Рет қаралды 614,421
#orukadhasolattuma #vellorefort #velloreforthistory #education #vellore #velloreyoutubers #fort #interestingfacts #amazingfacts
வேலூர்க் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது.
கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது.[1] மேலும் வேலூர் அரசு அருங்காட்சியகம் '1999' ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது.விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..