Рет қаралды 160,976
A Humble Offering by Keerthana Vengatesan.
Let us get soaked by Eternal Music..
Like || Share || Comment || Love
If you like the song, please Remember to SUBSCRIBE to the channel.
Like and Share with your Family and Friends.
Make sure you Subscribe and Never miss a Video.
KZfaq Link: www.youtube.com/@KEERTHANAMUS...
Join whatsapp Community of Keerthana Music World
chat.whatsapp.com/G2Jc9fx5aI6...
Follow us on Instagram:
/ __keerthana_vengatesan
Follow us on Facebook Page:
/ keerthanavengatesan1
photo credits:
pngtree.com/so/shiva-day'/shiva day png from pngtree.com
Inspired by Thillai Vaazh anthanar youtube channel.
தேவாரம் - 3 | Thevaram songs | Sundarar | மின்னுமா மேகங்கள் | Minnuma Megangal | Lordshiva
சுந்தரர் தேவாரம் திருமுறை 7 /
பதிகம் ; மின்னுமா மேகங்கள்
திருத்துருத்தியும் வேள்விக்குடியும்
காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்கே முன் காமக் கோட்டத்திற் சென்று, தருமத்தை வளர்க்கின்ற பெருங்கருணையையுடைய உலகமாதாவாகிய காமாக்ஷியம்மையை வணங்கித் துதித்துக்கொண்டு, திருவேகம்பத்தை அடைந்து ஏகாம்பரநாத சுவாமியை வணங்கி, “ஆதிகாலத்திலே திருப்பாற்கடலினின்று எழுந்து தேவர்களை வருத்தத் தொடங்கிய ஆலகாலவிஷத்தைத் திருமிடற்றிலடைத்து அவர்கள் அமுதுண்ண அருள்செய்த கருணாநிதியே! சிறியேன் செய்த பிழையைப் பொறுத்துச் சிறியேனுக்குத் தேவரீரைத் தரிசிக்கும் பொருட்டுக் கண்ணைத் தந்தருளும்” என்று பிரார்த்தித்தார். அப்பொழுது கடவுள் இடக்கண்ணை மாத்திரம் கொடுத்து, தமது திருக்கோலத்தைக் காட்ட; சுந்தரமூர்த்தி நாயனார் கண்டு பரவசமாகி அடியற்ற மரம்போல வீழ்ந்து எழுந்து, “ஆலந்தானுகந் தமுதுசெய்தானை” என்னுந் திருப்பதிகத்தைப் பாடி, அந்த ஸ்தலத்திலே சில நாள் இருந்து, பின் அந்த ஸ்தலத்தை நீங்கி, வழியிலே “அந்தியுநண் பகலும்” என்றெடுத்து “தென்றிரு வாரூர்புக் கெந்தைபிரானாரை யென்றுகொலெய்துவதே” என்னுந் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு, தொண்டை மண்டலத்தைக் கடந்து, திருவாமாத்தூரிற் சென்று பதிகம் பாடி, திருவரத்துறையை வணங்கிப் பதிகம் பாடிக்கொண்டு, சோழமண்டலத்தை அடைந்தார்.
அந்நாட்டிலே திருவாவடுதுறையிற் சேர்ந்து சுவாமியை வணங்கி ஒரு கண்ணில்லாமையைக் குறித்து மனங்கவன்று, “கங்கைவார்சடையார்” என்னுந் திருப்பதிகம் பாடி, திருத்துருத்திக்குப் போய்ச்சுவாமியை வணங்கி “அடியேனுடைய சரீரத்தின் மேலே பொருந்திய நோயை நீக்கியருளல் வேண்டும்” என்று பிரார்த்தித்தார். அதற்குக் கடவுள் “நீ இக்கோயிலுக்கு வட புறத்தில் இருக்கின்ற குளத்திலே ஸ்நானம் பண்ணுவாயாகில், இந்நோய் நீங்கிவிடும்” என்று திருவாய்மலர்ந்தருளினார். அது கேட்டு சுந்தரமூர்த்தி நாயனார் கைதொழுது புறப்பட்டு அந்தத்தீர்த்தத்தை அடைந்து, சுவாமியை வணங்கிக் கொண்டு அவருடைய திருவடிகளிலே அன்போடு பதிந்த இருதயத்துடனே அத்தீர்த்தத்திலே ஸ்நானம் பண்ணினார். உடனே அவருடைய திருமேனி நோய் நீங்கிப் பிரகாசம் அடைந்தது. அவர், கண்டவர்கள் அதிசயிக்கும்படி கரையேறி, வஸ்திரந் தரித்துக் கொண்டு, திருக்கோயிலிலே போய், சுவாமியை வணங்கி, “மின்னுமாமேகங்கள்” என்னுந் திருக்கோயிலிலே பிரவேசித்து வணங்கிக் திருப்பதிகம் பாடினார்.
சுந்தரர் பெருமான் பாடிய இப்பதிகப்பாடல்களை நாமும் பாடினால் நம் உடல் பிணிகளான, சொரி, படை, அம்மை, மற்றும் தொழு நோய் நீங்கப் பெற்று உடல் புத்துயிர் பெறலாம்,
#Thevaram,
#sundararthevaram,
#மின்னுமாமேகங்கள்,
#தேவாரம்,
#minnumamegangal,
#thiruvannamalaitemple,
#thiruvasagam,
#thiruvannamalai,