Рет қаралды 15,181
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் அன்பான காலை வணக்கம்.
நேற்று 25.07.2021 (ஞாயிற்றுக்கிழமை) மிகவும் மகிழ்ச்சியான நாள். அந்த மகிழ்வான தருணத்தை உங்களோட பகிர்வதில் பெரும்மகிழ்ச்சி.
நமது சேனலில் ஆரம்பம் முதல் subscriber ஆக இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரத்தில் உள்ள வடகாடு கிராமத்தை சார்ந்த சிறந்த வாஸ்து நிபுணர் ஐயா திரு குணசேகர் அவர்கள் என்னுடைய அழைப்பின் பேரில் ஜெயங்கொண்டம் வந்து இரண்டு வீடுகளுக்கு வாஸ்து ஆலோசனைகள் வழங்கினார்.
ஐயா அவர்கள் கடந்த 30 வருடங்களாக வாஸ்து சாஸ்திரம் மிக சிறப்பாக பார்த்து வருகிறார்.
ஐயா அவர்களின் வருகை எனக்கு மிகவும் மன மகிழ்ச்சியாக அமைந்தது.
ஐயா அவர்களோடு எங்கள் மண்ணின் பெருமை மற்றும் அடையாள சின்னமான கங்கை கொண்ட சோழபுரம் கோவில், கோவிலுக்கு எதிரே உள்ள அகழ்வாராய்ச்சி மியூசியம் மற்றும் மாமன்னன் ராஜேந்திர சோழன் அவர்களின் கங்காபுரி அரண்மனை இருந்த இடத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி (தற்பொழுது மாளிகை மேடு என அழைக்கப்படுகிறது) போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை சுற்றி பார்த்தோம்.
என் அழைப்பின் பேரில் நேரில் வந்து பெரும் மகிழ்ச்சியை வழங்கிய ஐயா அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
ஐயா அவர்களுக்காக இந்த வீடியோவை தயார் செய்து இருக்கிறேன்.
எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..