வாழ்க்கைள் முதல்முறை இப்பாடலை கேட்டால் மனம் உருகி விடும் 😢😢😢
@sivapanneerselvam22020 күн бұрын
போன ஜென்ம புண்ணியம் இந்த பாடல் நான் கேட்டேன்
@hariharasubramanian92142 ай бұрын
எப்போதும் தங்கள் குரல் தேனினும் இனிமை
@kamakshigowrishankar93543 жыл бұрын
மிக்க நன்று ஐயா நன்றி எங்களை சுந்தர ர் காலத்துக்கு அழைத்து சென்று கைலாய மலைக்கு போனது போல் உணர்கிறோம்
@velusamy47892 жыл бұрын
மத்தயானை அருளி சுந்தரர் சுவாமிகளை அனைத்துக்கொண்ட ஒப்பிலா உத்தமனைப்புகழ்ந்த இந்த பாமாலையை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுமகிழலாம்
@drrms54 ай бұрын
Ayya has made us dissolve in this pathigam.. 🙏
@jayaprakashsubramanian29794 ай бұрын
Excellent song and excellent singing. This song gives immense faith on Lord Shiva that we can also get His bliss. Heart melting song. Om Namah Sivaya.
@sridhatha33293 жыл бұрын
ஆனந்தனம்.....ஆகிரி ராகம்...சம்பந்த குருக்குள் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்....
@bhuvanathirukrishna28225 ай бұрын
நீங்களும் சுந்தரர் தேவாரமுற்றோதல் குழுவில் சேர்ந்து பாடுங்கள் .
@savithrichandrasekaran239611 ай бұрын
Manama oruguduai😢😢😢
@t.rajasekarant.rajasekaran7350 Жыл бұрын
மிக்க நன்றிங்க அய்யா ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.
@revathyramasubramanianreva1391 Жыл бұрын
தேன் சொட்டும் இனிய குரல் அப்பா உங்களுக்கு.
@arunpandi78882 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அற்புதம் அய்யா போற்றி ஓம் நமசிவாய அய்யா 🙏
@jegadeswarieswari6352 жыл бұрын
மெய் மறந்து விட்டேன் ஐயா.மிக மிக அருமையான பாடல், குரல் மற்றும் இசை. சிவ சிவ🙏
@jayasreejayachandran2989 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🙏 மிக்க நன்றி, சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏
@bostonbala2 жыл бұрын
சுவாமி.. உங்கள் பாட்டை கேட்காத நாள் இல்லை. உங்கள் அத்துனை பாடலும் உச்சரிப்பும் அற்புதம்🙏🏼 தங்களை ஒருதடவையேனும் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற சிவனிடம் வேண்டுகிறேன்🙏🏼
@javanpannadi2 жыл бұрын
ஐயா வணக்கம்.. இந்த பாடலை கேட்ட முதலிருந்து எப்படியோ நாளைக்கு ஒரு முறையாவது கேட்டுவிடுகிறேன்.!!! ௐ நமசிவாய
ஏழாம் திருமுறை அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅஞ்சைக்களத்திலிருந்து பாடல் எண் : 01 தானெனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 02 ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ ஊனை உயிர் வெருட்டி ஒள்ளி யானை நினைத்திருந்தேன் வானை மதித்த அமரர் வலஞ்செய்து எனையேற வைக்க ஆனை அருள் புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே. பாடல் எண் : 03 மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை அந்தர மால்விசும்பில் அழகானை அருள்புரிந்த துந்தரமோ நெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 04 வாழ்வை உகந்த நெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப் பட்டு ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 05 மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 06 அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை என் மனமே வைகி வான நன்னாடர் முன்னே துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரமல்லதொரு வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 07 நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே அலை கடலால் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச உலையணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 08 அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் விரவிய வேதஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப வரமலி வாணன் வந்து வழி தந்து எனக்கு ஏறுவதோர் சிரமலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 09 இந்திரன் மால் பிரமன் எழிலார் மிகு தேவரெல்லாம் வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர் என எம்பெருமான் நம்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 10 ஊழிதொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையைச் சூழிசையின் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன ஏழிசை இன்தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே.