Рет қаралды 14,836
ஊரை ஏமாற்றும் போலி உபன்யாசகர்களும் ஆய்வாளர்களும்
---------------------------------------------------------------------------------------------
இன்றைய காலத்தில் ஆளாளுக்கு தன்னைத்தானே உபன்யாசகர்கள் என்றும் ஆய்வாளர்கள் என்றும் முன்னிருத்திக் கொண்டு, தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்ள ஶ்ரீராமயணத்தையும் மஹாபாரதத்தையும் மேற்கோள் காட்டி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் வயிறு வளர்ப்பது பற்றி கவலையில்லை. ஆனால் தான் ஏதோ ஆராய்ச்சி செய்து ராமர் பிறந்த தேதியை சரியாக கணித்துவிட்டது போலே துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜெயஶ்ரீ சாரநாதன் ஆகியோர் யுட்யூப் யுட்யூப் சேனலாக சென்று, main stream mediaக்களில் தான் ஏதோ வசிஷ்டரை விட மேலானவர்கள் போல காட்டிக் கொண்டிருப்பது கண்டிக்கப்படுவேண்டும். கண்டிக்கப்படுகிறது.
இவர்கள் ஊரை ஏமாற்ற சொல்வது "நாங்கள் சொல்வதை மறுத்து எந்த ஆசார்யரோ உபன்யாச்கரோ பண்டிதரோ ஏதும் சொல்லாததால் நாங்கள் சொன்னது சரி" என்பது. இவர்களை ஒரு பொருட்டாகவே ஆசார்யர்களும் உபன்யாசகர்களும் பண்டிதர்களும் மதிப்பதில்லை என்பதால்தான் இவர்களுக்கு மறுப்பு சொல்வதே ஒரு பாவச் செயல் என்று கருதுகின்றனர்.
இருப்பினும் தர்மத்தை நிலைநாட்ட நாம் செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும். ஆசார்யர்களின் அபிப்ராயத்தை தெரிந்து கொள்ள என்னுடைய ஆசார்யனான ஶ்ரீமான் உ.வே. திருப்புல்லாணி சுந்தரராஜன் ஸ்வாமி அவர்களிடம் இது குறித்து கேட்டு அதை பதிவு செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
போலிகள் என்னை வேண்டுமென்றாலும் வசவு பாடலாம். நான் சொல்வதெல்லாம் ஆசார்யர்களிடம் கற்றதை கிளிப்பிள்ளை போல திரும்பச் சொல்வதும் அதை அனுஷ்டிப்பதும் மட்டுமே! என்னை இகழ்ந்தவர்கள் ஆசார்யர்களை இகழ துணிவர்களா?!!
நினைவில் இருக்கட்டும். ஊடகங்களில் வருவதெல்லாம் உண்மையாகிவிடாது. ஒரு ஆசார்யனிடம் அடிபணிந்து கற்பதே கல்வி. அதுவே உண்மை. அதுவே ஜ்ஞானம். மற்றவை எல்லாம் வெத்துவேட்டு!!
எப்பொழிதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!