Рет қаралды 257
**ஸ்ரீ நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
**
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை ஸ்ரீ பாபநாச நாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விஷூ திருவிழா நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான தொடக்க விழா ஏப்ரல் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் 8 ஆம் திருநாளுக்கான மண்டகப்படி திருவிழா பட்டங்கட்டியார் சமுதாயம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவானது விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் திருக்கோவிலில் வைத்து மாலை 3.00 மணியளவில்
ஸ்ரீ நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீநடராஜருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற்று சாமகானப்பிரியன் பேரிகைக்குழு சிவபூத கண திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பெரிய சப்பரத்தில் ஸ்ரீநடராஜர் புறப்பட்டு விக்கிரமசிங்கபுரம் ரத வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணியளவில் அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் சென்றடைந்தது. இவ்விழாவிற்கு சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டங்கட்டியார் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.