
இந்த மந்திரத்தை தீட்சையாகப் பெற்றவர்களுக்கு
வெற்றிகரமான வாழ்வைத் தரும்,
தெளிவும், தீர்வும் தரும்
ஆத்மஞானத்தை தரும்,
அகால மரணம் ஏற்படாது,
ஜாதகங்களில் கூறப்படும் கண்டங்கள் பாதிக்காது,
பிரச்சனைகள் ஏற்படுகையில் துணை நின்று காக்கும்,
தெய்வீகம் முன் வந்து காட்சி தரும்,
துஷ்ட சக்திகள் விலகும்
இப்படியாக அனேகப் பலன்களைக் கூறமுடியும்.....
சிவ மகா மந்திர உபதேசம் பெறுங்கள், சாதனை வாழ்க்கையை உருவாக்குங்கள்...
.....
சிவன்ராஜ யோகம் -அறிமுகம்
‘நீ ஆத்மன் என்றால் அதை உணர வேண்டும்; கடவுள் இருக்கிறார் என்றால் தரிசிக்க வேண்டும்’ என்ற நோக்கோடு இயங்கி வரும் வலிமை வாய்ந்த ஒரு யோக வழிமுறைதான் சிவன்ராஜ யோகம்.
சிவன்ராஜ யோகிகளுக்கு நேரடி குரு சதாசிவனின் அவதாரமான ஓம்காரநாதரே ஆவார். ஓம்காரத் தத்துவமே உருவெடுத்து வந்ததால் ஓம்காரநாதர் என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறார்.
அவரால் ஆட்கொள்ளப்பட்ட சுவாமி ரிஷியோகி அவர்கள் அவருடைய ஆணைக்கிணங்க இந்த பூமியில் மாற்றத்தை ஏற்படுத்த அனுப்பப்பட்டுள்ளார்.
குருப்பிரதிநிதியாக இருக்கும் சுவாமி ரிஷியோகி அவர்கள், தனது ஐந்தாவது வயதிலேயே நடராஜரின் தரிசனத்தையும், அதன் பிறகு சுவாமி விவேகானந்தர், பகவான் ராமகிருஷ்ணா பரமஹம்சர் போன்ற மகான்களின் தரிசனத்தை பெற்றார்.
ஏழாவது வயது முதல் சூட்சும லோகங்களை புரிந்துகொள்ளத் தொடங்கினார். நாளின் பெரும்பாலான பகுதிகளை யோகம் செய்வதற்கே செலவழித்த ரிஷியோகியை இளம் வயதில் ஓம்காரநாதர் ஆட்கொண்டார்.
ஹரித்துவாரின் அடர்ந்த வனத்தில் இரண்டரை ஆண்டுகள் கடும் தவம் செய்து தெய்வங்களிடம் வரம் பெற்று, அதன் பிறகு குருவின் ஆணையை ஏற்று தமிழகம் திரும்பினார். சுவாமி ரிஷியோகி அவர்களிடம் தீட்சைப் பெற்ற அநேகர் வாழ்வில் பல மாற்றங்களை அடைந்து உயர்ந்து வருகிறார்கள்.
.........................................
வாழ்வை மாற்றும் மகாமந்திரம்:
சிவன்ராஜ யோகத்தில் சிவமகா ருத்ர மந்திர தீட்சை வழங்கப்பட்டுகிறது. மனிதனுடைய கர்மாதான் அவனவனின் வீழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. வீழ்ச்சிக்கு காரணமான கர்மாவை அழித்து மனிதனின் வளர்ச்சிக்கு துணை செய்வதுதான் - சிவமகா ருத்ர மந்திரம்... எத்தகைய கர்மாவையும் அழித்து சாமான்யனுக்கும் உயர்வை தரும் மந்திரம்தான் - சிவமகா ருத்ர மந்திரம்.
உங்களை உணர்ந்து உலகை ஆள; மனதை வென்று மகிழ்வாய் வாழ; ஞானத்தை அடைந்து இறைவனைச் சேர விருப்பம் கொண்டவரா நீங்கள்? எனில், விதியைக் கூட மாற்றவல்ல, ஈஸ்வர தரிசனத்தை தரவல்ல, இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களாக மறைபொருளாக இருந்த ஒரு ஆன்மீக வழிமுறையை கற்றுக்கொள்ள அழைக்கிறோம்... .
சித்தர்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட, மகா சக்தி பொருந்திய மகத்துவம் வாய்ந்த ருத்ரரின் மந்திரமானது சிவன்ராஜயோகத்தில் தீட்சையாக இப்போது வழங்கப்படுகிறது. இந்த மந்திரம் பூர்வ ஜென்ம கர்மங்களையும், இந்த ஜென்ம கர்மங்களையும் அழிக்கும் திறன் வாய்ந்தது. இந்த மந்திரத்தை தீட்சையாக பெற்றவர் புது மனிதனாக, சாதனை மனிதனாக மாறுவர். தனக்குள் இருக்கும் தெய்வத்தை தரிசிப்பார்கள். தினமும் இதற்கு முப்பது நிமிடம் ஒதுக்கினாலே போதுமானது. இந்த மந்திரத்தை இருபத்தியேழு முறை மட்டும் மனதிற்குள்சொன்னால் போதும், அது யோகநிலையை ஏற்படுத்தும்.
மந்திரத்தின் வரலாறு;-
இந்த மந்திரத்தின் ஆன்மீக சூட்சும வரலாறு, இதை மனிதர்கள் யாரும் பயன்படுத்தியதில்லை என்கிறது. விதிவிலக்காக சில உத்தமர்களுக்கு மட்டும் சித்தர்கள் மனமுவந்து தாமே கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சாமான்ய மனிதர்களுக்கு இந்த மந்திரம் உபதேசிக்கப் படவே இல்லை. இந்நிலையில்தான் எங்களின் குருவான- சதாசிவனின் நேரடி அவதாரமான- ஓம்காரநாதர் இந்த மந்திரத்தை உலக மக்களுக்கு தரும் உத்தரவைக் கொடுத்தார்.
புராணங்களில் இந்த மந்திரம் குறித்து ரகசியமாக கூறப்பட்டுள்ளது.
தசாவதாரங்களில் முக்கியமான மூன்று அவதாரங்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்தியுள்ளன. பகவான் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் - தன்னுடைய தாயைக் கொன்ற தோஷம் நீங்க இந்த மந்திரத்தைத்தான் பயன்படுத்தினார்.
அதே போல பகவான் ஸ்ரீராமரும் ராவணனை, வாலியைக் கொன்ற தோஷம் நீங்க இந்த மந்திரத்தைத்தான் பயன்படுத்தினார். ராமேஸ்வரத்தில் இந்த மந்திரத்தைக் கூறி வழிப்பட்டு தோஷம் நீங்கப்பெற்றார்.
பரமாத்மா கிருஷ்ணர் பாரத போரில் தர்மத்தை நிலைநாட்ட பல சூழ்ச்சிகள் செய்ய வேண்டியிருந்ததால் அதனால் ஏற்பட்ட கர்மாவையும் இந்த மந்திரத்தால்தான் நீக்கினார். அப்படிஅவதாரங்களே பயன்படுத்திய இந்த சிவ மகா ருத்ர மந்திரம் ஹரித்துவாரில் இருந்து வந்த மகா யோகி ரிஷியோகி மூலமாக செவிவழி தீட்சையாக வழங்கப்படவுள்ளது.

Пікірлер
சிவன் கதை  168  Tamil Stories narrated by Mr Tamilan Bala
15:55
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 31 МЛН
1 Hour Version | Nirvana Shatakam (2023) | Vairagya Reprise | #soundsofisha
1:00:54