Рет қаралды 542,765
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
01:04 - விசித்திரமான கோவில் டிசைன்
02:35 - விசித்திரமான கட்டிடக்கலை
03:41 - முதல் மரபணு மாற்றம்
05:22 - யாளியின் வகைகள்
07:26 - அழிந்து போன மிருகத்தின் சிற்பம்
09:27 - மாடர்ன் துவாரபாலகர்
10:28 - பழங்காலத்து Calling Bell?
11:24 - கோவிலின் கருவறை
11:51 - கோவில் கட்டுமானம்
12:40 - இந்த கோவில கட்டினது யாரு?
15:09 - வினோதமான சிற்பங்கள்
16:48 - மர்மமான இடத்தில் கட்டப்பட்ட கோவில்
18:49 - முடிவுரை
Hey guys, ரொம்ப தூரம் தள்ளி ஒரு மலை உச்சில பழங்காலத்து கோவில் இருக்கு, இங்க அவ்வளவா யாரும் சுத்தி பாக்குறதுக்கோ, இல்ல சாமி கும்பிடுறதுக்கோ வர்றதில்ல. ஆனா researchers, historians அப்பறம் archaeologists இவங்க எல்லாரும் இந்த இடத்த ஆராய்ச்சி பண்ணது மட்டுமில்லாம, இந்த இடத்தால அவங்க எல்லாரும் மண்டைய பிச்சுக்குற அளவுக்கு குழம்பி போய் இருக்காங்க. இந்த கோவிலோட origin, இதோட டிசைன் அப்பறம் இதுல மறைஞ்சுருக்கற codes இப்படி இந்த கோவில பத்தின எல்லாமே மர்மமாவே இருக்குது. வாங்க, இந்த extraordinary-ஆன (மர்மமான) கோவில போய் பாக்கலாம். இந்த கோவிலோட பேரு விஜயாலய சோழீஸ்வரம். அங்க மரத்துக்கு பின்னாடி இருக்கற கோவில் கோபுரத்த உங்களால பாக்க முடியுதா? அது தான் நாம தேடி வந்த கோவில், இன்னைக்கு இந்த கோவிலோட பேரு விஜயாலய சோழீஸ்வரம், ஆனா இதோட உண்மையான பேர் என்னனு, experts-லாம் கூட argue பண்ணிட்டு இருக்காங்க.
இதுக்குள்ள நுழையுறப்பவே இதோட design-அ பாத்து எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. இந்த கோவிலுக்கு main entrance எதுவும் இல்லையா? இது ரொம்ப shocking-ஆ இருக்குல்ல? எந்த ஒரு ஹிந்து கோவில வேணா எடுத்துக்கோங்க, அதோட மெயின் entrance, மெயின் கோபுரத்துக்கு straight-ஆ போற மாறி, அந்த கோவிலோட டிசைன் இருக்கும். அங்க ஒரு மெயின் கோபுரம் இருக்கும், அப்பறம் கோவிலோட entrance-ல at least இன்னொரு கோபுரமாவது இருக்கும். ஆனா இந்த டிசைன் complete-ஆ வித்தியாசமா இருக்கு. அதுமட்டுமில்ல, கோவிலுக்கு எதுத்தாப்புல(எதிர்ல) ஒரு நூறு அடி தூரத்துல, பெரிய மலை இருக்கறதையும் நம்மளால பாக்க முடியும்.
இதுக்கு என்ன அர்த்தம்னா, யாருமே இந்த கோவிலுக்கு பெருசா, grand-ஆ எந்த ஒரு கோபுரத்தையும் உருவாக்கல (கட்டல). ஒரு ராஜா, யான மேல ஏறி, இந்த கோவிலுக்குள்ள நுழையுறாருன்னு கற்பனை பண்ணிக்கோங்க. அவரால அத பண்ண முடியாது, அவரு இந்த வழியா வரணும், அப்படி இல்லனா, இந்த வழியா வரணும், அது விசித்திரமா இருக்கும், correct-ஆ? ஆனா இது அத விட விசித்திரமா இருக்கு, பின்னாடி கூட ஒரு சின்ன entrance இருக்கு, ஆனா அது சென்டர்ல இல்ல, ஒரு ஓரமா தான் இருக்கு. ஏன்? கவனமா பாத்தீங்கன்னா, அது ஏன்னு உங்களுக்கே புரியும். Entrance அப்பறம், compound சுவர் இதெல்லாமே வெறும் renovations தான், அதாவது புதிப்பிச்சது தான். அதெல்லாமே original கோவிலோட பகுதிங்க இல்ல. இந்த விஷயம் archeologists அ மொத்தமா குழப்பி விட்டுருச்சு.
இங்க எந்த ஒரு symmetry-அவுமே follow பண்ணல, இதோட டிசைன் வழக்கமான கோவில் டிசைன் மாறி இல்லங்கறத உங்களால இங்க பாக்க முடியும். வெளில இருந்து இந்த domes-அ உங்களால பாக்க முடியும். அதெல்லாம் சிதைஞ்சு போய் இருந்தாலும், அது கோவில் கோபுரம் மாறி தான் இருக்குல்ல? அப்போ நீங்க என்ன நினைப்பீங்க? இதெல்லாம் சாமி சன்னதின்னும், இதுக்குள்ள ஹிந்து சாமி-லாம் இருக்காங்கன்னும் தான் நினைப்பீங்க. ஆனா இந்த structures-க்குள்ள என்ன இருக்கு? நீங்க இந்த சன்னதிக்குள்ள / மண்டபத்துக்குள்ள (structure-க்குள்ள) நுழையுறப்பவே இங்க ஒண்ணுமே இல்ல empty-ஆ தான் இருக்குன்னு நீங்க புரிஞ்சுப்பீங்க.
இங்க சிலை இருந்ததுக்கான எந்த ஒரு அடையாளமோ இல்லனா, தடையமோ இல்ல, இந்த structures-லாம் ஒரு வேள empty-ஆவே இருந்துருக்கலாம். ஏன்? இந்த structures-அ எல்லாம் கட்டுறதுக்கு என்ன காரணமா இருக்கும்? ஏதாவது விசித்திரமான scientific experiments-காக அவங்க இதையெல்லாம் பயன்படுத்திருப்பாங்களா? நான் எதுக்காக ஒரு கோவில்ல இருக்கப்ப scientific experiment-அ பத்தி பேசுறேன்? அதுக்கு காரணம், இங்க இருக்கற சிற்பங்கள் தான். இங்க genetically modified ஆகிருக்கற மிருகங்கள, அதாவது மரபணு மாற்றப்பட்ட மிருகங்கள நீங்க பாக்கலாம். ஒவ்வொரு சிற்பங்கள்ல இருக்கறதையும் நாம யாளின்னு சொல்லுவோம். யாளி அப்படின்னா என்ன அர்த்தம்?
இன்னைக்கு நாம புது species-அ உருவாக்கிருக்கோம். பாதி சிங்கமும், பாதி புலியும் சேந்த அத liger-ன்னு சொல்லுறோம். Lion-ல இருக்கற மொத ரெண்டு எழுத்தையும், Tiger-ல இருக்கற கடைசி மூணு எழுத்தயும் சேத்து experts அத liger-னு சொல்றாங்க. ஆனா இது ஒன்னும் புதுசு இல்ல, நம்ம நாட்டுல இத பழங்காலத்துலயே பண்ணிட்டாங்க. யாளி அப்படின்ற வார்த்த நம்ம பழங்காலத்து தமிழ்ல இருந்து வந்தது தான்னு உங்களுக்கே நல்லா தெரியும். யாளி அப்படின்றது யானையும் புலியும் சேந்த ஒரு hybrid மிருகம். அதனால தான் யானை-ன்ற வார்த்தைல மொத பாதியவும், புலி -ன்ற வார்த்தைல இருக்கற கடைசி பாதியவும் எடுத்து வச்சு இத யாளின்னு சொல்றாங்க.
நெறய மிருகங்களோட DNA-வ சேத்து, நெறய புது புது species-அ உருவாக்குறதுக்கு, இந்த யாளி genetic hybrid ஒரு model-ஆ கூட இருக்கலாம். இப்போ இங்க கேள்வி என்னனா, இது வெறும் கற்பனையா? இல்ல, பழங்காலத்து தமிழர்கள் (இந்தியர்கள்) இந்த DNA-வ வச்சு, இந்த மிருகங்களோட hybrids-அ experiment பண்ணிருப்பாங்களா?
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil