Рет қаралды 3,461
வெறும் குப்பை தானே என நாம் தெருவோரம் விட்டு செல்பவை தான் நாளடைவில் காற்று மாசு, நில, நீர் மாசுக்கு அடிப்படை காரணமாகின்றது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் குப்பையை கட்டுப்படுத்த மறுசுழற்சி செய்யக்கூடிய ஈரக்கழிவுகள் அல்லாத குப்பையை சேகரிக்கும் பணியை விருதுநகரில் RJ குப்பை வங்கி செய்து வருகிறது.
இதன் ஊழியர்கள் வீடுகள் தோறும் சென்று ஈரக்கழிவுகள் அல்லாத 56 வகையான குப்பையை தரம் பிரித்து வாங்குகின்றனர். ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் என 300 கிலோ குப்பை சேரும் போது அதற்கான தொகையை குப்பையை தரம்பிரித்து வழங்கிய வீட்டினர் வங்கி கணக்கில் வரவு வைக்கின்றனர்.
விருதுநகரை 6 பகுதிகளாக பிரித்து குப்பையை சேகரிக்கின்றனர். இது விருதுநகர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குப்பை வங்கி திட்டத்தில் இணை 87542 04222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விழிப்புணர்வும் செய்து வருகின்றனர்.#விருதுநகர் #Virudhunagar