Рет қаралды 42,330
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
போலீசார் 10 தனிப்படை அமைத்து துப்பு துலக்கினர்.
முதல்கட்டமாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்றார்.
ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்குடி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.#ArmStrong #Chennai #MurderCase #Stalin